இரட்டை இலையை மீட்போம்: புதிய அமைப்பைத் தொடங்கி தீபா சூளுரை

இரட்டை இலையை மீட்போம்: புதிய அமைப்பைத் தொடங்கி தீபா சூளுரை

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கினார். இரட்டை இலையை மீட்போம் என்று தீபா சூளுரைத்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிடுவேன். எந்த நிலையிலும் பின்வாங்கமாட்டேன் என்றும் தீபா கூறியுள்ளார். சென்னை தி.நகரில் இன்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கி வைத்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேசியதாவது: ”ஜெயலலிதாவின் பணிகளை அரசியல் வாரிசாகத் தொடர்வேன். ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அரசியல் பயண முடிவை அறிவிப்பதில் பெருமையாக உள்ளது. இரட்டை இலையை மீட்பதே எங்கள் குறிக்கோள். தற்போதைய அரசியல் சூழலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. ஒரு துரோகக் கூட்டத்தின் பிடியில் தமிழக மக்கள் உள்ளனர்….

Read More

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் நடக்க வாய்ப்பு: பிரேமலதா விஜயகாந்த் கருத்து

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் நடக்க வாய்ப்பு: பிரேமலதா விஜயகாந்த் கருத்து

தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது என தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 6 மாதமாக பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் நிலையான முதல்வரோ, ஆளுநரோ, உள்ளாட்சிப் பிரதிநிதிகளோ இல்லை. சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி வருகின்றன. ஆட்சியைக் கவிழ்க்க தினமும் ஒரு நாடகம் நடத்தப்படுகிறது. தற்போது நடக்கும் நிகழ்வுகள் மூலம் நல்ல தலைவர் யார் என்பதை மக்கள் உணர்ந்துகொள்வார்கள். மக்கள் கருத்தைக் கேட்டு, ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய…

Read More

நடிகர் தனுஷ் பிப். 28-ல் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நடிகர் தனுஷ் பிப். 28-ல் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரும் மேலூர் தம்பதி தாக்கல் செய்துள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அங்க, மச்ச அடையாளங்கள் உடலில் உள்ளதா என்பதை சரிபார்க்க நடிகர் தனுஷ் பிப். 28-ல் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் (60), இவரது மனைவி மீனாட்சி (55). இவர்கள் நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கொண்டாடி வருகின்றனர். தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க தனுஷூக்கு உத்தரவிடக்கோரி இருவரும் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து…

Read More

இந்த வார (02/24/2017) இ-பேப்பர்

இந்த வார (02/24/2017) இ-பேப்பர்

இந்த வார (02/24/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

பெண்களுக்கு 50% மானியத்தில் ஸ்கூட்டர், 500 டாஸ்மாக் கடை மூடல்: முதல்வர் பழனிசாமியின் முதல் 5 நடவடிக்கைகள்

பெண்களுக்கு 50% மானியத்தில் ஸ்கூட்டர், 500 டாஸ்மாக் கடை மூடல்: முதல்வர் பழனிசாமியின் முதல் 5 நடவடிக்கைகள்

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி முறைப்படி (திங்கள்கிழமை) பகல் 12.30 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் அவரது நாற்காலியில் அமர்ந்து பணிகளைத் துவக்கினார் பழனிசாமி. அவரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் 500 டாஸ்மாக் கடைகள் மூடல், அம்மா இரு சக்கர வாகனம் திட்டம், மகப்பேறு நிதியுதவி உயர்வு, மீனவர்களுக்கு வீட்டு வசதி திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு ஆகிய 5 அறிவிப்புகள் கொண்ட கோப்புகளில் கையெழுத்திட்டார். தேர்தல் வாக்குறுதியின்படி இத்திட்டங்களை நிறைவேற்றுவதாக முதல்வர் தெரிவித்தார். இந்த 5 அறிவிப்புகள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள…

Read More

இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு

இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு

தனது இயக்கப் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வன்மத்தைக் காட்டுகிறது என கமல் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக அரசியலில் நிலவி வரும் சூழல் குறித்து உடனடியாக கருத்துகளைத் தெரிவித்து வருபவர் கமல். அரசியலில் நிலவிவுள்ள மாற்றத்துக்கு ஆளுநரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆதங்கத்தை அனுப்புமாறு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் கமல். இதற்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிமுக கட்சியினரை கடுமையாக சாடினார். இது தொடர்பாக, கமல் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் “இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின்…

Read More

‘‘பாவனா கொடுமை எனக்கு நேர்ந்தால் காமவெறியர்களை கொலை செய்து இருப்பேன்’’ நடிகை ரகுல்பிரீத் சிங் ஆவேசம்

‘‘பாவனா கொடுமை எனக்கு நேர்ந்தால் காமவெறியர்களை கொலை செய்து இருப்பேன்’’ நடிகை ரகுல்பிரீத் சிங் ஆவேசம்

‘‘நடிகை பாவனாவைப்போல் நான் பாலியல் தொல்லையை அனுபவிக்க நேர்ந்து இருந்தால், செக்ஸ் வெறியர்களை கொலை செய்து இருப்பேன்’’ என்று நடிகை ரகுல்பிரீத் சிங் கூறினார். ரகுல்பிரீத் சிங் அதிர்ச்சி தடையற தாக்க, என்னமோ ஏதோ, புத்தகம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘‘நடிகை பாவனாவைப்போல் நான் பாலியல் தொல்லையை அனுபவிக்க நேர்ந்து இருந்தால், செக்ஸ் வெறியர்களை கொலை செய்து இருப்பேன்’’ என்று நடிகை ரகுல்பிரீத் சிங் கூறினார். தடையற தாக்க, என்னமோ ஏதோ, புத்தகம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த ரகுல்பிரீத் சிங், கேரளாவில் நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் தொல்லைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:– ‘‘நடிகை பாவனாவுக்கு ஓடும் காரில் நடந்துள்ள…

Read More

நாகார்ஜுன் இளைய மகன் திருமணம் ரத்தானதால் நடிகை சமந்தா அதிர்ச்சி

நாகார்ஜுன் இளைய மகன் திருமணம் ரத்தானதால் நடிகை சமந்தா அதிர்ச்சி

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனுக்கு நாக சைதன்யா, அகில் என்று இரண்டு மகன்கள். இவர்கள் இருவருமே தெலுங்கில் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அகிலுக்கும் ஐதராபாத்தில் தொழில் அதிபராக இருக்கும் ஜி.வி.கே. ரெட்டியின் பேத்தியும் பே‌ஷன் டிசைனருமான ஸ்ரேயா பூபாலுக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலை இரு வீட்டு பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு திருமண நிச்சயதார்த்தத்தையும் முடித்தார்கள். இத்தாலியில் திருமணத்தை நடத்த முடிவு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 700 பேரை அழைத்து செல்வதற்காக விமான டிக்கெட்டுகள், இத்தாலியில் நட்சத்திர ஓட்டலில் அறைகள் போன்றவற்றை முன்பதிவு செய்தனர். இந்த நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலிக்கும் தகவல் வெளியாகி அவர்கள் திருமண நிச்சயதார்த்தத்தையும் தடபுடலாக நடத்தி முடித்தார்கள். முதலில் அகில் திருமணத்தை…

Read More

சைவ உணவே எனது ஆரோக்கியத்திற்கு காரணம்: நடிகை சுருதி ஹாசன்

சைவ உணவே எனது ஆரோக்கியத்திற்கு காரணம்: நடிகை சுருதி ஹாசன்

நான் 4 மாதங்களாக சைவ உணவு சாப்பிட்டு வருகிறேன் என நடிகை சுருதி ஹாசன் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை சுருதி ஹாசன். தமிழில் 7ஆம் அறிவு, 3, பூஜை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  இவர் நடிப்பு தவிர்த்து பாடகி மற்றும் இசையமைப்பாளர் போன்ற பன்முக தன்மைகளை கொண்டவர். அவர் தனது டுவிட்டரில், கடந்த 4 மாதங்களாக சைவ உணவையே எடுத்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், இது எனது சிறந்த முடிவுகளில் ஒன்று.  சைவ உணவினை தழுவியது எனது ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.  அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். சைவ உணவுடன்,…

Read More

காரைக்கால், நெடுவாசலில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு: புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

காரைக்கால், நெடுவாசலில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு: புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

காரைக்கால் மற்றும் நெடுவாசலில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோ கார்பன் வாயு) எடுக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலைத் தொடர்ந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு காரைக்கால் மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காரைக்கால் பிராந்தியத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு அறிவிப்பு வரவில்லை. கடிதமும் வரவில்லை. இது மத்திய…

Read More
1 381 382 383 384 385 425