தைவானில் அமெரிக்க சபாநாயகர்: சினமடைந்த சீன ராணுவம் பயிற்சி

தைவானில் அமெரிக்க சபாநாயகர்: சினமடைந்த சீன ராணுவம் பயிற்சி

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, சீனாவின் பலத்த எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு சென்றுள்ளார். இதனால், கோபமடைந்த சீனா, அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியதுடன், தைவானை சுற்றி ராணுவ பயிற்சியில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது. கடந்த 1949ல் நடந்த உள்நாட்டு போரைத் தொடர்ந்து, சீனாவும், தைவானும் பிரிந்தன. ஆனால் தன்னாட்சி பெற்ற நாடான தைவானை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனிடையே அமெரிக்க பார்லி சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் செல்லவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. பெலோசியின் பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எதிர்ப்புகளை மீறி அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஸ்பெர்19 விமானத்தில் சபாநாயகர் பெலோசி தைவான் சென்றடைந்தார். 25 ஆண்டுகளில் தைவான் சென்றுள்ள அமெரிக்க…

Read More

உலகம் செய்தி தங்கும் விடுதியில் தீ விபத்து ரஷ்யாவில் 8 பேர் உயிரிழப்பு

உலகம் செய்தி  தங்கும் விடுதியில் தீ விபத்து ரஷ்யாவில் 8 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின், மாஸ்கோ நகரில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள், மற்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்களுக்காக ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இதில் ஒரு விடுதியில் நேற்று திடீரென தீ விபத்துஏற்பட்டது. இங்கிருந்த 200க்கும் மேற்பட்டோர் தப்பியோடினர். ஆனால், முதல் மாடியில் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறக்க முடியாததால், எட்டு பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்; காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து, மாஸ்கோவின் பாதுகாப்பு குழுத் தலைவர் கிரில் ஷிடோவ் கூறுகையில், ”விடுதியில் பாதுகாப்பு விதிமீறல்கள் இருப்பது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தேன். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த…

Read More

அமெரிக்க அதிபர் பைடனுக்கு புற்றுநோயா?: வெள்ளை மாளிகை விளக்கம்

அமெரிக்க அதிபர் பைடனுக்கு புற்றுநோயா?: வெள்ளை மாளிகை விளக்கம்

தனக்கு புற்றுநோய் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு விளக்கமளித்துள்ள வெள்ளை மாளிகை, பைடன் பதவியேற்பதற்கு முன்னர் தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து குணமடைந்தார் என விளக்கம் அளித்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறும் மாசுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதத்தின் போது, டெலவரில் தனது குழந்தை பருவம் குறித்து ஜோ பைடன் பேசினர். அப்போது பைடன் பேசும் போது, டெலவரில் உள்ள என்னுடைய குழந்தை பருவ வீட்டிற்கு அருகே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தன. அதில் இருந்து வெளியேறும் மாசுவால் ஏற்படும் தீங்கை நம்மால் என்னவென்று யூகிக்க முடியாது. அதன் தீங்கைப்பற்றி அறியாமலேயே…

Read More

மிரட்டுது ‘மார்க்பர்க்’ வைரஸ்

மிரட்டுது ‘மார்க்பர்க்’ வைரஸ்

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘மார்க்பர்க்’ வைரஸ் வவ்வால் போன்ற விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்காவிலுள்ள கானாவில் இருவர் ‘மார்க்பர்க்’ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்திருப்பதாகவும், இதன் பாதிப்பு எபோலா வைரசை போன்று கடுமையாக இருக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: கானாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இறந்த இருவருக்கும் மார்க்பர்க் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் செனகலில் உள்ள ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்ய வேண்டியுள்ளது. இவர்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தன. இதன் இறப்பு விகிதம் 24 சதவீதத்தில் இருந்து 88 சதவீதமாக மாறியுள்ளது.இந்த வைரஸ் வவ்வால் போன்ற விலங்குகள் மூலம்…

Read More

சுட்டெரிக்கும் வெயில்: ‘வீட்டிற்கு வெளியே வர வேண்டாம்’என பிரிட்டன் அரசு எச்சரிக்கை

சுட்டெரிக்கும் வெயில்: ‘வீட்டிற்கு வெளியே வர வேண்டாம்’என பிரிட்டன் அரசு எச்சரிக்கை

‘பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் நிலவுவதால் மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்’ என, அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் நேற்று வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் நிலவியது. இதையடுத்து பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு அமைப்பு தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்தது. கடும் வெப்பத்தால் இறக்கும் அபாயம் உள்ளதாக, வானிலை மையம் முதன் முறையாக சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தலைமை அதிகாரி பென்னி என்டர்ஸ்பை கூறியதாவது: கடந்த, 2019ல் பிரிட்டனில், அதிகப்பட்சமாக, 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. இது, தற்போது 40 டிகிரி செல்சியஸ் அளவை நெருங்கியுள்ளது….

Read More

‘செஸ் ஒலிம்பியாட்’ பிரதமருக்கு முதல்வர் அழைப்பு

‘செஸ் ஒலிம்பியாட்’ பிரதமருக்கு முதல்வர் அழைப்பு

சென்னை-சென்னையில் வரும் 28ம் தேதி, ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி துவக்க விழாவுக்கு வரும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக, முதல்வர் ஸ்டாலின், சென்னை காவேரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடல் நலம் விசாரித்தார். அவருக்கு, முதல்வர் நன்றி கூறியதுடன், தான் நன்கு குணமடைந்து வருவதாக தெரிவித்தார். மேலும், ‘சென்னையில் வரும் 28ம் தேதி துவங்க உள்ள, உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க, நேரில் வர இருந்தேன். ‘தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால், எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன்,…

Read More

ஆக., 1 முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு

ஆக., 1 முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு

வாக்காளர் பட்டியலுடன், ஆதார் விபரங்களை இணைக்கும் பணியை, ஆக., 1 முதல் துவங்குவதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திற்கு தொழில் நிமித்தமாக, பிற மாநில மற்றும் மாவட்டங்களைச்சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர், சொந்த ஊரில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதேநேரம், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளிலும், பெயர்களை சேர்த்துள்ளனர். தேர்தல் நிலவரத்தை பொறுத்து, எங்கு வேண்டுமானாலும் ஓட்டளிக்கலாம் என்ற மனநிலையில் உள்ளனர்.பொது வினியோக திட்டத்தில், ஆதார் விபரத்தை இணைத்த பின் போலி ரேஷன் கார்டுகள் கண்டறிந்து நீக்கப்பட்டன. ஒருநபர், ஒரு குடும்ப கார்டில் இடம் பெற்றிருந்தால், வேறு எங்குமே பெயர் சேர்க்க முடியாத அளவுக்கு, கட்டமைப்பு…

Read More

மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியை தாண்டியது

மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியை தாண்டியது

கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், மேட்டூர் அணை நீர் மட்டம் 102 அடியை தாண்டிது. கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான மைசூர், மாண்டியா, குடகு, ஹாசன், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கர்நாடகாவிலுள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளுக்கு அதிக நீர்வரத்தால், அணை பாதுகாப்பு கருதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 72 ஆயிரம் கன அடி நேற்று(ஜூலை 11), கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 38 ஆயிரம் கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 72 ஆயிரத்து, 964 கன அடி என, மொத்தம், ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து, 964 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த…

Read More

ஆகாசா ஏர் விமான நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி

ஆகாசா ஏர் விமான நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி

பிரபல தொழிலதிபர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் ஆகாசா ஏர் விமானம் நிறுவனத்திற்கு, வர்த்தக ரீதியான விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பிரபல தொழிலதிபர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, இவர் இந்திய பங்குசந்தை முதலீட்டாளர்களில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அது மட்டுமின்றி மூன்றுக்கும் மேற்பட்ட வங்களின் பங்குதாரராகி உள்ளார். இந்நிலையில் ஆகாசா ஏர் விமான நிறுவனம், வர்த்தக ரீதியான விமான போக்குவரத்திற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. அதற்கான ஒப்புதலை விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தனது டுவிட்டரில் கூறியுள்ளார். விரைவில் பயணிகள் விமான சேவைக்கும் அனுமதி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

Read More

பட்டுக்கூடு கொள்முதல் மையத்துக்கு கூடுகள்… வரத்து அதிகரிப்பு! ரீலர்கள் வருகையால் விலை சரிவும் தவிர்ப்பு

பட்டுக்கூடு கொள்முதல் மையத்துக்கு கூடுகள்… வரத்து அதிகரிப்பு! ரீலர்கள் வருகையால் விலை சரிவும் தவிர்ப்பு

உடுமலை : பிற மாவட்ட ரீலர்கள், உடுமலை அரசு கொள்முதல் மையத்தில், பட்டுக்கூடுகளை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுவதால், வரத்தும், விலையும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிகரித்து வருகிறது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெண் பட்டுக்கூடு உற்பத்தி தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது. இப்பகுதியில், 2,778 ஏக்கர் பரப்பளவில், மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு, 1,221 பட்டு புழு வளர்ப்பு மனைகள் வாயிலாக, மாதந்தோறும், பல டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.பட்டு புழு வளர்ப்பு மனைகளில், 21 நாட்களில், புழு வளர்ந்து, கூடு கட்டி, விற்பனைக்கு தயாராகும். குறிப்பாக, வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், மாநில அளவில், உடுமலை பகுதி முன்னிலை வகிக்கிறது. உடுமலை, பழநி, பல்லடம், பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உட்பட…

Read More
1 59 60 61 62 63 425