பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாட்டுவண்டியில் வந்தார் முதல்வர்
புதுச்சேரியில் மாட்டு வண்டியில் அமர்ந்து முதல்வர், அமைச்சர். ஆகியோர் ஊர்வலமாக வந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மத்திய அரசின் செயல்பாட்டின் காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதையடுத்து நேற்று இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாட்டு வண்டி ஊர்வலம் வெங்கட சுப்பா ரெட்டியார் சிலையின் அருகில் துவங்கியது. துவக்கத்திலேயே மாட்டு வண்டியில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி மற்றும் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்து வந்தனர். மொத்தம் 8 மாட்டு வண்டிகள் அணிவகுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று தலைமை தபால் நிலையத்தில் நிறைவடைந்தது. அங்கு பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் உயர்த்தி வரும் மத்திய…
Read More









