18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என ஐகோர்ட் 3வது நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பு வழங்கினார். முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, 2017 செப்டம்பரில், கட்சி தாவல் சட்டத்தின் கீழ், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். தகுதி நீக்கத்தை எதிர்த்து, 18 பேரும், சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்தனர். 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் தங்களின் தீர்ப்பில் கூறி இருந்தனர். நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…

Read More

தமிழக பா.ஜ.,வின் அடுத்த தலைவர் யார்?

தமிழக பா.ஜ.,வின் அடுத்த தலைவர் யார்?

தமிழக பா.ஜ.,வின் தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜனின் பதவிக்காலம் முடிகிறது. இதையடுத்து, அடுத்த தலைவராக யார் வரப் போகிறார் என்ற பரபரப்பு, தமிழக பா.ஜ., வட்டாரங்களில் துவங்கி இருக்கிறது. இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது : இரு முறை, தமிழக பா.ஜ., தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் இருந்து விட்டதால், அவரையே தொடர்ந்து தமிழக பா.ஜ., தலைவர் பதவியில் நீடிக்க வைக்க முடியாது. அதனால், புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில், அகில இந்திய பா.ஜ., தலைமை தீவிரமாகி இருக்கிறது. கட்சியின் மாநில பொது செயலர்களாக இருக்கும் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள், அடுத்த தலைவருக்கான பட்டியலில்…

Read More

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

இலங்கை சிறையில் வாடும் 8 தூத்துக்குடி மீனவர்கள் உள்பட 16 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மன்னார் வளைகுடாவில் தங்கள் எளிமையான வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்ட புதிய நடைமுறை தொடர்பாக மிகுந்த கவலையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கடந்த 21-ந் தேதி இலங்கை கடற்படையால் அவர்கள் படகுகளோடு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல்பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க செல்பவர்களுக்காக…

Read More

அமைச்சர் அக்பர் ராஜினாமா

அமைச்சர் அக்பர் ராஜினாமா

பெண் பத்திரிக்கையாளர்களின் தொடர் பாலியல் புகார் காரணமாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜெ.அக்பர் ராஜினாமா செய்தார். அக்பர் மீது பெண் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து அவர் மீது அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். பிரியா ரமணிக்கு ஆதரவாக மேலும் 19 பெண் பத்திரிக்கையாளர்கள் அக்பர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். தி ஏசியன் ஏஜ் பத்திரிக்கையில் பணியாற்றிய போது அக்பர் தங்களுக்கும் பாலியல் தொல்லை அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். அக்பர் தொடர்பான வழக்கில் கோர்ட் தங்களின் சாட்சியங்களையும் கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். பிரியா ரமணி தனி ஆள் இல்லை எனவும், தங்களுக்கு அக்பர் அளித்த பாலியல்…

Read More

காவி வேஷ்டியில் ராகுல் பக்தி பரவசம்

காவி வேஷ்டியில் ராகுல் பக்தி பரவசம்

கோவில்கள், மடங்களுக்கு செல்லும் திட்டத்தை குஜராத் சட்டசபை தேர்தலின் போது ராகுல் துவக்கினார். மென்மையான இந்துத்துவா கொள்கையை அவர் பின்பற்றுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. எனினும் அவரது போக்கில் எந்த மாற்றமும் இல்லை. இந்த ஆண்டு இறுதியில், ராஜஸ்தான், ம.பி., தெலுங்கானா, மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக தன்னை சிவ பக்தராகவே மாற்றிக் கொண்டு விட்டார் ராகுல். ம.பி., மாநிலத்தில் அடுத்த கட்ட பிரசாரத்தை ராகுல் இன்று துவக்கினார். அதில் ஒரு கட்டமாக, தாதியா மாவட்டத்தில் உள்ள பீதம்பரா பீடம் என்ற மடத்திற்கு சென்றார். வெள்ளை நிற குர்தா, காவி வேஷ்டி அணிந்தபடி ராகுல் அங்கு நடந்த சிறப்பு…

Read More

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்

ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, இந்திராணி மற்றும் பீட்டர் சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் மகன் கார்த்தி, ஐஎன்எக்ஸ் நிறுவனத்தின் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரது வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்த வழக்கில் இரண்டு பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது. இந்நிலையில், கார்த்திக்கு சொந்தமான கொடைக்கானல் காட்டேஜ், ஊட்டியில் இரண்டு பங்களாக்கள், ,லண்டன், ஸ்பெயினில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ரூ.90 லட்சம் மதிப்பிலான பிக்சட் டெபாசிட். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.54 கோடி. இந்திராணி முகர்ஜி, பீட்டரின்…

Read More

குஜராத் கலவரம்: காங்கிரசுக்கு சிக்கல்

குஜராத் கலவரம்: காங்கிரசுக்கு சிக்கல்

குஜராத் மாநிலத்தில், பீஹார், உ.பி., மற்றும் ம.பி., மாநில தொழிலாளர்கள் மீது நடந்து வரும் தாக்குதல்களுக்கு காங்., எம்.எல்.ஏ., தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில், பீஹார், உ.பி., மற்றும் ம.பி., மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் பலர் குடும்பங்களுடன் குஜராத் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தும் உள்ளனர். இச்சூழ்நிலையில்,கடந்த செப்., 28 ம் தேதி குஜராத்தில் ஹிமத்நகர் என்ற இடத்தில், 14 வயது சிறுமியை பீஹார் ஆசாமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவத்திற்கு பிறகு, வெளி மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக பல…

Read More

ஆர்.கே.நகரில், 20 ரூபாய் நோட்டு கொடுத்து வெற்றி பெற்றது போல், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறமுடியாது

ஆர்.கே.நகரில், 20 ரூபாய் நோட்டு கொடுத்து வெற்றி பெற்றது போல், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறமுடியாது

”ஆர்.கே.நகரில், 20 ரூபாய் நோட்டு கொடுத்து வெற்றி பெற்றது போல், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறமுடியாது,” என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் கூறினார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், மதுரையில் நேற்று நடந்தது. இதில், பேசிய பன்னீர் செல்வம், 2016 தேர்தலில் வெற்றி பெற்றது முதல், அவர் ஆட்சி அமைத்தது வரை நிகழ்வுகளை கூறினார். சசிகலா தரப்பினர், ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற நினைத்ததாகவும், அது நடக்கக்கூடாது என்பதற்காக, முதல்வர் பழனிசாமி ஆட்சிக்கு ஆதரவு அளித்ததாகவும் தெரிவித்தார். தினகரன் குறித்து அவர் பேசியதாவது: ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், இதுவரை மன்னிப்பு கடிதம் கொடுக்கவில்லை.அவர் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைக்கிறார். எங்களை பிரிக்க முடியாது. ஆர்.கே.நகரில்,…

Read More

இந்தியா மீது பொருளாதார தடை : அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியா மீது பொருளாதார தடை : அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்யாவுடன் எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று டில்லி வருகிறார். பிரதமர் மோடியுடன் நாளை அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே சுமார் ரூ.39,000 கோடி மதிப்புடைய ஏவுகணைகள் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது தவிர மேலும் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரஷ்யாவிடமிருந்து போர் ஆயுதங்களை வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட சட்டத்திருத்தம் ரஷ்யா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து போர் ஆயுதங்களை வாங்கும் நாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More

ரன்விர்ஷா பண்ணை வீட்டில் 50க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல்

ரன்விர்ஷா பண்ணை வீட்டில் 50க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல்

காஞ்சிபுரம்: தொழிலதிபர் ரன்ஷிர்ஷா பண்ணை வீட்டில், ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் தலைமையில் நடந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்விர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தி குவியல் குவியலாக தொன்மையான சிலைகளை பறிமுதல் செய்தனர்.  இதனை தொடர்ந்து, ரன்விர் ஷாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. திருவையாறில், அவருக்கு சொந்தமான அரண்மனையில் சோதனை நடந்த நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே மொகல்வாடி என்ற கிராமத்தில் காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 50க்கும் மேற்பட்ட பழங்கால…

Read More
1 103 104 105 106 107 181