பாக்.,பயங்கரவாதிகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்

பாக்.,பயங்கரவாதிகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்தது. கடந்த பிப் 14 ல் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற கான்வாயில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தியா இன்று மற்றொரு சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியுள்ளது என்றே கூறலாம். இந்த தாக்குதலுக்கு தேச பற்றுடன் அனைத்து தரப்பினரும் பாராட்டி வீரர்களுக்கு சல்யூட் அடித்து வருகின்றனர். கடந்த 14ம் தேதி, காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள்…

Read More

மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி – சவுதி அரேபியா இளவரசர்

மோடி எனக்கு அண்ணன் மாதிரி, நான் அவருக்கு தம்பி – சவுதி அரேபியா இளவரசர்

இராஜாங்கப் பயணமாக இந்தியா சென்ற சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்! முகமது பின் சல்மானின் வருகையால் இந்தியா-சவூதி அரேபியா இடையிலான உறவுகள் மேம்படும் என்று செவ்வாய்கிழமையன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் வெளியுறவு துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்… பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு சவூதிக்கு சென்ற போது இருதலைவர்களிடையே நீடித்த நட்புறவை வெளியுறவுத்துறை நினைவுகூர்ந்துள்ளது. ரத்தினகிரி சுத்திகரிப்பு திட்டத்துக்காக சவூதியின் அராம்கோ மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் 44 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. சவூதி அரேபியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தீவிரவாத எதிர்ப்பு, பணப்பரிமாறம் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வது,…

Read More

பாக்.கிற்கு நதிநீர் பங்கீட்டை நிறுத்த இந்திய அரசு முடிவு

பாக்.கிற்கு நதிநீர் பங்கீட்டை நிறுத்த இந்திய அரசு முடிவு

இந்தியா-பாக்.இடையேயான நதிநீர் பங்கீட்டினை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். கடந்த 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தாக்குதலால் பாக். மீது இந்தியா கடும் ஆத்திரத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியா-பாக்.நிதிநீர் பங்கீட்டினை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ராவி நதியில் இருந்து உபரிநீரை பகிர்வதை நிறுத்தப்படும். இனி பாக்.கிற்கு வழங்கப்பட்டு வந்த நதிநீர் பங்கீட்டினை தடுத்து நிறுத்தி அதனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களுக்கு திருப்பிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்துஸ் நீர் ஒப்பந்தத்தின்படி…

Read More

இந்தியா எடுக்கும் அனைத்தும் நடவடிக்கைகளுக்கும் மிகச் சிறந்த நட்பு நாடு என்ற அடிப்படையில் இஸ்ரேல் ஆதரவு அளிக்கும்

இந்தியா எடுக்கும் அனைத்தும் நடவடிக்கைகளுக்கும் மிகச் சிறந்த நட்பு நாடு என்ற அடிப்படையில் இஸ்ரேல் ஆதரவு அளிக்கும்

‘பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதுடன் முழு ஒத்துழைப்பையும் அளிக்கத் தயாராக உள்ளோம்’ என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ‘பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். ‘மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் பயங்கரவாதத்துக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் போல் நம் ராணுவமும் தாக்குதல்களை நடத்த வேண்டும்’ என சிலர் கருத்து கூறியிருந்தனர். இந்நிலையில் இந்தியாவுக்கான இஸ்ரேலின் துாதராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரியான ரான் மால்கா கூறியதாவது: பயங்கரவாதத்துக்கு எதிராக மிகவும் துல்லியமாகவும், விரைவாகவும் இஸ்ரேல்…

Read More

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு

தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி முடிவு எடுப்பதற்காக, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். அப்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது என தகவல் வெளியாகியது. கூட்டணியில் காங்கிரஸ்…

Read More

அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது; பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக

அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது; பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக

அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் தெரிவித்தனர். அதிமுக – பா.ஜ., கூட்டணி குறித்து இரு கட்சிகள் இடையே 2 ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை நந்தனம் கிரவுன்பிளாசா ஓட்டலில் நடந்தது. இங்கு பியூஷ் கோயலுடன் இ.பி.எஸ்., பேச்சு நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், பா.ஜ., சார்பில், பியூஷ் கோயல், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் , வானதி சீனிவாசன், அதிமுக சார்பில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி,…

Read More

அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி

அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலுக்கான தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக மத்திய ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது பற்றிய பேச்சுவார்த்தைக்காக அவர் இன்று சென்னை வந்துள்ளார். அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மூத்த கட்சி உறுப்பினர்கள் வரவேற்றனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக என்னை நியமித்ததற்கு அதிக மகிழ்ச்சி கொள்கிறேன். இடைக்கால நிதி நிலை அறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்து விட்டு வந்துள்ளேன். தமிழகத்தில் அமைய உள்ள கூட்டணி பற்றி…

Read More

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – வீரரகள் வீர மரணம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – வீரரகள் வீர மரணம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, காங்., தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பிரதமர் மோடி தொலைபேசியின் அவசர ஆலோசனை நடத்தினார். தாக்குதல் சம்பவம் தொடர்பாக உளவுத்துறை இயக்குனர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ உயரதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பயங்கரவாதிகள்…

Read More

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: முலாயம் சிங் பேச்சு

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: முலாயம் சிங் பேச்சு

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என லோக்சபாவில் சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் பேசினார். லோக்சபாவில் கடைசி நாளான இன்று அனைத்து கட்சி தலைவர்களும் நன்றியுரை நிகழ்த்தினர். அப்போது, சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் பேசியதாவது: மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். இதற்காக அவரை வாழ்த்துகிறேன். மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அனைத்து கட்சிகளையும், மோடி ஒருங்கிணைத்து சென்றுள்ளார். பல நல்ல பணிகளை விரைந்து செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். அப்போது லோக்சபாவில் இருந்த பிரதமர் மோடி, புன்னகைத்தபடி, முலாயமுக்கு நன்றி தெரிவித்தார். அவரது மகனும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ், உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு எதிராக…

Read More

பிரியங்காவின் கணவர் வாத்ரா மீதுள்ள அமலாக்க துறை விசாரணைகள், காங்., கட்சியினருக்கு கவலை

பிரியங்காவின் கணவர் வாத்ரா மீதுள்ள அமலாக்க துறை விசாரணைகள், காங்., கட்சியினருக்கு கவலை

ராகுலால் பெருமளவு வாக்காளர்களை கவர முடியவில்லை என்று நினைத்த காங்., அவரது சகோதரி பிரியங்காவை கட்சிக்குள் கொண்டு வந்த பிறகு, அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் ஆன பிறகு, உ.பி., சென்ற பிரியங்காவுக்கு அவர்கள் அளித்த வரவேற்பில் இது வெளிப்படையாக தெரிந்தது. ஆனால் பிரியங்காவின் கணவர் வாத்ரா மீதுள்ள அமலாக்க துறை விசாரணைகள், காங்., கட்சியினருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. கணவர் என்ற முறையில் வாத்ராவை பிரியங்கா ஆதரி்ப்பது, கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கட்சியினர் அஞ்சுகின்றனர். சில மூத்த தலைவர்கள் இது பற்றி கூறியதாவது: வழக்குகளின் பிடியில் உள்ள வாத்ராவுக்கு ஆதரவாக இருப்பதாக பிரியங்கா அடிக்கடி காட்டிக்கொள்வதால், கட்சியின் இமேஜ் பாதிக்கப்படும். பிரியங்கா…

Read More
1 98 99 100 101 102 181