உ.பி.யில் நான் செய்த பணிகளை பட்டியலிட்டுவிட்டேன்; 3 ஆண்டு ஆட்சியில் நீங்கள் செய்தது என்ன? – பிரதமர் மோடிக்கு முதல்வர் அகிலேஷ் சவால்
‘‘உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு நான் செய்த பணிகளை பட்டியலிடுகிறேன். உங்களது 3 ஆண்டு கால ஆட்சியில் நீங்கள் செய்த பணிகளை சொல்ல முடியுமா?’’ என்று பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் சவால் விடுத்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. கடைசி மற்றும் 7-வது கட்ட தேர்தல் வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பதோதி நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி சார்பில் முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: உத்தரப் பிரதேச மாநிலத்தில் எனது அரசு செய்த 10 பணிகளை பட்டியலிடுகிறேன். அதுபோல் 10 பணிகளை அவரால் (பிரதமர் மோடி) பட்டியலிட…
Read More









