கங்கை அமரனிடம் இருந்து பறிக்கப்பட்ட சிறுதாவூர் பங்களாவை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: டிடிவி தினகரனுக்கு எச்.ராஜா வலியுறுத்தல்

கங்கை அமரனிடம் இருந்து பறிக்கப்பட்ட சிறுதாவூர் பங்களாவை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: டிடிவி தினகரனுக்கு எச்.ராஜா வலியுறுத்தல்

கங்கை அமரனிடமிருந்து அடித்து, பிடுங்கப்பட்ட சிறுதாவூர் பங்களாவை திரும்ப அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள கூத்தாநல்லூரில் நேற்று நடைபெற்ற கோ பூஜையில் கலந்துகொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி மேலாண்மை வாரியமோ அல்லது ஏதாவது ஒரு அமைப்போ ஏற்படுத்தும்போது, அந்த அமைப்பில் கருத்தொற்றுமையுடன் 4 மாநிலங்களும் பங்குபெற வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்பதாலேயே உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளது. கடைசி நேரத்தில் ‘ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகியதாக சிலர் குறை கூறுகின்றனர். ராணுவ தொழில்நுட்ப கூடத்தை…

Read More

மாணவிகளுக்கு பாலியல் வலை விவகாரம்; ஆளுநர் அமைத்த விசாரணைக்குழு செல்லாது – ராமதாஸ்

மாணவிகளுக்கு பாலியல் வலை விவகாரம்; ஆளுநர் அமைத்த விசாரணைக்குழு செல்லாது – ராமதாஸ்

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து ஆளுநர் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் அமைத்த விசாரணை ஆணையம் செல்லாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் பதவியில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய அக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும் கூட, இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்பதவியிலுள்ள சில பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளுக்கு தனியார் கல்லூரி மாணவிகளை பலியாக்க உதவிப் பேராசிரியை…

Read More

ஜெ. மகள் எனக் கூறி அம்ருதா வழக்கு; ஏப்.19-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெ. மகள் எனக் கூறி அம்ருதா வழக்கு; ஏப்.19-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா தொடர்ந்த வழக்கில், ஏப்.19-க்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான்தான் என உரிமைக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற இளம்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘ஜெயலலிதாவின் உடலை எங்களது குல வழக்கப்படி இறுதிச் சடங்குகளை செய்து அடக்கம் செய்ய வேண்டும். எனவே அவரது உடலை தோண்டியெடுத்து சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். மேலும் நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என…

Read More

ஐபிஎல்; சேப்பாக்கம் மைதானத்துக்குப் பூட்டு: தடையை மீறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது

ஐபிஎல்; சேப்பாக்கம் மைதானத்துக்குப் பூட்டு: தடையை மீறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் கடுமையான போலீஸ் பாதுகாப்பையும் மீறி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானக் கதவை இழுத்து மூடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆவேசப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று போராடி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காவிரி பிரச்சினைக்காக மக்கள் போராடிவரும் சூழ்நிலையில் இளைஞர்களை திசை திருப்பும் விதமாக ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறக் கூடாது என்ற கோரிக்கையை தமிழ் உணர்வாளர்கள், அரசியல் கட்சிகள் வைத்தனர். ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிடுவோம், வீரர்களை…

Read More

காவரி விவகாரம் மே 3 ந்தேதிக்குள் வரைவு செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

காவரி விவகாரம் மே 3 ந்தேதிக்குள் வரைவு செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

காவிரி விவகாரத்தில் வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு மே 3 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட 4 வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது மாதந்தோறும் காவிரியில் இருந்து எவ்வளவு நீர் திறந்து விட வேண்டுமோ அதை செயல்படுத்த வேண்டும்” * காவிரி வழக்கில் கர்நாடக மாநிலத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. “மேலாண்மை வாரியம் என காவிரி நடுவர் மன்றம் தெரிவித்திருந்தாலும் எங்கள் தீர்ப்பில் செயல்திட்டம் என குறிப்பிட்டுள்ளோம். வரைவு செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது….

Read More

எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா: பின்வாங்கிய ஸ்டாலின்

எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா: பின்வாங்கிய ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரிய பிரச்னையால், தமிழகம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தி.மு.க., இந்த பிரச்னையை வைத்து, தினந்தோறும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்காக, கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் நடைபயணம் துவங்கினார் ஸ்டாலின். முன்னதாக, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ராஜினாமா செய்தால் எப்படி இருக்கும் என்பது குறித்து, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வின் கருத்தையும் ஸ்டாலின் அறிய முயன்றிருக்கிறார். சில எம்.எல்.ஏ.,க்கள் தவிர்த்து மற்ற எம்.எல்.ஏ.,க்கள், ராஜினாமா செய்ய விரும்பவில்லை என்ற தகவல் கேட்டு அதிர்ந்து போய் விட்டாராம். இல்லையென்றால், நடைபயணத்தின் போது, காவிரிப் பிரச்னைக்காக, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்யத் தயார் என்ற அறிவிப்பை, ஸ்டாலின் வெளியிட இருந்ததாகக் கூறப்படுகிறது.

Read More

பாராளுமன்றம் முடக்கம்: பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் ரூ. 3.66 கோடி சம்பளத்தை பெற மாட்டார்கள் என அறிவிப்பு

பாராளுமன்றம் முடக்கம்: பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் ரூ. 3.66 கோடி சம்பளத்தை பெற மாட்டார்கள் என அறிவிப்பு

பாராளுமன்றம் முடங்கிய நிலையில் பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் சம்பளத்தை பெற மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக செயல்படாமல் முடங்கியது. பாராளுமன்றம் 23 நாட்களும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக செயல்படாமல் முடங்கியது. பாராளுமன்றம் முடங்கியது காரணமாக இந்த 23 நாட்களுக்கான சம்பளம் 3.66 கோடியை பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் பெற மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய மந்திரி ஆனந்த் குமார் பேசுகையில், பா.ஜனதா கூட்டணியை சேர்ந்த 400 எம்.பி.க்கள் தங்களுடைய சம்பள பணத்தை பெற மாட்டார்கள் என தெரிவித்து உள்ளார். பாராளுமன்றம் முடக்கம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை…

Read More

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், தமிழகம் போராட்ட களமாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் உச்சக்கட்ட நிகழ்வாக, தஞ்சை மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தேசியக் கொடியை எரித்து, அந்த படத்தை வாட்ஸ் அப்பில் வெளியிட்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு சுங்கவரி செலுத்த மாட்டோம் என்று கூறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர். இதனால்…

Read More

மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்: முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் பங்கேற்பு

மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்: முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் பங்கேற்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்போர் பட்டியல் அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரி, காரைக்காலிலும் அ.தி.மு.க. அறிவித்த உண்ணாவிரத போராட்டம் அங்குள்ள நிர்வாகிகள் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. முதல்வர், துணைமுதல்வர் பங்கேற்பு சென்னை சேப்பாக்கம் விருந்தினர்…

Read More

“வானொலிகளில் அப்பட்டமான இந்தித் திணிப்பு”: ராமதாஸ் கடும் கண்டனம்

“வானொலிகளில் அப்பட்டமான இந்தித் திணிப்பு”: ராமதாஸ் கடும் கண்டனம்

தமிழ்நாட்டிலுள்ள உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் இந்தி மொழி நிகழ்ச்சிகள் அதிகரிக்கப்பட்டு, தமிழ் நிகழ்ச்சிகள் திட்டமிட்டும், அப்பட்டமாகவும் குறைக்கப்பட்டு வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் இந்தி மொழி நிகழ்ச்சிகளின் அளவு அண்மை காலங்களில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் திட்டமிட்டும், அப்பட்டமாகவும் குறைக்கப்பட்டு வருகின்றன. இது கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாட்டு மக்களை எந்த நேரமும் பரபரப்பாகவும், பதற்றமாகவும் இருக்கும் சூழலுக்கு ஆளாக்கிவிட்டு, அவர்கள் கவனம் முழுவதும் அதில் இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள சென்னை,…

Read More
1 112 113 114 115 116 181