டுவிட்டரிலும் இணைந்தார் பிரியங்கா

டுவிட்டரிலும் இணைந்தார் பிரியங்கா

சமீபத்தில் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, இன்று (பிப்.,11) முறைப்படி டுவிட்டரிலும் இணைந்துள்ளார். உ.பி., கிழக்கு மண்டல பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு பிரியங்கா, லக்னோவில் இன்று முதல் முறையாக பிரசாரத்தை துவக்கினார். சகோதரரும், காங்., தலைவருமான ராகுலுடன் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று பிரியங்கா பிரசாரம் செய்தார். இவருக்கு நூற்றுக்கணக்கான காங்., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தை துவக்கி அதே சமயத்தில், அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை பிரியங்கா துவக்கி உள்ளார். பிரியங்கா டுவிட்டரில் இணைந்துள்ளதாக காங்., கட்சியின் மைக்ரோ பிளாக் பக்கத்தில் காலை 11.49 மணியளவில் தகவல் பதிவிடப்பட்டது….

Read More

நான் கல்வி கற்று எந்தப்பதவியில் அமர்ந்தாலும் நேர்மையாகயும் நியாமாகவும்மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதே லட்சிய வெறி

நான் கல்வி கற்று  எந்தப்பதவியில் அமர்ந்தாலும் நேர்மையாகயும் நியாமாகவும்மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதே லட்சிய வெறி

சகாயம் ஐஏஎஸ் கூறுகின்றார் “கிராமத்துப் பின்னணிதான் என்னுடைய இளமைக்காலம். இளமைக் காலம் நான் தமிழ் மீது தீராத காதல் கொண்டிருந்த காலம். அதைப்போல நான் கல்வி கற்று எந்தப்பதவிக்கு நான் சென்றாலும் நேர்மையாக நியாமாக மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற லட்சிய வெறி. இப்படியாக என்னுடைய இளமைக்கால பின்னணி அமைந்தது என்று நான் இன்னும் பெருமைப்;பட்டுக் கொள்வேன்” இவ்வாறு கூறுகின்றார் தமிழ்நாட்டின் மதுரை பிராந்திய முன்னாள் ஆட்சியராக விளங்கியவரும் நேர்மையான அரசுப் பணியாளரும், தமிழ் மீது பற்றுக் கொண்டவருமான சகாயம் ஐஏஎஸ் அவர்கள். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் “சிறகு” சஞ்சிகைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னரம் வழங்கிய பேட்டியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படிப் பேட்டியின் முழு வடிவமும்…

Read More

காந்தியடிகள் பெருங்குற்றவாளிபோல அடைக்கப்பெற்றாலும் புத்தகங்களுடனும் புனித சிந்தனைகளுடனும் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கினார்

காந்தியடிகள் பெருங்குற்றவாளிபோல அடைக்கப்பெற்றாலும் புத்தகங்களுடனும் புனித சிந்தனைகளுடனும் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கினார்

இந்திய மண்ணின் விடுதலைக்காக ஆயிரம் ஆயிரம் தியாக வீரர்கள் தம் உயிர், பொருள், ஆவி அனைத்தையும் இழந்துள்ளனர். தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தது அல்ல இந்திய சுதந்திரம். செந்நீர் ஊற்றி கண்ணீரால் காத்துப் பெற்றது சுதந்திரம். இந்திய சுதந்திரத்திற்காக எத்தனை எத்தனை பேர் இன்னுயிர் இழந்தனர். சிறைபட்டனர். எண்ணிக்கை எண்ணி முடியாது. வரலாறு சொல்லி முடியாது. அண்ணல் காந்தியடிகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நீதி மன்றத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அக்காலத்தில் ஆண்ட ஆங்கில அரசிற்கு எதிராக, பத்திரிக்கைகளில் காந்தியடிகள் எழுதி மக்கள் அமைதியைக் குலைக்கிறார் என்பது அரசு தரப்புக் குற்றச்சாட்டு. இதனைக் காந்தி எதிர்கொள்கிறார். வழக்கறிஞராக, பாரிஸ்டராக தென்ஆப்பிரிக்காவில் கடமையாற்றிய அண்ணல் காந்தியடிகள்…

Read More

கேரளாவின் சபரிமலையில் “மழை விட்டும் தூவானம் விட வில்லை” போன்று சர்ச்சைகள் தொடர்கின்றன – சிவலிங்கம் சிவகுமாரன்

கேரளாவின் சபரிமலையில் “மழை விட்டும் தூவானம் விட வில்லை” போன்று சர்ச்சைகள் தொடர்கின்றன – சிவலிங்கம் சிவகுமாரன்

மழை விட்டும் தூவானம் விட வில்லை என்பது போன்று சபரிமலையில் கடந்த 14 ஆம் திகதி மகரஜோதி பெருவிழா நிறைவடைந்து பருவகாலம் முடிந்தும் இத்தலத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்லக்கூடாது என்ற சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.. இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளைப் பொறுத்தவரை இலங்கையிலிருந்தே பெருந்தொகையான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனர். இவர்களில் எத்தனைப்பேர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அதன் பின்னர் வெளிப்படுத்தப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்தும் செவிமடுத்திருப்பார்கள் என்பதும் கேள்விக்குறியே. சபரிமலைக்கு 10 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் வழிபாடு செய்ய அனுமதியில்லை என்ற தடையானது இந்திய அரசியல் யாப்பிற்கு ஏற்புடையது அல்ல என்ற இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து உருவான சர்ச்சைகள்,கலவரங்கள்,…

Read More

10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வழக்கு

10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வழக்கு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதாவுக்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இந்த மசோதா பார்லிமென்ட் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமநிலைக்கான இளைஞர் அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

Read More

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும் – கனிமொழி எம்.பி.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும் – கனிமொழி எம்.பி.

மாநிலங்களவையில் 10% இடஒதுக்கீடு மசோதா மீதான விவாத்தில் திமுக எம்.பி. கனிமொழி  பேசியதாவது: பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும். படிக்கும், பணிபுரியும் இடங்களில் பட்டியலின மக்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பை கருத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசு தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து அவற்றை மக்கள் மீது திணிக்கிறது. நாட்டில் இன்றும் சாதிய ரீதியான பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. நாட்டில் ஒருவர் மதம், பொருளாதாரத்தை மாற்றிக்கொள்ள முடியும், ஆனால் சாதியை மாற்ற முடியாது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு சரியானது அல்ல என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. எதன் அடிப்படையில் 10% இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடித்தது? 10% இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு…

Read More

இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி : பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி : பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதா லோக்சபா, ராஜ்யசபாவிலும் நிறைவேறியுள்ளது. மசோதாவுக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதை காணும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. விவாதத்தின் போது எம்.பி.,க்கள் தங்கள் புத்திசாலித்தனமான கருத்துகளை வெளிப்படுத்தினர். மசோதா நிறைவேறியது சமூகநீதிக்கு கிடைத்த பெரும் வெற்றி. இது இளைஞர்கள் தங்களது வலிமையை வெளிப்படுத்தவும், இந்தியாவின் மாற்றத்திற்கு பங்களிக்கவும் உத்வேகமாக அமையும். வலுவான இந்தியாவை உருவாக்க நினைத்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கும் நன்றி. இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, லோக்சபாவில் நிறைவேறிய நிலையில், ராஜ்யசபாவிலும் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.

Read More

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, இன்று (ஜன.8) இரவு 9.50 மணிக்கு லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.  கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு, ஜனவரி 7 ம்தேதி அறிவித்தது.  பார்லிமென்ட் கூட்டத்தொடர் ஜனவரி 7 ம்தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஓரு நாள் நீட்டிக்கப்பட்டது. 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்களுக்குப் பிறகு இரவு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.. மசோதாவிற்கு ஆதரவாக 323 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் கிடைத்தன. இதனையடுத்து, மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. மசோதா குறித்த ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் அதிமுக வெளிநடப்பு செய்தது….

Read More

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு அரசு வேலை, கல்வித்துறையில் 10 சதவீத இட ஒதுக்கீடு

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு அரசு வேலை, கல்வித்துறையில் 10 சதவீத இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டி ராஜ்யசபா கூட்டத்தொடர் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு அரசு வேலை, கல்வித்துறையில் 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. பல்வேறு கட்சிகள் எதிர்ப்பும்,ஆதரவும் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக இன்று ( ஜன.8) பார்லி.யில் லோக்சபாவில் தாக்கல் செய்ய உள்ளது. மேலும் ராஜ்யசபாவிலும் மசோதாவாக்க உள்ளது. இந்நிலையில் பார்லி. குளிர்கால கூட்டத்தொடர் இன்று (ஜன.8) நிறைவடைவதால், மேலும் ஒரு நாள் நீட்டிக்க கோரிக்கை விடப்பட்டது. இது குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறுகையில், இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற வேண்டி ராஜ்யசபா கூட்டத்தொடரை நீட்டிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டதால் கூட்டத்தொடரை…

Read More

போபர்ஸ் ஊழலால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது; ரஃபேல் பிரதமர் மோடியை மீண்டும் பதவியில் அமர்த்தும் – நிர்மலா சீதாராமன்

போபர்ஸ் ஊழலால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது; ரஃபேல் பிரதமர் மோடியை மீண்டும் பதவியில் அமர்த்தும் – நிர்மலா சீதாராமன்

‘‘போபர்ஸ் தான் ஊழல், அந்த ஊழலால் அப்போது ஆட்சியில் இருந்த ராஜீவ் காந்தி பதவியை இழந்தார். ஆனால், ரஃபேல் நாட்டின் பாதுகாப்புக்காக செய்யப்பட்ட ஒப்பந்தம், ரஃபேல் ஒப்பந்தம் பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும்’’ என மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிகமாக ரூ.58 ஆயிரம் கோடிக்கு விலை வழங்கப்பட்டுள்ளதாகவும் விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும்…

Read More
1 99 100 101 102 103 181