பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலாது ஏன்? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலாது ஏன்? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;- எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்படையதே, ஆனால் மத்திய, மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை அதற்கு தீர்வு இல்லை. 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது. முந்தைய காங்கிரஸ் அரசு செய்த தந்திரத்தால் எங்களால் ஏதும் செய்ய முடியவில்லை. அதனால் தான் பெட்ரோல் & டீசலின் விலையை எங்களால் குறைக்க முடியவில்லை. காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70.195 கோடிக்கும்…

Read More

ஆப்கானிஸ்தான் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது

ஆப்கானிஸ்தான் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது

உஸ்பெகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உஸ்பெகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்களை திரட்டி வருவதாகவும், உஸ்பெகிஸ்தான் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவிக்கவும் ரஷ்ய பத்திரிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இராணுவ விமானம் சட்டவிரோதமாக உஸ்பெகிஸ்தானின் எல்லையைக் கடந்தாக கூறப்படுகிறது. எல்லையை கடந்த 84 ஆப்கானிஸ்தான் வீரர்களை தடுத்து நிறுத்தியதாகவும், அவர்கள் மருத்துவ உதவி கோரியதாகவும் உஸ்பெகிஸ்தான் நேற்று தெரிவித்துள்ளது.

Read More

பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 அளவுக்கு குறைக்கப்படும்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 அளவுக்கு குறைக்கப்படும்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) இன்று செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 அளவுக்கு குறைக்க முதல் அமைச்சர் ஆணையிட்டுள்ளார். பெட்ரோல் மீதான வரி குறைப்பால் 1,160 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். பெட்ரோல் வரிக்குறைப்பு உழைக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும் தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369,09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது….

Read More

1 ஜூலை 2022 முதல் ஒரு முறை யூஎன் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – இந்தியாவின் மத்திய அரசு

1 ஜூலை 2022 முதல் ஒரு முறை யூஎன் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – இந்தியாவின் மத்திய அரசு

பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. செலவழிப்பு பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை 1 ஜூலை 2022 முதல் தடை செய்யப்படும். பிளாஸ்டிக் பைகளின் தடிமன் 75 மைக்ரானுக்கு மிகாமல் இருக்க வேண்டும், இது செப்டம்பர் 30 முதல் கட்டாயமாகும். பிளாஸ்டிக் பைகளின் தடிமன் அளவு 120 மைக்ரானாக அதிகரிக்கப்படுகிறது. செலவழிப்பு பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை ஏற்கனவே தமிழகத்தில் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது – கமல்ஹாசன் குற்றச்சாட்டு

திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது – கமல்ஹாசன் குற்றச்சாட்டு

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில், ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்வீட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்? கொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது…

Read More

பப்ஜி மதன் வழக்கு – 1,600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

பப்ஜி மதன் வழக்கு – 1,600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கொரோனா காலத்தில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் ரூ.2.89 கோடி பெற்றதாக பப்ஜி மதன் மீது குற்றம்சாட்டப்பட்டது.  இந்தநிலையில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்த வழக்கில் பப்ஜி மதனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பப்ஜி மதன், மனைவி கீர்த்திகா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்  சைபர் கிரைம் போலீசார் தாக்கல் செய்தனர். பப்ஜி மதன் மீதான வழக்கில் 1,600 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது காவல்துறை. 32 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் புகாரளித்த நிலையில் 32 பேர் மட்டுமே எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Read More

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய வீரர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக விலகல்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய வீரர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக விலகல்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் விலகியுள்ளார். காயம் காரணமாக ஷர்துல் தாகூர் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இடம்பெறமாட்டார் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Read More

2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் அனுமதி

2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் அனுமதி

கொரோனா வைரசுக்கு எதிரான பெரும்பாலான தடுப்பூசிகள் 2 தவணைகள் செலுத்த வேண்டிய தடுப்பூசிகளாகவே இருக்கின்றன. ஒரு தடுப்பூசியை முதல் தவணை செலுத்தி, குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர் அதே தடுப்பூசியை 2-வது தவணை செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் இதே முறையில்தான் செலுத்தப்படுகின்றன. முதல் தவணையில் ஒரு தடுப்பூசியையும், 2-வது தவணையில் மற்றொரு தடுப்பூசியையும் யாரும் இங்கு பரிந்துரைப்பதில்லை. இதுகுறித்த ஆய்வுகள் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. இந்த நிலையில் முதல் தவணையிலும், 2-வது தவணையிலும் வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்துகிறபோது, குறிப்பாக கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்துகிறபோது அது பாதுகாப்பானது மட்டுமல்ல, கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பான பலனை, அதாவது நோய்…

Read More

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி சந்திப்பு

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி சந்திப்பு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்பட 53 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ். பி.வேலுமணி தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு சலுகை அடிப்படையில் டெண்டர் வழங்கியதாக புகார் கூறப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையிலேயே இன்று கோவை மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி இன்று சந்தித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார்…

Read More

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு

கோவை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், காலை 6 மணி முதல் சோதனை . சுமார் 12 மணி நேரம் நடைபெற்று வந்த இந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னையில் ஒரு இடத்திலும், கோவையில் 2 இடங்களில் தற்போது சோதனை நிறைவடைந்துள்ளது. இன்று நடைபெற்ற சோதனையில் இதுவரை ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மோசடியில் ஈடுபட்டுள்ளதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் லஞ்ச…

Read More
1 81 82 83 84 85 425