அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சித்தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அ.தி.மு.க. சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் 26-3-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 18 , 19-ந்தேதிகளில் மாலை 3 மணி வரை நடக்கிறது. 20-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. 21-ந்தேதி (செவ்வாய்கிழமை)…

Read More

தினகரனுடன் இணைந்து செயல்படுவேன், விரைவில் சசிகலாவை சந்திப்பேன் – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தினகரனுடன் இணைந்து செயல்படுவேன், விரைவில் சசிகலாவை சந்திப்பேன் – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட உறுப்பினர் அட்டையை அதிமுக நிர்வாகிகள் வழங்கி வருகிறார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் உட்பட தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஈபிஎஸ்சுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் ஈபிஎஸ்சை விமர்சிக்கும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தி நின்றனர். மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாடு பட்ஜெட்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியான பின்னர் எனது கருத்தை தெரிவிக்கிறேன். வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என…

Read More

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு.!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு.!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று சந்தித்து பேசினார். இவருடன் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம் உடனிருந்தார். 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் 20-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முதல்-அமைச்சருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More

பொதுத் துறை வங்கிகளின் உயர் பதவிகளில் உயர் சாதியினர் ஆதிக்கம் ஏன்?

பொதுத் துறை வங்கிகளின் உயர் பதவிகளில் உயர் சாதியினர் ஆதிக்கம் ஏன்?

இந்தியாவில் உள்ள வங்கிகளில் மேல்நிலை பதவிகளில் உள்ளவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர் 2-3 சதவீதம் பேரே இந்தப் பதவிகளில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன? அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான ஜி. கருணாநிதி இந்திய வங்கிகளில் உயர் நிலை பதவிகளில் இருப்போர் சமூக ரீதியாக எந்தெந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலைக் கேட்டுப் பெற்றிருக்கிறார். அந்தத் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், தலைமைப் பொது மேலாளர், பொது மேலாளர் ஆகிய பதவிகளில் இருப்பவர்கள் 88 முதல் 92 சதவீதம் வரை பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றே தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட…

Read More

சாங் சாங்-லிங்: அதானிக்கும் அவருக்கு என்ன தொடர்ப

சாங் சாங்-லிங்: அதானிக்கும் அவருக்கு என்ன தொடர்ப

ஹிண்டன்பர்க் அறிக்கையில் மொத்தம் மூன்று முறை, சாங் சுங்-லிங் பற்றி சொல்லப்பட்டுள்ளது. சாங் சுங்-லிங்கை முதன்முறையாகக் குறிப்பிட்டு, மொரீஷியஸில் க்ரோமோர் என்ற ரகசிய நிறுவனம் இருப்பதாக அறிக்கை கூறுகிறது, இந்த நிறுவனத்தை அதானி பவர், 42.3 கோடி டாலர் கொடுத்து வாங்கியது. இந்த நிறுவனத்தை சாங் சுங்-லிங் நடத்தி வருகிறார். சிங்கப்பூரில் உள்ள கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியின் உள்ளூர் முகவரியை சுங்-லிங் தனது முகவரியாக கொடுத்துள்ளார். சுங்-லிங்குக்கும் அதானி குழுமத்துக்கும் நீண்டகால தொடர்பு இருப்பதாகவும், அவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானிக்கு நெருக்கமானவர் என்றும் ஹிண்டன்பர்க் அறிக்கை கூறுகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையில் இந்த சீன நபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றாவது இடம்…

Read More

வடமாநில தொழிலாளர் பற்றிய பேச்சு: பிரசாந்த் கிஷோர் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் – நடந்தது என்ன?

வடமாநில தொழிலாளர் பற்றிய பேச்சு: பிரசாந்த் கிஷோர் ட்வீட்டும் சீமான் மீதான வழக்கும் – நடந்தது என்ன?

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசிய பேச்சு தொடர்பாக ஏற்கெனவே வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், வட மாநிலத் தொழிலாளர் குறித்த அவரது கருத்துகளுக்காக கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. வட தொழிலாளர்கள் தொடர்பான சீமான் பேச்சை பகிர்ந்து அது வெறுப்பை வளர்க்கும் இத்தகைய பேச்சு மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மார்ச் 10-ம் தேதி ஒரு ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் அருந்ததியர் குறித்து சீமான் பேசிய பேச்சு தொடர்பான வழக்கில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுவதாகவும் கொலை செய்யப்படுவதாகவும் சமூக…

Read More

தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது

தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது

தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், தெலுங்கில் உருவான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு ஆகியன, திரையுலகில் மிக உயரிய விருதான ஆஸ்கரை வென்றுள்ளன. அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு கோலாகலமாக ஆஸ்கர் விருது நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட “எலிபென்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியிருக்கிறது. `எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் கதை,…

Read More

கடலூரில் நாளை கடையடைப்புக்கு பா.ம.க. அழைப்பு: போலீசார் குவிப்பு

கடலூரில் நாளை கடையடைப்புக்கு பா.ம.க. அழைப்பு: போலீசார் குவிப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தி இருந்தது. ஆனால் கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். அப்போது சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக என்.எல்.சி. உறுதி அளித்ததன் பேரில் நடந்த பேச்சுவார்த்தையில் சிலருக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை கையகப்படுத்தி இருந்த வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் தோண்டி எல்லை வரையறை செய்தனர். மேலும் விவசாய நிலத்தை நவீன எந்திரங்கள் உதவியுடன்…

Read More

பி.வி.சிந்து – உலகத் தரவரிசைக்குள் நுழைந்து வரலாறு படைத்த இந்திய வீராங்கனை

பி.வி.சிந்து – உலகத் தரவரிசைக்குள் நுழைந்து வரலாறு படைத்த இந்திய வீராங்கனை

பேட்மிண்டன் வீராங்கனை புசர்லா வேங்கட சிந்து (பி.வி.சிந்து), ஒலிம்பிக்கில் இரண்டு தனிநபர் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண். டோக்கியோவில் வெண்கலப் பதக்கம் வென்றது, அவருடைய இரண்டாவது ஒலிம்பி வெற்றி. அவர் 2016இல் ரியோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பி.வி.சிந்து 2022 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றார். முன்னதாக, அவர் 2021இல் உலக பேட்மின்டன் கூட்டமைப்பின் சர்வதேச டூர் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். 2019ல் சிந்து உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியராக வரலாறு படைத்தார். அவர் செப்டம்பர் 2021இல் தனது 17 வயதில் உலகத் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்தார். பொது மக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில்,…

Read More

அதிமுக, பாஜக உரசல் தமிழ்நாட்டில் கூட்டணிக் கணக்குகளை தலைகீழாகப் புரட்டிப் போடுமா?

அதிமுக, பாஜக உரசல் தமிழ்நாட்டில் கூட்டணிக் கணக்குகளை தலைகீழாகப் புரட்டிப் போடுமா?

அதிமுக – பாஜக உறவில் ஏற்பட்டுள்ள உரசல், விரிசலாகி நிரந்தரப் பிரிவாகுமா? அல்லது கடந்து செல்லும் மேகம்போல இந்த கசப்புணர்வு காலவோட்டத்தில் கரைந்து போய், பரஸ்பர தேவைகள் காரணமாக மீண்டும் ஒட்டிக்கொள்ளுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் சூடாக விவாதிக்கப்படும் பொருளாக இருக்கிறது. ஏற்கெனவே, பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது வலுவான குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார். பெண் நிர்வாகியுடனான மோசமான உரையாடல் கசிவு வெளியான நிலையில், அந்தக் கட்சியின் ஓபிசி அணி மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து விலகினார். ஆனால் அவரைப் பாதுகாக்க முயன்றதாக அண்ணாமலை மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அந்தக் கட்சியின் மாநில தகவல்…

Read More
1 43 44 45 46 47 425