மதுவிலக்கு பிரச்சினையில் கமல் கருத்து பெண்களுக்கு எதிரானது: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

மதுவிலக்கு பிரச்சினையில் கமல் கருத்து பெண்களுக்கு எதிரானது: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

மதுவிலக்கு விவகாரத்தில் கமல் கருத்து பெண்களுக்கு எதிரானது என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார். பாரதிய ஜனதா கட்சியின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் தேவகோட்டையில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் என்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். நகர தலைவர் பஞ்சநாதன் வரவேற்றார். இதில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் பேசினர். பின்னர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊழல் செய்தது கார்த்தி சிதம்பரம் மட்டுமல்ல. அவரது தந்தை ப.சிதம்பரமும், காங்கிரஸ் கட்சியும் தான். ஆறு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்குள் தவறான கருத்துக்களை சிலர் கூறுகின்றனர். மதுவிலக்கு பிரச்சினையில் பெண்களுக்கு…

Read More

மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை கட்ட நிறுவனம் தேர்வு

மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை கட்ட நிறுவனம் தேர்வு

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, டிசம்பர் 6-ந்தேதி அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு ரூ.43.63 கோடி செலவில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு கடந்த ஜனவரி 12-ந்தேதி பொதுப்பணித்துறை டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 21-ந்தேதி வரை ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்ய கால அவகாசத்தை பொதுப்பணித்துறை நீட்டித்திருந்தது. இந்தபணியில் ஈடுபடுவதற்காக கிருஷ்ணமூர்த்தி நிறுவனம், பி.எஸ்.கே நிறுவனம், வெங்கடாஜலபதி நிறுவனம், மாணிக்கம் நிறுவனம், ராஜதுரை நிறுவனம் ஆகிய 5 கட்டுமான நிறுவனங்கள்…

Read More

காவிரி வாரியம் பற்றி பிரதமருடன் சந்திப்பு எப்போது? காத்திருந்து ஏமாந்து விடக்கூடாது: ராமதாஸ் எச்சரிக்கை

காவிரி வாரியம் பற்றி பிரதமருடன் சந்திப்பு எப்போது? காத்திருந்து ஏமாந்து விடக்கூடாது: ராமதாஸ் எச்சரிக்கை

காவிரி வாரியம் அமைப்பது பற்றி முடிவு எட்டி 9 நாட்களாகியும் பிரதமரைச் சந்திப்பதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவதென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுத்து இன்றுடன் 9 நாட்களாகி விட்டன. ஆனால், பிரதமரை சந்திப்பதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாதது மிகவும் கவலையளிக்கிறது. காவிரிப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி…

Read More

தமிழக அரசியலில் ‘‘புதிய கட்சிகள் உருவாவது காலத்தின் கட்டாயம்’’ டி.ராஜேந்தர் அறிக்கை

தமிழக அரசியலில் ‘‘புதிய கட்சிகள் உருவாவது காலத்தின் கட்டாயம்’’ டி.ராஜேந்தர் அறிக்கை

‘‘தமிழக அரசியலில் புதிய கட்சிகள் உருவாவது காலத்தின் கட்டாயம்’’ என்று டி.ராஜேந்தர் கூறினார். லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘தமிழக அரசியலில் இன்றைய சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். இல்லை. ஜெயலலிதாவும் இல்லை. தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் ரீதியாக சற்று பாதிக்கப்பட்டு இருக்கிறார். கருணாநிதியிடம் ஆசிபெற்று சிலர் புதிதாக கட்சி தொடங்குகிறார்கள். இது காலத்தின் கட்டாயம். கருணாநிதி இக்கட்டாக இருந்த கால கட்டத்தில், 1984–ம் ஆண்டு எனது 28–வது வயதில் அவர் முடங்கிவிடக்கூடாது என்பதற்காக, அவரது தொண்டனாக எனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினேன். வைகோ தி.மு.க.வை உடைத்தபோது, கருணாநிதி என்னை அழைத்தபோது, கழகத்தின் நலனுக்காக ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நான் அரும்பாடுபட்டு நடத்திய…

Read More

மெகா ஊழல் குறித்த ஆதாரங்களை, விரைவில் வெற்றிவேல் வெளியிடுவார் – தினகரன் பரபரப்பு தகவல்

மெகா ஊழல் குறித்த ஆதாரங்களை, விரைவில் வெற்றிவேல் வெளியிடுவார் – தினகரன் பரபரப்பு தகவல்

மெகா ஊழல் குறித்த ஆதாரங்களை, விரைவில் வெற்றிவேல் வெளியிடுவார் என்று டிடிவிதினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் செய்தியார்களிடம் கூறியதாவது: மெகா ஊழல் குறித்த ஆதாரங்களை, விரைவில் வெற்றிவேல் வெளியிடுவார் * விசாரணை ஆணையம் மூலமே ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மை வெளிவரும். * விசாரிக்கப்பட வேண்டியவர்களை, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்னும் விசாரிக்கவில்லை. * வெளியிடப்பட்ட சிகிச்சை வீடியோ, ஜெயலலிதா கேட்டு சசிகலா எடுத்தது. * நாளை முதல் விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை

கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு விதிகளை மீறி அந்நிய முதலீடுகளை பெற்று தந்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. லண்டனில் இருந்து இன்று காலை சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விமான நிலையத்தில் கைது செய்தனர். ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கார்த்தி ஒத்துழைக்கவில்லை எனக்கூறி, அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு தற்போது சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை வைத்து உள்ளது. 22 மணி…

Read More

டிடிவி ஆதரவாளர்கள் அதிமுக கரைவேட்டி கட்டியிருந்தால் உருவுங்கள்: அமைச்சர் மணிகண்டன் ஆவேசம்

டிடிவி ஆதரவாளர்கள் அதிமுக கரைவேட்டி கட்டியிருந்தால் உருவுங்கள்: அமைச்சர் மணிகண்டன் ஆவேசம்

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வேட்டியை உருவுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் மணிகண்டன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரன் அணியினர் நாளுக்கு நாள் வேகம் பெற்று வருவது அதிமுக அமைச்சர்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. திமுக, அதிமுக மோதல் என்பதை விட டிடிவி அணியினர், அதிமுக அமைச்சர்கள் சொல்லாடல் பேசுபொருளாகி வருகிறது. தனிப்பட்ட முறையில் பேய், பிசாசு, பைத்தியம், கீழ்ப்பாக்கம் கேசு என்று திட்டும் அளவுக்கு தரம் தாழ்ந்த விமர்சனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ராமநாதபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மணிகண்டன் டிடிவி ஆட்கள் குறித்து பேசும்போது ஆவேசமானார். அதிமுக கட்சிக்கொடி, கரைவேட்டி கட்ட நீங்கள் யாருடா என ஒருமையில் பேசிய…

Read More

காவிரி மேலாண்மை வாரியம் விரைவாக அமைக்க இயலாது: நிதின் கட்கரி திட்டவட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் விரைவாக அமைக்க இயலாது: நிதின் கட்கரி திட்டவட்டம்

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது போல், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைப்பது இயலாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னைக்கு நேற்று வந்திருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”தமிழகம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் உள்ள தண்ணீர் பிரச்சினை குறித்து மிகுந்த அக்கறையாகவும், எச்சரிக்கையாக மத்திய அரசு இருக்கிறது, தண்ணீர் பிரச்சினையை உணர்வுப்பூர்வமாகவும் அரசு பார்க்கிறது. காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அரசு மதிக்கிறது. கர்நாடகமும், தமிழகமும் எங்களுக்கு இரு கண்கள் போன்றவை. இரு மாநிலங்களுக்கும் நீர்…

Read More

ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி: சென்னை விழாவில் மோடி பேச்சு

ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி: சென்னை விழாவில் மோடி பேச்சு

ஜெயலலிதாவின் கனவு திட்டமான மகளிருக்கு மானிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி என்று பிரதமர் மோடி பேசினார். ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டம் மற்றும் 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஆகியவற்றை மோடி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கி வைத்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மோடி சென்னைக்கு வருகை புரிந்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய…

Read More

கெஜ்ரிவாலை வைத்து கட்சி தொடங்குவதா? கமல்ஹாசனுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

கெஜ்ரிவாலை வைத்து கட்சி தொடங்குவதா? கமல்ஹாசனுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியிருப்பதற்கு வாழ்த்துகள். இடதுசாரிகள் திராவிடத்தை ஏற்றுக்கொண்டனரா? கொச்சையான முறையில் திராவிடத்தை பரிமாறி இருப்பது நமக்கெல்லாம் அவமானம். தமிழர்கள் மற்றும் அவர்களின் தன்மானத்தை எல்லாம் இந்த நேரத்தில் அடுத்த மாநில முதல்வர்கள் சொல்லி தருகிறார்கள். கெஜ்ரிவாலுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம். தமிழ் பற்றியும், தமிழகம் பற்றியும் ஒன்றுமே தெரியாத கெஜ்ரிவாலை வைத்து கமல்ஹாசன் கட்சி தொடங்கியிருப்பது தமிழகத்திற்கு அவமானம். கமல்ஹாசனை பற்றி ஒருவர் காகிதப்பூ மணக்காது என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், தன்னை விதை என்று கூறியுள்ளார். அப்படியென்றால் கமல்ஹாசனை காகித விதை என்று சொல்லலாமா? என்னை பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தின் வளர்ச்சி என்று பார்த்தால் ஏமாற்றம்தான்.

Read More
1 117 118 119 120 121 181