சபரிமலையில், கோவில் ஐதீகத்தை மீறி, இரண்டு இளம் பெண்களை தரிசனம் செய்ய வைத்த, இடது ஜனநாயக முன்னணி அரசை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு

சபரிமலையில், கோவில் ஐதீகத்தை மீறி, இரண்டு இளம் பெண்களை தரிசனம் செய்ய வைத்த, இடது ஜனநாயக முன்னணி அரசை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு

சபரிமலையில், கோவில் ஐதீகத்தை மீறி, இரண்டு இளம் பெண்களை தரிசனம் செய்ய வைத்த, இடது ஜனநாயக முன்னணி அரசை கண்டித்து, கேரளாவில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில், வன்முறை வெடித்தது. கல் வீச்சு, தீ வைப்பு போன்ற சம்பவங்களால், மாநிலம் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது; 226 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற, ‘சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்’ என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பக்தர்கள், பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பிந்து,…

Read More

திருவாரூர் இடைத்தேர்தல்: ஸ்டாலினுக்கு நெருக்கடியா?

திருவாரூர் இடைத்தேர்தல்: ஸ்டாலினுக்கு நெருக்கடியா?

திருவாரூர் இடைத்தேர்தல் மற்ற கட்சிகளைவிட திமுகவுக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும் தேர்தலாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இந்தத் தேர்தலில், அவர் என்னென்ன நெருக்கடிகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன? திருவாரூர் திமுகவின் கோட்டை. 1967-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு தேர்தல் வரை திமுக ஆதிக்கம் செலுத்தி வரும் தொகுதி. இந்திரா காந்தி மரணம், எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1984-ம் ஆண்டு தேர்தலில்கூட இங்கே திமுக கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இதேபோல 1991-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அலையிலும்கூட திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றிருக்கிறது. திமுக…

Read More

இந்த ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் – ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தல்

இந்த ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் – ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தல்

இந்த ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய இணை பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபளே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்து ராமர் கோவில் கட்டும் திசையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை என்று நாங்கள் கருதுகிறோம். நரேந்திர மோடி தலைமையில் 2014-ல் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூட, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுகூலமான, அரசியல் சாசன வரம்பிற்கு உட்பட்ட சாத்தியங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வோம் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது. நாட்டு மக்கள் இதில் முழு நம்பிக்கை வைத்து பா.ஜ.க.விற்கு முழு அளவில் ஆதரவு கொடுத்தார்கள். இந்த ஆட்சிக்காலத்தின் போதே…

Read More

மே.வங்கத்தில் பா.ஜ., யாத்திரைக்கு ஐகோர்ட் அனுமதி

மே.வங்கத்தில் பா.ஜ., யாத்திரைக்கு ஐகோர்ட் அனுமதி

லோக்சபா தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 3 இடங்களில் யாத்திரை நடத்த பா.ஜ., திட்டமிட்டது. இதை கட்சி தலைவர் அமித் ஷா துவக்கி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், யாத்திரைக்கு அனுமதி வழங்க மாநில அரசு அனுமதி மறுத்து விட்டது. இதை எதிர்த்து பா.ஜ., சார்பில் கோல்கட்டா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், யாத்திரைக்கு அனுமதி வழங்கியதுடன், பல நிபந்தனைகளை விதித்துள்ளனர். பொது மக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படுத்தக்கூடாது. அமைதியாக யாத்திரை நடத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாததை அரசு உறுதி செய்வதுடன், போலீசார் 12 மணி நேரத்திற்கு முன்பே ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இது…

Read More

தனி ஆளாக போராடுகிறேன்: பொன்.மாணிக்கவேல்

தனி ஆளாக போராடுகிறேன்: பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் வழக்கில் போலீசார் எனக்கு எதிராக திரும்பியதாக கருதவில்லை. தனி ஆளாக போராடுகிறேன் என சிலை கடத்தல் தடுப்பு வழக்கின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கூறினார். ‘மாநில, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்க வேல், பொய் வழக்கு பதிவு செய்யச் சொல்லி மிரட்டுகிறார்’ என, டி.ஜி.பி., அலுவலகத்தில், போலீஸ்காரர்கள் புகார் அளித்துள்ளனர். இன்றும் சில போலீசார் புகார் அளித்தனர். இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த பொன்.மாணிக்கவேல் கூறியதாவது: என் மீதான குற்றச்சாட்டுகள் எதிர்பா்த்தது தான். சிலை கடத்தல் சிறப்பு அதிகாரியாக ஐகோர்ட் தான் என்னை நியமித்தது. என் மீது புகார் கூறிய 21 பேரும் 400 நாளில் ஒரு…

Read More

ஹரியானா மேயர் தேர்தல் : 5 இடங்களிலும் பா.ஜ., ஜோர்

ஹரியானா மேயர் தேர்தல் : 5 இடங்களிலும் பா.ஜ., ஜோர்

இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் 5 மாநகரங்களுக்கு மேயர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகின. முதல்வர் மனோகர் லால் கட்டார் பா.ஜ., வேட்பாளர்களுக்காக தீவிரமாக இறுதி கட்ட பிரசாரம் செய்தார். இதன் பலனாக யமுனா நகரில் போட்டியிட்ட பா.ஜ.,வேட்பாளர் மதன்சிங் பிற வேட்பாளர்களை விட 40 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ரானிபட் நகரில் பா.ஜ., வேட்பாளர் அவ்நீத் 74,900 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கர்னால், ஹிசார்,ரோஹ்தக் நகரில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் நேரடியாக கட்சியின் சின்னத்தை பயன்படுத்த வில்லை. அதே…

Read More

பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது; அருண் ஜெட்லி

பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது; அருண் ஜெட்லி

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. புதிய அரசு மே மாதம் இறுதிக்குள் தேர்வு செய்யப்படும். இதேபோன்று அடுத்த வருடம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டுக்கு செல்லும். இந்நிலையில், அரசியல் உற்றுநோக்குனர், கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுடையவரான மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் பற்றிய உங்களது கணிப்புகளை கூறுங்கள் என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெட்லி, விராட் கோலி மற்றும் நரேந்திர மோடி இருவரும் தங்களது துறைகளில் ஆச்சரியப்படத்தக்க வீரர்கள். அவர்களை எளிதில் வீழ்த்த முடியாது என கூறினார். அவர் தொடர்ந்து கூறும்பொழுது, கோலி…

Read More

புதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு

புதிய முதல்வர் கமல்நாத்துக்கு எதிர்ப்பு

மத்திய பிரசேத முதல்வராக பொறுப்பேற்றுள்ள கமல்நாத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்திய தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி மாநில முதல்வரை தேர்வு செய்ய கடந்த 5 நாட்களுக்கும் மேலாக சிந்தித்து ஒருவழியாக முடிவு செய்தது. இதன்படி ம.பி., முதல்வராக கமல்நாத் இன்று பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில நிமிடங்களில் கமல் நாத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அளித்துள்ள பேட்டியில்: கமல்நாத் 1984 கலவரத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி. அவரை முதல்வராக்கி இருப்தன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. அகாலி தளம் கட்சி மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் : சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தொடர்புடையவர்களை காங்கிரஸ்…

Read More

பொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பு; தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

பொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பு; தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க, ஐ.ஜி., பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்கிய, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்து உள்ளது. பொன் மாணிக்கவேல்,பணி நீட்டிப்பு,தடை விதிக்க,சுப்ரீம் கோர்ட் மறுப்பு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்பிரிவை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. இந்த தனிப்பிரிவு, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இந்நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றும் அரசாணைக்கு தடை விதித்தது. மேலும், ஓய்வு பெற்ற, ஐ.ஜி., பொன் மாணிக்கவேலின் சிறப்பான பணியை பாராட்டி,…

Read More

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்? ராகுல் காந்தி அறிவிக்கிறார்

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்? ராகுல் காந்தி அறிவிக்கிறார்

பா.ஜனதா ஆட்சி செய்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் கட்சி தேர்தலை எதிர்க்கொண்டது. இப்போது முதல்வர் யார்? என்பது தொடர்பாக முடிவெடுக்கும் பெரும் பொறுப்பு காங்கிரஸ் தலைமையில் கொடுக்கப்பட்டுள்ளது. இளம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸில் சச்சின் பைலட்டும், மத்திய பிரதேசத்தை பொறுத்தவரையில் ஜோதிராதித்ய சிந்தியாவும் முக்கிய தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்களை மாநில தலைமையில் அமரவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. ராஜஸ்தானில் 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை இழப்பதற்கு காரணமே சச்சின் பைலட் மற்றும் முன்னாள் முதல்வர் அசோக் கெலட் இடையிலான மோதல்…

Read More
1 100 101 102 103 104 181