தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதமும் இன்று நடைபெற்று வருகிறது. இதில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அமைச்சர் கே.என்.நேரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும். இந்த பகுதிகளை சுற்றியுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளை ஒருங்கிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும். காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை…

Read More

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சண்டை – ஒருவர் பலி

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சண்டை – ஒருவர் பலி

ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததில் இருந்து பதற்றத்தின் பிடியில் சிக்கித்தவிக்கிறது. அங்குள்ள வெளிநாட்டினர் மட்டுமல்லாது உள்நாட்டினரும் ஆப்கா னிஸ்தானில் இருந்து வெளியேறினால் போதும் என்ற மன நிலையில் உள்ளனர். இதனால் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் கூட்டம் தொடர்ந்து அலை மோதுகிறது. விமான நிலையத்துக்கு வெளியேயும் ஒரு குழப்பமான சூழ்நிலை நீடிக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் நாட்டை விட்டு தப்பினால் போதும் என்ற நிலையில், விமான நிலையத்தை நோக்கி படையெடுக்கின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் அடையாளம் தெரியாத நபர்களுக்கும் இடையே…

Read More

ஆப்கானிஸ்தான் விவகாரம்; 26ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு

ஆப்கானிஸ்தான் விவகாரம்; 26ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மத்திய அரசு வெளியேற்றி வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக ஏர் இந்தியா மற்றும் விமானப்படை விமானங்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்களை தாயகம் அழைந்து வந்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு…

Read More

தமிழகத்தில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை – சுகாதாரத்துறைச் செயலாளர்

தமிழகத்தில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை – சுகாதாரத்துறைச் செயலாளர்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்தில் இந்திய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். பின்னர் அவர் கூறினார்: – இன்று 6.93 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வர உள்ளன. இதுவரை 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. பல நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரு சதவீத மக்கள் மட்டுமே கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர். கோயம்புத்தூர், சேலம் மற்றும் தஞ்சாவூர் போன்ற 17 மாவட்டங்களில், 1% க்கும் அதிகமான மக்கள் அதிகமாக தடுப்பூசி போடப்படுகிறார்கள் மற்றும் பொதுமக்கள் தானாக முன்வந்து தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி வருகை அதிகரித்துள்ளது மற்றும் தடுப்பூசி மீதான ஆர்வம் குறைந்தது. தமிழகத்தில் போலி அரசு…

Read More

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,688-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,688-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் இன்று 1,668- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 19,621- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,887- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1,66,173 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34,663 ஆக அதிகரித்துள்ளது.

Read More

கோவ்ஷீல்ட் 2 டோஸ் செலுத்துபவர்கள் 3 வது டோஸை செலுத்துகிறார்கள் – ஆதார் பூனாவாலா

கோவ்ஷீல்ட் 2 டோஸ் செலுத்துபவர்கள் 3 வது டோஸை செலுத்துகிறார்கள் – ஆதார் பூனாவாலா

கோவ்ஷீல்ட் 2 தயாரிப்பதற்கான சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் ஆர்தர் பூனாவாலா, 2 டோஸ் தடுப்பூசிக்கு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு 3 வது டோஸ் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 2 வது டோஸை எடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு, அவரது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது என்று அவர் கூறினார், அவரே 3 வது டோஸை எடுத்துக் கொண்டார். சீரம் நிறுவனத்தில் பணிபுரியும் 8,000 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 3 வது டோஸ் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஆதார் பூனாவாலா கூறினார்.

Read More

தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைத்த பின் விற்பனை அதிகரிப்பு – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைத்த பின் விற்பனை அதிகரிப்பு – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 4 ம் நாள் விவாதம் மற்றும் பதிலுரை இன்று நடைபெற்று வருகிறது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சராசரியாக ஒருநாள் பெட்ரோல் விற்பனை 9,180 கிலோ லிட்டர் விற்பனையானது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை சராசரியாக ஒரு நாள் பெட்ரோல் விற்பனை 10,317 கிலோ லிட்டர் விற்பனையாகியுள்ளது. பெட்ரோல் விலைகுறைப்பால் மக்கள் நேரடியாக பயனடைந்துள்ளார்கள். பெட்ரோல் விலை ரூ.3 குறைப்புக்கு பிறகு நாள் ஒன்றுக்கு 11.28 லட்சம் லிட்டர் பெட்ரோல் அதிகளவில் விற்பனை…

Read More

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது 62-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்த ஆத்மநிர்பர் பாரத் கனவை நிறைவேற்றும் நோக்கில் அவர் முன்னோடியாக உள்ளார். நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- மிக்க…

Read More

கொடநாடு விவகாரம்; சட்டமன்ற வளாகத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தர்ணா

கொடநாடு விவகாரம்; சட்டமன்ற வளாகத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தர்ணா

கோடநாடு கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த பிறகு, சட்டப்பேரவைக்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவர் ஓ பன்னீர் செல்வம் உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓ பன்னீர்செல்வம், “எதிர்க்கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் வாய்ப்பு தராத போக்கு நிலவுகிறது. பொய்யான வழக்குகளை கொண்டு வந்து அச்சுறுத்தும் நடவடிக்கைகளை திமுக மேற்கொள்கிறது. எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம். சட்டப்படி எதிர்கொள்வோம். திமுக அரசின் செயல்களை கண்டிக்கும் வகையில் பேரவையில் இருந்து வெளிநடப்பு…

Read More

இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

சென்னை, தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து உள்ளது. இதன்படி, ரூ.852ல் இருந்து ரூ.877 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிக வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

Read More
1 80 81 82 83 84 425