உ.பி.யில் போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து ரவுடிகள் சரண்

உ.பி.யில் போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து ரவுடிகள் சரண்

உ.பி.யில் போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து ரவுடிகள் பலரும் வரிசைகட்டி வந்து போலீஸ் ஸ்டசேனில் சரணடைந்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பெற்ற நாள் முதல் ரவுடிகள், மற்றும் கிரிமினல்கள் மீதான நடவடிக்கை இறுகியது. இம்மாநிலத்தில் கடந்த மார்ச் 2017-ம் ஆண்டு முதல் ஜனவரி 2018-ம் ஆண்டு 1144 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இதில் 34 கிரிமினல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர், 2744 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலையில் கடுமையான குற்றங்களை செய்துவரும் ரவுடிகளை அம்மாநில போலீசார் என்கவுண்டர் முறையில் சுட்டு வீழ்த்தி வருவதை அறிந்த குற்றவாளிகள் போலீஸ் நியைங்களில் சரணடைந்து வரத்துங்கியுள்ளனர். மேலும் தங்களது ஜாமீன் கோரிக்கையையும் நிராகரித்து வருகின்றனர். இது குறித்து இன்ஸ்பெக்டர்…

Read More

காவிரி வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும் : வட்டாள் நாகராஜ்

காவிரி வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும் : வட்டாள் நாகராஜ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.,க்களின் தொடர் போராட்டம் காரணமாக பார்லி., 18 வது நாளாக இன்றும் முடங்கி உள்ளது. இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கன்னட கூட்டமைப்புக்களின் தலைவர் வட்டாள் நாகராஜ், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும். காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்கின்றன. அதற்கு எதிராக ஏப்ரல் 5 ல் கர்நாடகாவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.

Read More

இந்தியர்களின் தகவல்கள் வெளியானது தொடர்பாக பேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியர்களின் தகவல்கள் வெளியானது தொடர்பாக பேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியர்களின் தகவல்கள் வெளியானது என்பது தொடர்பாக விளக்கம் கோரி பேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ் விடுத்து உள்ளது. ‘பேஸ்புக்’ பயனாளர்கள் 5 கோடிப்பேரின் தனிப்பட்ட தகவல்கள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தல்களின்போது திருடப்பட்டு உள்ளன. இந்த திருட்டில் ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ என்னும் தேர்தல் தகவல்கள், தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதை ‘பேஸ்புக்’ நிறுவனர் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதுடன், இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உறுதி அளித்தார். இந்திய அரசியலிலும் இப்பிரச்சனை புயலை ஏற்படுத்தி உள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுடன் தொடர்பு என காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகிறார்கள். “இந்தியர்களின்…

Read More

கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மே மாதம் இறுதியில் சித்தராமையாவின் ஆட்சி முடிவடைகிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி உள்ளது. கர்நாடகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. அதாவது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி…

Read More

‘சோட்டா பீம்’ க்கு கூட தெரியும்: ஸ்மிருதி கிண்டல்

‘சோட்டா பீம்’ க்கு கூட தெரியும்: ஸ்மிருதி கிண்டல்

பிரதமர் மோடி இந்தியர்களை உளவு பார்க்கும் பிக்பாஸ் என காங் தலைவர் ராகுல் கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராகுலை கிண்டல் அடித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இப்போதாவது என்சிசி பற்றி அறிய செய்ததற்காக நமோ ஆப்பிற்கு நன்றி சொல்லுங்கள் மதிப்பிற்குரிய ராகுல் ஜி. ஆப்கள் மூலம் தகவல்கள் கசியாது என்பது ‘சோட்டா பீம்’ க்கு கூட தெரியும். உங்களுக்கு தெரியாதா ராகுல் ஜி. நாங்கள் தொழில்நுட்பத்தை பற்றி பேசுகிறோம். காங்., சிங்கப்பூர் சர்வர்களுக்கு எதற்காக தகவல்களை அனுப்பியது என்பதற்கு பதிலளிப்பது பற்றி நீங்கள் அக்கறை காட்டுங்கள். அந்த சர்வர்களை நிர்வகிப்பது எந்த டாம், டிக் மற்றும்…

Read More

மக்கள் பிரச்னை தெரியாத ‛ரஜினி’- கருத்து கந்தசாமி ‛கமல்’: பன்னீர் விளாசல்

மக்கள் பிரச்னை தெரியாத ‛ரஜினி’- கருத்து கந்தசாமி ‛கமல்’: பன்னீர் விளாசல்

ஆட்சி ஒராண்டு கடந்து இருப்பது நம்மை எதிர்ப்பவர்களுக்கு முதல் அதிர்ச்சியாக உள்ளது என துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார் சென்னையில் நடைபெற்ற முதல்வர் பழனிசாமி அரசின் ஓராண்டு சாதனை விழாவில்துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது: எங்களுக்கு குழி பறிக்க நினைப்பவர்களை விடமாட்டோம்.தனக்கு வந்த சோதைனையை எதிர் நீச்சல் போட்டு கடந்து வந்துள்ளார் முதல்வர் பழனிசாமி . அவருக்குஉறுதுணையாக நிற்போம். கமல் ரஜினி மீது விமர்சனம் அரசியலுக்கு புதிது புதிதாக வருகிறார்கள். மக்கள் பிரச்னை பற்றி சிந்திக்காதவர்கள் சிஸ்டம் பற்றி சிந்திக்கிறார்கள் என நடிகர் ரஜினிகாந்த் மீது குற்றம் சாட்டினார். மேலும் சிலர் கருத்து கந்தசாமிகளாகவும் இருப்பதாக நடிகர் கமல் மீதும் குற்றம் சாட்டினார்….

Read More

36,000 கோயில்களில் கடைகளை அகற்ற உத்தரவு

36,000 கோயில்களில் கடைகளை அகற்ற உத்தரவு

தமிழகம் முழுவதிலும் உள்ள 36,000 கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்ற மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில், கோயில் வளாகங்களில் வணிக நோக்கத்துடன் செயல்படும் கடைகளை அகற்ற வேண்டும். இதனை இந்து சமய அறநிலையத்துறை கண்காணிக்க வேண்டும். 8 வாரங்களுக்குள் கோயில் செயல் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி அடிவாரத்தில் உள்ள கடைகளை அகற்றக்கோரி 7 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Read More

தமிழக கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து

தமிழக கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து

சிறப்பு செயல்படும் 60 மத்திய, மாநில, தனியார் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து சிறப்பு அந்தஸ்து வழங்க யுஜிசி முடிவு செய்துள்ளது. இவற்றில் 9 கல்வி நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்தவை. சென்னை அண்ணா பல்கலை, காரைக்குடி அழகப்பா பல்கலை, சென்னை ராமச்சந்திரா மருத்துவ பல்கலை, தஞ்சாவூர் சாஸ்தா பல்கலை, சென்னை எஸ்ஆர்எம் பல்கலை, வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, கோவை அம்ரிதா விஸ்வ வித்யா பீடம், சென்னை டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி கழகம், சென்னை மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், ஆகியவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு மனித…

Read More

எம்.பி.,க்கள் சம்பளம் ‘கட்’: பா.ஜ., யோசனைக்கு டிஆர்எஸ் பாராட்டு

எம்.பி.,க்கள் சம்பளம் ‘கட்’: பா.ஜ., யோசனைக்கு டிஆர்எஸ் பாராட்டு

எம்.பி.,க்களின் கடும் அமளி காரணமாக தொடர்ந்து 13 வது நாளாக பார்லி.,யின் இரு அவைகளும் இன்றும் முடங்கி உள்ளன. இந்நிலையில், மக்கள் பிரதிநிதிகள் என்பதை மறந்து, தங்களின் பொறுப்புக்களை உணராமல், அவையை ஆக்கபூர்வமாக செயல்பட விடாமல் செய்யும் எம்.பி.,க்களுக்கு சம்பளம் தரக் கூடாது. வேலை செய்யாத எம்.பி.,க்களுக்கும் தண்டனையாக சம்பளம் தரக் கூடாது என பரிந்துரைத்து பா.ஜ., எம்.பி., மனோஜ் திவாரி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதி உள்ளார். இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி., கவிதா, அன்றாட பிரச்னைகள் குறித்து அரசு தினமும் விவாதித்தால் பார்லி.,யில் எந்த கட்சியோ எம்.பி.,யோ போராட அவசியம் இருக்காது. இருப்பினும் அரசு வேலை…

Read More

பலத்த எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் நுழைந்தது ரத யாத்திரை: பல்வேறு இடங்களில் போராட்டம்

பலத்த எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் நுழைந்தது ரத யாத்திரை: பல்வேறு இடங்களில் போராட்டம்

திமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரின் எதிர்ப்பையும், போராட்டங்களையும் மீறி, விஷ்வ இந்து பரிஷத்தின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தமிழகத்திற்குள் பலத்த பாதுகாப்புடன் நுழைந்தது. மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற்ற விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை, நெல்லை மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் நுழைவதற்கு திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்கள் எதிர்ப்பை மீறி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழையவிட மாட்டோம் எனவும் அக்கட்சியினர் தெரிவித்திருந்தனர். இதனால், நெல்லை மாவட்டத்தில் மார்ச் 19 முதல் 23 வரை 5 நாட்களுக்கு…

Read More
1 113 114 115 116 117 181