தனுஷ் என்னை தாக்கவில்லை: பாடகி சுசித்ரா புது விளக்கம்

தனுஷ் என்னை தாக்கவில்லை: பாடகி சுசித்ரா புது விளக்கம்

தனுஷ் என்னை தாக்கவில்லை, எனது கை ஒரு குழுவால் தாக்கப்பட்டது என பாடகி சுசித்ரா புது விளக்கமளித்துள்ளார். பிப்ரவரி 20-ம் தேதி ட்விட்டர் பக்கத்தில் தனது காயம்பட்ட கையின் புகைப்படத்தைப் பகிர்ந்த சுசித்ரா, “இது தனுஷ் குழுவின் மோசமான கையாளால் ஆன காயம். மன்னித்துவிடுங்கள். நீங்கள் தகுதி இழந்துவிட்டீர்கள்” என குறிப்பிட்டிருந்தார். மேலும், “இது சுச்சிதான், நான் மீண்டும் வந்துவிட்டேன். பாதுகாப்பாக உள்ளேன். தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டைப் பற்றி அனைவரிடமும் கூற தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டார். சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார், சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் ”சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் இன்று மீட்கப்பட்டது….

Read More

நெடுவாசல் போராட்டத்துக்கு துணை நிற்போம்: தென்னிந்திய நடிகர் சங்கம்

நெடுவாசல் போராட்டத்துக்கு துணை நிற்போம்: தென்னிந்திய நடிகர் சங்கம்

நெடுவாசலில் களங்மிறங்கி போராடும் மக்களின் உணர்வுகளுக்கு என்றும் துணை நிற்போம் என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வடகாடு, நெடுவாசல், கோட்டைக்காடு, கருக்காகுறிச்சி, வாணக்கன்காடு ஆகிய இடங்களில் ஆழ் துளைக் கிணறு அமைத்து எரி பொருள் சோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க பிப்.15-ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. இயற்கை எரிவாயு எடுக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 13-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள…

Read More

படங்கள் தொடர் வெற்றியால் ஏழுமலையானை தரிசித்தேன்: நடிகை கீர்த்தி சுரேஷ்

படங்கள் தொடர் வெற்றியால் ஏழுமலையானை தரிசித்தேன்: நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் சனிக்கிழமை இரவு அவரது குடும்பதினருடன் திருப்பதி வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கிய அவர் நேற்று ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்கள் வழங்கினர். கோவிலில் நடிகை கீர்த்தி சுரேசை கண்டு இளைஞர்கள், பெண்கள் குரல் எழுப்பியடி கையசைத்தனர். அவர்களை பார்த்து சிரித்தபடி கீர்த்தி சுரேஷ் சென்றார். அவர் கூறுகையில்:- தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். சமீபத்தில் நான் நடித்து வெளிவந்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. இதற்கான நேர்த்தி கடனாக ஏழுமலையானை தரிசனம் செய்தேன். தரிசனம் நன்றாக இருந்தது என்றார்.

Read More

ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டாரா?- அடுக்கடுக்காக சந்தேகங்களை எழுப்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டாரா?- அடுக்கடுக்காக சந்தேகங்களை எழுப்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருப்பதாக கூறியுள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், இது தொடர்பாக அரசும், மருத்துவமனையும் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலிருந்து இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார் பி.எச்.பாண்டியன். இந்த சந்திப்பின்போது அவருடன், அவரது மகன் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள் உடனிருந்தனர். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பி.எச்.பாண்டியன், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாக அப்போலோ டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருக்கிறது. அவர் கீழே தள்ளிவிடப்பட்டாரா என்பதை மருத்துவமனை தரப்பு விளக்க வேண்டும். ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம்…

Read More

சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்நாட்டு முனையம் வருகை பகுதி 2-வது நுழைவு வாயில் அருகே கார்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும் ‘போர்டிகோ’ பகுதியில் நேற்று ஒரு சூட்கேஸ் கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. இதனை மத்திய தொழிற்படை போலீசார் மற்றும் விமான நிலைய போலீசார் கண்டனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த சூட்கேசை யாரும் சொந்தம் கொண்டாட வரவில்லை. இதனால் அந்த மர்ம சூட்கேசின் உள்ளே வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை உடனடியாக இதுபற்றி வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மோப்ப நாயுடன் சம்பவ…

Read More

ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்துக்குப் பயனளிக்கக் கூடியதே: மத்திய அரசு

ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்துக்குப் பயனளிக்கக் கூடியதே: மத்திய அரசு

புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இத்திட்டத்தினால் தமிழ்நாடு பயனடையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நெடுவாசல் வயல்களிலிருந்து ஹைட்ரோகார்பன் உற்பத்தித் திட்டத்தினால் தமிழ்நாட்டுக்கு பொருளாதார பயன்கள் கிடைக்கும், விவசாயிகள் அச்சம் தேவையற்றது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹைட்ரோகார்பன் உற்பத்தித் திட்டத்தினால் வேளாண்மை, மண்ணின் தன்மை, நிலத்தடி நீர் நச்சாதல் உள்ளிட்ட பயங்கர சுற்றுச்சூழல் விளைவுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து அங்கு போராட்டம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை நெடுவாசல், புதுச்சேரியில் உள்ள காரைக்கால் ஆகியவற்றில் ஹைட்ரோகார்பன் உற்பத்தித் திட்டத்தின் மூலம் ரூ.300 கோடி வருவாய்…

Read More

ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் இல்லை: சட்டப்பேரவை கூடும்போது பல அதிசயங்கள் நடக்கும் – மாஃபா பாண்டியராஜன் சூசகம்

ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் இல்லை: சட்டப்பேரவை கூடும்போது பல அதிசயங்கள் நடக்கும் – மாஃபா பாண்டியராஜன் சூசகம்

‘ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. விரைவில் சட்டப்பேரவை கூடும்போது பல அதிசயங்கள் நடக்கும்’ என்று முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மாஃபா க.பாண்டியராஜன் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ‘அம்மா கல்வியகம்’ என்ற இணையதளத்தை தனது வீட்டில் நேற்று தொடங்கி வைத் தார். அதன்பின் நிருபர்களிடம் பாண்டியராஜன் கூறியதாவது: நாட்டிலேயே முதல்முறை யாக, இலவசக் கல்வி இணைய தளத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்துள்ளார். மற்ற இணையதள சேவை நிறுவனங் கள் பயிற்சி அளிப்பதற்கு பதிவு செய்யவே ரூ.1,000 வரை பெறு கின்றன. ஆனால், இந்தக் கட்டணம்கூட ‘அம்மா கல்வியகம்’ இணையதளத்தில் இல்லை. அதிமுக பொதுச்செயலாள ராக சசிகலா தேர்வு செய்யப்பட் டதை எதிர்த்து,…

Read More

எரிவாயு திட்டத்தை திமுகதான் செயல்படுத்தியது: வைகோ குற்றச்சாட்டு

எரிவாயு திட்டத்தை திமுகதான் செயல்படுத்தியது: வைகோ குற்றச்சாட்டு

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: தமிழகத்தில் மீத்தேன் திட் டத்தை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டதால், அத்திட்டம் ரத்து செய்யப்பட்டது தற்போது அதே திட்டத்தை ஹைட்ரோ கார்பன் என பெயர் மாற்றம் செய்து நெடுவாசலில் எரிவாயு எடுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இத் திட்டத்தை கொண்டு வந்திருந் தாலும், அதை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு கையெழுத் திட்டது திமுகதான். தற்போது எரிவாயு எடுக்க முயற்சி மேற்கொள்ளும் பாஜக அரசை அதிமுக அரசு கண்டிக்கவில்லை. நைஜீரியாவில் எரிவாயு திட்டம் செயல்படுத்தி 6 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த சாகுபடியில்…

Read More

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னையில் ஓபிஎஸ் அணி மார்ச் 8-ல் உண்ணாவிரதம்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னையில் ஓபிஎஸ் அணி மார்ச் 8-ல் உண்ணாவிரதம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் உண்ணா விரத போராட்டம் நடத்தப்படுகிறது. கடந்த பிப்ரவரி 5-ம் தேதி முதல் வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். 7-ம் தேதி ஜெயலலிதா சமாதியில், தியானம் மேற்கொண்ட அவர், சசிகலா தரப்பினர் கட்டாயப்படுத்தியதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார். அதன் பிறகு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து, அதிமுகவில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர் பாக விசாரணை நடத்தக் கோரி,…

Read More

விழுப்புரத்தில் தொண்டர்களுடன் விஜயகாந்த் சந்திப்பு

விழுப்புரத்தில் தொண்டர்களுடன் விஜயகாந்த் சந்திப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சியில் பங்கேற்று தொண்டர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். அந்த வகையில் நேற்று விழுப்புரத்தில் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். காலை 10 மணி முதல் பிற்பகல் 3.15 மணிவரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரூ.50 செலுத்தி அனுமதி சீட்டு பெற்ற பின்பே அரங்கில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் விஜயகாந்த் மைக் பிடித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
1 379 380 381 382 383 425