விண்ணுக்கு ராக்கெட் அனுப்பி தென் கொரியா சாதனை

விண்ணுக்கு ராக்கெட் அனுப்பி தென் கொரியா சாதனை

சியோல்-உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பி, தென் கொரியா சாதனை படைத்துள்ளது. கிழக்காசிய நாடுகளான தென் கொரியா – வட கொரியா இடையே எப்போதும் பனிப்போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி, வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த வாரம், அந்நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதனால், வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை விதிக்க, ஐ.நா., சபையிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில், வடகொரியாவின் ராணுவ நடவடிக்கைகள், நிலைகளை தெரிந்து கொள்ள, தென் கொரியாவிடம் ராணுவ உளவு செயற்கைக்கோள்கள் இல்லை. அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை நம்பியே உள்ளது. எனவே,…

Read More

‘பி ஏ.2’: அமெரிக்காவில் மைக்ரானின் துணை வைரஸ் ஆதிக்கம்..!!

‘பி ஏ.2’: அமெரிக்காவில் மைக்ரானின் துணை வைரஸ் ஆதிக்கம்..!!

வாஷிங்டன், அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரசின் துணை வைரசான பிஏ.2 ஆதிக்கம் செலுத்துகிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. அறிவித்துள்ளது. ஒமைக்ரானை விட இந்த துணை வைரஸ் வேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. குறிப்பாக பிஏ.2 வைரஸ், அசல் பிஏ.1 வைரசை விட 30 சதவீதம் அதிகமாக பரவும். கடந்த 26-ந் தேதியுடன் முடிந்த ஒரு வார காலத்தில், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 54.9 சதவீதத்தினர் பிஏ.2 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்துக்கு முன்பாக இது 39 சதவீதமாக இருந்தது. அதற்கு 2 வாரங்களுக்கு முன்பு 27.8 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

உக்ரைன் அமைதி குழுவுக்கு விஷம் வைத்ததா ரஷ்யா?

உக்ரைன் அமைதி குழுவுக்கு விஷம் வைத்ததா ரஷ்யா?

ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதி பேச்சில் ஈடுபட்ட ரஷ்ய தொழிலதிபர் மற்றும் உக்ரைன் குழுவை சேர்ந்த இருவருக்கு விஷம் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில், இரு நாட்டு பிரதிநிதிகள் குழு இடையே அமைதி பேச்சு நடந்து வருகிறது. பல்வேறு சுற்று பேச்சில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.உக்ரைன் அரசின் வேண்டுகோளை ஏற்று, ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிக் இந்த அமைதிப் பேச்சில் பங்கேற்று உக்ரைனுக்கு ஆதரவாக பேசி வந்தார். இந்நிலையில், தொழிலதிபர் ரோமன் மற்றும் உக்ரைன் அமைதி குழுவை சேர்ந்த இரண்டு பிரதிநிதிகளுக்கு கடந்த மாதம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அமெரிக்காவின்,…

Read More

பாக்., பிரதமர் பதவி தப்பிக்குமா? பார்லி.,யில் இன்று ஓட்டெடுப்பு!

பாக்., பிரதமர் பதவி தப்பிக்குமா? பார்லி.,யில் இன்று ஓட்டெடுப்பு!

எதிர்க்கட்சிகளுடன், கூட்டணிக் கட்சியினர் மற்றும் சொந்தக் கட்சியினரும் போர்க் கொடி துாக்கியுள்ளதால், இன்று நடக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், பதவியை தக்க வைப்பாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பி.டி.ஐ., எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பிரதமராக உள்ளார். கடந்த 2018ல் நடந்த தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால், அவர் பிரதமரானார். இந்நிலையில், கடும் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் தள்ளாடுகிறது. இந்த நிதி நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு பிரதமர் இம்ரான் கானின் செயல்பாடுகளே காரணம் என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன….

Read More

எதிர்ப்போரை நசுக்கும் ரஷ்ய அதிபர் புடின்

எதிர்ப்போரை நசுக்கும் ரஷ்ய அதிபர் புடின்

நியூயார்க்,:உக்ரைன் போரை விமர்சிக்கும் மக்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரும்புக் கரத்துடன் நசுக்கி வருவதாக அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது. கடந்த, 2011 முதல் புடினை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியை, இரு ஆண்டுகளுக்கு முன் விஷம் வைத்துக் கொல்ல முயற்சி நடந்தது. அதில் பிழைத்த நவால்னிக்கு நேற்று முன்தினம் மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு வழக்கில் நவால்னி இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். புதிய தண்டனை வாயிலாக நவால்னியை சிறையிலேயே வைத்திருக்க புடின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவிப்போரையும் புடின்…

Read More

உலகம் செய்தி ‘இஸ்லாம் பயம்’ அதிகரிப்பு: இம்ரான் கான் ஒப்புதல்

உலகம் செய்தி  ‘இஸ்லாம் பயம்’ அதிகரிப்பு: இம்ரான் கான் ஒப்புதல்

”நியூயார்க் இரட்டை கோபுர கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின், உலகளவில் இஸ்லாத்தின் மீதான பயம் அதிகரித்து விட்டது,” என இம்ரான் கான் தெரிவித்தார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: இஸ்லாத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை. கிரிக்கெட் வீரனாக இருந்த போது, நான் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். அப்போது, அந்த நாடுகளில் இஸ்லாத்தின் மீது வெறுப்போ, பயமோ மற்ற மதத்தினரிடம் இருந்தது இல்லை. ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001 செப்., 11ல், இரட்டை கோபுரத்தின் மீது நடந்த…

Read More

ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆயுத சப்ளை செய்யவேண்டாம்- உக்ரைன் அதிபர்

ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆயுத சப்ளை செய்யவேண்டாம்- உக்ரைன் அதிபர்

உக்ரைன் நாட்டில் கடந்த 25 நாட்களாக போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் ரஷ்ய படைகள் ஹைபர்சானிக் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. உலக அளவில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து பொருளாதார தடை விதித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்தாவிட்டால் தொடர்ந்து போராடுவோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போராடி வருகிறார். தற்போது ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாமீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ஓர் வீடியோ உரையில் ரஷ்யா போர் புரிவதற்கு உலகில் எந்த நாடுகளும் ஆயுத சப்ளை செய்ய வேண்டாம்…

Read More

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2-ஆவது நாளாக 100-க்கு கீழ் குறைந்தது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2-ஆவது நாளாக 100-க்கு கீழ் குறைந்தது

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே தொற்று பாதிப்பு வேகமாக சரிந்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 996- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 204 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒரு உயிரிழப்பு…

Read More

போர் முடிவுக்கு வருமா? பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக புதின் தகவல்

போர் முடிவுக்கு வருமா? பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக புதின் தகவல்

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, கடந்த மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்தது. இருவாரத்திற்கும் மேலாகியும் உக்ரைன் மீதான உக்கிர போரை ரஷியா நிறுத்தவில்லை. தொடர்ந்து அந்நாட்டின் மீது குண்டு மழை பொழிந்து வரும் ரஷியா, தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. உக்ரைன் படைகளும் கடும் சவால் அளிப்பதால், ரஷியாவில் எளிதில் தலைநகரை கைப்பற்ற முடியவில்லை. ரஷியாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் பொருளாதார தடைகளை அறிவித்தாலும் அதையெல்லாம் ரஷிய பொருட்படுத்த மறுத்து பதிலுக்கு பதில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால், பதற்றம் நீடித்த படியே உள்ளது. இருப்பினும், ஒருபுறம் உக்ரைன் –…

Read More

உலகம் செய்தி ‘மெராபி’ எரிமலை வெடிப்பு பொதுமக்கள் வெளியேற்றம்

உலகம் செய்தி  ‘மெராபி’ எரிமலை வெடிப்பு பொதுமக்கள் வெளியேற்றம்

இந்தோனேஷியாவில், ‘மெராபி’ எரிமலை வெடித்து, தீக்குழம்பு வெளியேறி வருவதால், அப்பகுதியில் வசிக்கும் 250 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்நிலையில், இங்கு, மத்திய ஜாவா – யோக்கியகர்தா இடையே இருக்கும், 2,968 மீட்டர் உயரமுள்ள மெராபி எரிமலை, நேற்று முன்தினம் இரவு வெடித்துச் சிதறியது.அதிலிருந்து கரும்புகையுடன், தீக்குழம்பும் வெளியேற துவங்கியுள்ளது. அது, எரிமலையை சுற்றி வழிந்தோடுவதோடு, அதில் இருந்து வெளிவரும் சாம்பல், அருகிலுள்ள கிராமங்களில் பரவி வருகிறது.இதையடுத்து, சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து 253 பேர் மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எரிமலை வெடிப்பால், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. மெராபி எரிமலை 450 ஆண்டுகளுக்கும்…

Read More
1 63 64 65 66 67 425