மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரம்; எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரம்; எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி வருகின்றன. கூட்டத்தொடர் முடிவடைய இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தினர்.

Read More

வாய்ப்பை தவறவிட்டுவிட்டது இந்தியா; பிரிட்டன் பருவநிலை அமைப்பு

வாய்ப்பை தவறவிட்டுவிட்டது இந்தியா; பிரிட்டன் பருவநிலை அமைப்பு

உலகம் முழுவதும் தற்போது பருவநிலை மாற்றம் ஏற்பட்டு உலகத்தை தட்ப வெப்பத்தை மாற்றி மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது. இதனை அடுத்து ஐநா., முன்னதாக இதுகுறித்து தகவல் வெளியிட்டது. காட்டுத்தீ பரவுதல், எரிமலை வெடித்தல், புயல், கடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் காரணமாக துருவப் பகுதிகளில் பனிப்பாறை உருகி கடல் மட்டம் உயர்வதும், இது பல சிறிய தீவுகளுக்கு ஆபத்தாக அமையும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை அடுத்து உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தை குறைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இந்தியாவின் பங்கு என்ன என்ற கேள்வி எழுந்தது. அடுத்த 20 ஆண்டுகளில் உலக தட்பவெட்பம் 1.5 டிகிரி செல்சியஸ்…

Read More

அருகருகே அமர்ந்து எல்லாம் ஸ்டாலின், பன்னீர், பழனிசாமி

அருகருகே அமர்ந்து எல்லாம் ஸ்டாலின், பன்னீர், பழனிசாமி

மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடல்நலக்குறைவால் , மதுசூதனன் நேற்று (ஆக.5ம் தேதி) காலமானார். அவரது உடல் சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி , முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். காலை 8 ;15 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் மதுசூதனன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்தார். தொடர்ந்து பன்னீர்செல்வம், பழனிசாமி , ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தனர். அவரும்…

Read More

டோக்கியோ ஒலிம்பிக்: மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அரையிறுதியில் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்: மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அரையிறுதியில் தோல்வி

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவர் ஃபிரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா மற்றும் அஜர்பைஜானின் ஹாஜி அலியேவ் அரையிறுதியில் விளையாடினர். இந்த போட்டியில், 5-12 என்ற கணக்கில் பூனியா தோல்வி அடைந்து உள்ளார். இதற்கு முன் நடந்த காலிறுதி போட்டியில் பூனியா, ஈரானின் மோர்தசா கியாசி செகாவை வீழ்த்தினார். அரையிறுதியில் தோல்வி கண்டுள்ள பூனியா, நாளை நடைபெறும் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார்.

Read More

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது

டோக்கியோ, 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஆக்கி போட்டியில் இந்திய ஆடவர் ஆக்கி அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. ஆட்டத்தின் இறுதிவரை பரபரப்பாக சென்ற போட்டியில் ஜெர்மனியை தோற்கடித்து பதக்கம் வென்றது இந்தியா. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறது இந்திய ஆடவர் ஆக்கி அணி. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

ஆப்கனில் இஸ்லாமிய ராஜ்ஜியம் உருவாவதை ஆதரிக்க முடியாது: ஜ.நா., பாதுகாப்பு கவுன்சில்

ஆப்கனில் இஸ்லாமிய ராஜ்ஜியம் உருவாவதை ஆதரிக்க முடியாது: ஜ.நா., பாதுகாப்பு கவுன்சில்

ஆப்கனில் மீண்டும் இஸ்லாமிய ராஜ்ஜியம் உருவாவதை ஆதரிக்க முடியாது’ என, இந்தியா தலைமையிலான, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 1996, செப்.,ல், தலிபான்கள் ஆப்கன் தலைநகர் காபூலை கைப்பற்றி, இஸ்லாமிய ராஜ்ஜியத்தை பிரகடனப்படுத்தினர். இந்நிலையில் 2001 செப்.,11ல் அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டை கோபுரங்களை, அல் – குவைதா பயங்கரவாதிகள் விமானங்களால் மோதி தகர்த்தனர். இதைத் தொடர்ந்து, அல் – குவைதா தலைவர் பின்லேடனை பிடிக்க, அமெரிக்கப் படைகள் ஆப்கன் சென்றன. அங்குள்ள, வடக்கு கூட்டணி கட்சி, அமெரிக்க படையின் ஆதரவுடன், தலிபான்களை விரட்டியடித்தது. இதையடுத்து, தலிபான்களின் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் 2001, டிச., 17ல் முடிவுக்கு வந்தது. தற்போது, ஆப்கனில் 90 சதவீத…

Read More

மல்யுத்தத்தில் இந்தியா அசத்தல்; ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி

மல்யுத்தத்தில் இந்தியா அசத்தல்; ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. 12வது நாளான இன்று (ஆக.,04) மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா, கொலம்பியா வீரரை எதிர்கொண்டார். இதில், 13-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப்பெற்றார். காலிறுதியில் பல்கேரியா வீரருடன் மோதியதில் 14-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். மல்யுத்தத்தில் 86 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு இந்திய வீரர் தீபக் புனியா, நைஜீரிய வீரரை 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி…

Read More

நாடாளுமன்றத்தில் அமளி: மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸின் 6 உறுப்பினர்கள் இடைநீக்கம்

நாடாளுமன்றத்தில் அமளி: மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸின் 6 உறுப்பினர்கள் இடைநீக்கம்

பெகாசஸ் வேவு பார்க்கும் மென்பொருள் பயன்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் வேளையில், மாநிலங்களவையில் விதிகளை மீறி அவையின் மையப்பகுதிக்கு வந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி 6 உறுப்பினர்களை இன்று நாள் முழுவதுமாக இடைநீக்கம் செய்திருக்கிறார் மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு. டோலா சென், நடிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், ஷாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மெளசம் நூர் ஆகிய இந்த ஆறு உறுப்பினர்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

Read More

இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை

இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கியில் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் பெண்கள் ஹாக்கி காலிறுதிப்போட்டியில் இந்திய அணி, மூன்று முறை தங்கம் வென்ற ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில், சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள், ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதிப்பெறுவது இதுவே முதன்முறையாகும். அரையிறுதியில் அர்ஜென்டினா உடன் மோதுகிறது.

Read More

நடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை

நடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை

பஇந்தியாவில் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் கோவிட் 3வது அலை தொடங்க வாய்ப்புள்ளது. தினமும் ஒரு லட்சம் பேருக்கு குறையாமல் பாதிக்கப்படுவர்; அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை பாதிக்கப்படலாம்’ என, ஐஐடி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஐதராபாத் ஐஐடி ஆய்வாளர்கள் மதுகுமளி வித்யாசாகர், கான்பூர் ஐஐடி ஆய்வாளர் மனிந்திரா அகர்வால் இருவரும் கணித முறை அடிப்படையில், கோவிட் 3வது அலையை கணித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வாளர் மதுகுமளி வித்யாசாகர் கூறுகையில், ‘கேரளா, மஹாராஷ்டிராவில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, 3வது அலை நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அவ்வாறு ஏற்பட்டால் அக்டோபரில் உச்சத்தை அடையும். ஆனால், 2வது அலையைப் போல், 3வது அலையில் பாதிப்பு, உயிரிழப்பு…

Read More
1 82 83 84 85 86 425