பிரதமருடனான சந்திப்பு மனநிறைவு தருகிறது: முதல்வர் ஸ்டாலின்
பிரதமருடனான சந்திப்பு, மகிழ்ச்சி, மன நிறைவு தரும் சந்திப்பாக அமைந்தது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு 25 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றது. இதன் பின்னர் தமிழ்நாடு இல்லம் திரும்பிய ஸ்டாலின் அங்கு நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா காரணமாக, பதவியேற்றதும் பிரதமரை சந்திக்க முடியவில்லை. தமிழகத்தில் தற்போது கட்டுக்குள் வந்த நிலையில், பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டேன். அவரும் அனுமதி கொடுத்தார். சந்திப்பு மகிழ்ச்சியான,மனநிறைவு தரும் சந்திப்பாக இருந்தது. முதலில், முதல்வராக பதவியேற்றதற்கு எனக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்தேன். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்…
Read More









