டுவிட்டரில் ஆபாச படங்கள் பரவுவதை தடுக்க வேண்டும் நடிகர்கள் ஆர்யா, விவேக் வற்புறுத்தல்

டுவிட்டரில் ஆபாச படங்கள் பரவுவதை தடுக்க வேண்டும் நடிகர்கள் ஆர்யா, விவேக் வற்புறுத்தல்

சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களும் படுக்கை அறை வீடியோக்களும், மது அருந்தி நடனம் ஆடும் படங்களும் வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், பாபி சிம்ஹா, நடிகைகள் திரிஷா, ஹன்சிகா, ஆன்ட்ரியா, அனுயா, சஞ்சிதா ஷெட்டி உள்பட பலரது பெயர்களை பதிவு செய்து இந்த படங்கள் வெளிவந்தன. அமலாபால், பார்வதி நாயர் உள்பட மேலும் சில நடிகைகள் படங்கள் தொடர்ந்து வெளிவரும் என்றும் அறிவிப்பு வந்தது. இதனால் நடிகர்-நடிகைகள் மத்தியில் பதற்றமும் பீதியும் ஏற்பட்டது. சுசித்ரா தனது டுவிட்டர் கணக்கை ஹேக் செய்து மர்ம நபர்கள் இந்த படங்களை வெளியிட்டு இருப்பதாக குற்றம்சாட்டி டுவிட்டரை…

Read More

‘குற்றம் 23’-க்கு ரஜினி பாராட்டு: நெகிழ்ச்சியில் அருண் விஜய்

‘குற்றம் 23’-க்கு ரஜினி பாராட்டு: நெகிழ்ச்சியில் அருண் விஜய்

‘குற்றம் 23’ பார்த்துவிட்டு ரஜினி வெகுவாக பாராட்டியிருப்பதால், அருண் விஜய் மிகுந்த நெகிழ்ச்சியில் உள்ளார். அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மஹிமா, அபிநயா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘குற்றம் 23’. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தை இந்தர் குமார் தயாரித்துள்ளார். மார்ச் 2-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்களும் இப்படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். இந்நிலையில், அருண் விஜய்க்கு தொலைபேசி வாயிலாக தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரஜினி. படம் பார்த்துவிட்டு அழைப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய வீட்டில் பிரத்யேகமாக ‘குற்றம் 23’ படத்தைப் பார்த்துள்ளார்….

Read More

மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் 3-வது நாளாக போராட்டம்: மெழுகுவத்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி

மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் 3-வது நாளாக போராட்டம்: மெழுகுவத்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி

இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் நேற்று 3-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் மீனவர்கள் மெழுகுவத்தி ஏந்தி பிரிட்ஜோவுக்கு அஞ்சலி செலுத்தி னர். கச்சத்தீவு அருகே திங்கள் கிழமை இரவு ராமேசுவரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ(21) உயிரிழந்தார். ஜெரோன்(27) என்ற மீனவர் காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமேசுவரம் அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனைக் குப் பின்னர் பிரிட்ஜோவின் உடலை மருத்துவமனை அதிகாரிகள் ஒப்படைக்க முயன்றபோது பெற் றோரும், உறவினரும் உடலை வாங்க மறுத்தனர். இலங்கை…

Read More

அம்மா கல்வியகத்தில் இணைந்த மாணவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது: ஓபிஎஸ்-க்கு குவியும் பாராட்டு

அம்மா கல்வியகத்தில் இணைந்த மாணவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது: ஓபிஎஸ்-க்கு குவியும் பாராட்டு

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தொடங்கி வைத்த அம்மா கல்வியகம் இணையதளத்தில் இணைந்த மாணவர்கள், இளைஞர்கள் எண்ணிக்கை 9 நாட்களில் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சசிகலாவின் தலைமையை எதிர்த்து, அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ‘அம்மா கல்வியகம்’ (www.ammakalviyagam.in) எனும் இலவச ஆன்லைன் கல்வி இணையதளத்தை கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கிவைத்தார். இந்த இணையதளம் ஜெயலலிதாவின் ஒப்புதலுடன், அதிமுகவின் அப்போதைய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆஸ்பயர் சுவாமிநாதனால் உருவாக்கப் பட்டது. ஓராண்டுக்குப் பிறகு, இணையதள வடிவமைப்பு முடிந்து, ஓ.பன்னீர் செல்வத்தால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த இணையதளத்தில், பிளஸ் 2 மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்களுக்கும், ஐஐடி நுழைவுத் தேர்வுக்கும்…

Read More

ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்ய சசிகலா தலைமையில் அதிமுக ஆட்சிமன்ற குழு: டிடிவி தினகரன் அறிவிப்பு

ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்ய சசிகலா தலைமையில் அதிமுக ஆட்சிமன்ற குழு: டிடிவி தினகரன் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை முடிவு செய்ய, சசி கலாவின் தலைமையில் ஆட்சி மன்றக் குழு அமைக்கப்பட்டுள்ள தாக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு, சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி காலியாக இருப் பதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி யில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதிமுகவில் பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் தனித் தனியாக செயல்பட்டு வரும் நிலையில், இடைத்தேர்தல் அறி விப்பு வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்த துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்,…

Read More

ட்விட்டரில் சர்ச்சை கருத்து: சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய மீனவர்கள் கோரிக்கை

ட்விட்டரில் சர்ச்சை கருத்து: சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய மீனவர்கள் கோரிக்கை

மீனவர் பிரிட்ஜோவை இலங்கைக் கடற்படை படுகொலை செய்தது தொடர்பாக ட்விட்டரில் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்தது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில், ”தமிழகத்தில் உள்ள பொறுக்கிகள் அனைவரும் சாக்கடைக்குள் ஒளிந்து கொள்வதற்கு பதிலாக கட்டுமரத்தில் சென்று இலங்கை கடற்படையுடன் சண்டையிடுங்கள் என தெரிவித்துள்ளார். இது குறித்து ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவப் பிரநிதி ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது, ”தமிழக மீனவர்களை சிறைப்பிடிக்கவும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றவும் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியதே பாஜகவின்…

Read More

ஜெயலலிதா மரணத்தில் உண்மை வெளிவந்தால் முதல் குற்றவாளி விஜய பாஸ்கர்தான்: ஓபிஎஸ்

ஜெயலலிதா மரணத்தில் உண்மை வெளிவந்தால் முதல் குற்றவாளி விஜய பாஸ்கர்தான்: ஓபிஎஸ்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மை வெளிவந்தால் முதல் குற்றவாளி விஜயபாஸ்கர்தான் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. முடிவில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: ”ஒரு தனிப்பட்ட குடும்பம் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்யும் அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதை மாற்றத்தான் இந்த தர்மயுத்தம். ஜெயலலிதா மரணமடைந்த நாளில், மாலை 4.30 மணிக்கே இறந்ததாக, வீட்டில் இருந்த எனக்கு 6.30 மணிக்கு தெரிவிக்கப்பட்டது. நான் மருத்துவமனை சென்று கேட்ட போது, உறுதி செய்யப்படவில்லை என கூறி, நேரம் கடத்தி 11.30 மணிக்கு…

Read More

அருணாச்சலேஸ்வரர் கோயில் பக்தர்களுக்காக 545 மரங்களை வெட்டி தங்கும் விடுதி கட்டுவதா?- வைகோ கண்டனம்

அருணாச்சலேஸ்வரர் கோயில் பக்தர்களுக்காக 545 மரங்களை வெட்டி தங்கும் விடுதி கட்டுவதா?- வைகோ கண்டனம்

அருணாச்சலேஸ்வரர் கோயில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்காக 545 மரங்களை வெட்டி அகற்ற அனுமதி அளித்திருப்பது கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆணாயப் பிறந்தான் கிராம எல்லையில் உள்ள சோணநதிதோப்பில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி அரசு ஆணை பிறப்பித்து உள்ளார். அதற்காக அங்கே உள்ள 545 மரங்களை வெட்டி அகற்றவும் அனுமதி அளித்துள்ளார். பக்தர்கள் தங்கும் விடுதி அமைப்பதற்கு ஏற்ற வேறு பல இடங்கள் இருக்கும்போது, கிரிவலப் பாதையில் உள்ள பசுஞ்சோலையான சோணநதித் தோப்பு…

Read More

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்கள் மார்ச் 23-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற மார்ச் 27-ம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24-ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் மாதம் 15-ம் தேதி நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் யாருமின்றி காலியாக உள்ளது.

Read More

சிறந்ததோர் சமயச் சொற்பொழிவு ஸகாபுறோ நகரில் மார்ச் 12ம்திகதி…. ஆன்மிகச் சிந்தனைகளை கேட்டு அனுபவியுங்கள்

சிறந்ததோர் சமயச் சொற்பொழிவு ஸகாபுறோ நகரில் மார்ச் 12ம்திகதி…. ஆன்மிகச் சிந்தனைகளை கேட்டு அனுபவியுங்கள்

                                  அத்துடன்; மார்ச் 25ம் திகதி உங்கள் அபிமான கனடா உதயனின் வருடாந்த சர்வதேச விருது விழா.தவறாமல் கலந்து கொண்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள். கலைநிகழ்ச்சிகள் மற்றும் இராப்;போசன விருந்தும்… அனுமதிச் சீட்டுக்களுக்கு 416 732 1608 இன்று என்னை கனவு சுமந்து சென்றது. இடது வலது என நடந்தும், பறந்தும், கிழக்கு மேற்காக, முன்னர் பேசிய இலக்கியமேடை, குந்தியிருந்து நண்பர்களுடன் பேசிய பூங்கா, புதுமனை புகுவிழா மடலுடன், திருமண அழைப்பிதலையும் தந்து சென்ற எங்கள் பழைய வீடு.. தூரப் பயணக் களைப்புடன்…

Read More
1 376 377 378 379 380 425