‘அதிமுக தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால்….’ – பாஜகவுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை…!

‘அதிமுக தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால்….’ – பாஜகவுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை…!

அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் கடந்த 5-ம் தேதி பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து பாஜக நிர்வாகி திலீப் கண்ணனும் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர். இந்தசூழ்நிலையில், அண்ணாமலை நேற்று தனது பேட்டியில், பாஜகவினரை இழுத்தால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு திராவிட கட்சிகளின் நிலை உள்ளது. திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை…

Read More

அடுத்தடுத்து பதவி விலகல்…! பாஜக ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா…!

அடுத்தடுத்து பதவி விலகல்…! பாஜக ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா…!

பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார், அந்தக் கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “என்னால் முடிந்தவரை பல சங்கடங்களைக் கடந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பயணித்தேன்! உண்மையாக, நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடைபெறுகிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அண்ணாமலையை கடுமையாக தாக்கி இருந்தார். சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் விலகல் அறிவிப்பிற்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, “அன்பு சகோதரர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்” என்று…

Read More

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை – அமைச்சர் கணேசன்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை – அமைச்சர் கணேசன்

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வந்து அதில் பல மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள். அதேபோல், மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது…

Read More

ஓபிஎஸ்-ஆ? ஈபிஎஸ்-ஆ? : அதிமுக பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு

ஓபிஎஸ்-ஆ? ஈபிஎஸ்-ஆ? : அதிமுக பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு

எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் பொதுக்குழு நிறைவடைந்தது. பின்னர், ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி…

Read More

இந்தியா – சிங்கப்பூர் இடையே யுபிஐ பண பரிவர்த்தனை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இந்தியா – சிங்கப்பூர் இடையே யுபிஐ பண பரிவர்த்தனை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே யுபிஐ-பேநவ் (UPI-PayNow) இணையவழி பண பரிவர்த்தனை இணைப்பை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குனர் ரவி மேனன் ஆகியோர் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தனர். பின்னர் யுபிஐ-பேநவ் இணைப்பு குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:- இணைய வழி பண பறிமாற்றமான யுபிஐ-பேநவ் இணைப்பு நமது புலம்பெயர்ந்தோர், தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பயனளிக்கும். இன்றைய காலகட்டத்தில்,…

Read More

மாநில அரசுகள் ஒப்பு கொண்டால், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும் – நிர்மலா சீதாராமன்

மாநில அரசுகள் ஒப்பு கொண்டால், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும் – நிர்மலா சீதாராமன்

பிஎச்டிசிசிஐ என்ற தொழில் அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது: 2023 – 24 பட்ஜெட்டில் பொது மூலதன செலவு 33 சதவீதம் அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.தொடர்ச்சியாக 3 – 4 ஆண்டுகளாக, பொது மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பட்ஜெட் தாக்கலின் போதும் அதனை மனதில் வைத்துள்ளோம். பொது மூலதன செலவுக்கு இந்த பட்ஜெட்டில் உண்மையான கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. அனைத்து மாநில அரசுகள் ஒப்பு கொண்டால், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும். எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்துகிறோம். ஒரே நாடு…

Read More

தமிழ்நாட்டில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

அமெரிக்காவில் இருந்த வந்த ஒருவர் உள்பட தமிழ்நாட்டில் 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என 7 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, வேலூர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 35 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இன்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read More

ஈரோடு தேர்தலை இந்தியாவே கவனித்து கொண்டிருக்கிறது..! அதிமுக அமோக வெற்றி பெறும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஈரோடு தேர்தலை இந்தியாவே கவனித்து கொண்டிருக்கிறது..! அதிமுக அமோக வெற்றி பெறும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் தென்னரசு அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது , ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும். இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை கவனித்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை திமுகவின் மாவட்ட செயலாளர் போன்று செயல்பட்டு வருகின்றனர். காட்சியும், ஆட்சியும் மாறும். அதன் எதிர்வினை சந்திப்பீர்கள் என்று கூறினார். எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி செலவு செய்வது நியாயம் தானா ? ரூ.80 கோடிக்கு பேனா சின்னம் வைப்பதற்கு பதில் ரூ. 2 கோடிக்கு வைக்கலாமே…

Read More

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வந்த பணம் ; கணவர்களை விட்டுவிட்டு காதலர்களுடன் சென்ற மனைவிகள் – திடுக்கிடும் சம்பவம்…!

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வந்த பணம் ; கணவர்களை விட்டுவிட்டு காதலர்களுடன் சென்ற மனைவிகள் – திடுக்கிடும் சம்பவம்…!

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) கிராமப்புறங்களில் ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொண்டுக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தின்படி வீடு கட்ட 2 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும். கட்டப்படும் வீட்டின் ஒவ்வொரு நிலையிலும் 2 லட்ச ரூபாய் மொத்தம் 4 தவணையாக தலா 50 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, மானியமாக குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் வீடு கட்ட 2 லட்ச ரூபாய் தலா 50 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 4 தவணையாக மத்திய அரசு செலுத்தும். இந்நிலையில், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வந்த பணத்தை எடுத்துக்கொண்டு கணவர்களை…

Read More

ஈபிஎஸ் உடன் ஓபிஎஸ் சந்திப்பா? – எதுவும் நடக்கலாம் – கு.ப.கிருஷ்ணன் பதில்

ஈபிஎஸ் உடன் ஓபிஎஸ் சந்திப்பா? – எதுவும் நடக்கலாம் – கு.ப.கிருஷ்ணன் பதில்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பிலும் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டதால் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்தது. இந்த போட்டா போட்டி அறிவிப்பால் ‘இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவானது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய 2 பேரும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே சமாதான தூதுவர்கள் போன்று செயல்பட்டனர். அவர்கள், அ.தி.மு.க. இந்த இடைத்தேர்தலை ஒற்றுமையாக சந்திக்க வேண்டும். ‘இரட்டை இலை’ சின்னத்துக்கு சிக்கல் வந்து விடக்கூடாது என்று தங்களது விருப்பத்தை 2 பேரிடம் தெரிவித்தனர். இந்த சமாதான பேச்சுவார்த்தைக்கு மத்தியில், ‘இரட்டை இலை’ சின்னம் கேட்டு…

Read More
1 44 45 46 47 48 425