காலிஸ்தான் பிரிவினைவாதியுடன் கனடா பிரதமரின் மனைவி புகைப்படம் எடுத்துக் கொண்டதால் சர்ச்சை

காலிஸ்தான் பிரிவினைவாதியுடன் கனடா பிரதமரின் மனைவி புகைப்படம் எடுத்துக் கொண்டதால் சர்ச்சை

இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஜஸ்பால் அத்வாலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பஞ்சாப் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அப்போது, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்று அவர் வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புக்கு கனடாவிலிருந்து செயல்படும் சில சக்திகள் ஆயுத,…

Read More

தமிழகத்தில் தற்போது நேர்மையான அரசியல் கட்சி உருவாகி உள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

தமிழகத்தில் தற்போது நேர்மையான அரசியல் கட்சி உருவாகி உள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

நடிகர் கமல்ஹாசன் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்து வைத்தார். கட்சியின் பெயர் ”மக்கள் நீதி மய்யம் ” என்று கட்சியின் பெயரை அறிமுகம் செய்து வைத்தார். கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது: கமல் நேர்மையானவர் மட்டும் அல்ல, துணிச்சாலனவரும் ஆவார். பள்ளிகள், மருத்துவமனைகள் வேண்டும் என்றால் கமலஹாசனை ஆதரியுங்கள். தமிழகத்தில் தற்போது நேர்மையான அரசியல் கட்சி உருவாகி உள்ளது. அதிமுக, திமுக என்ற இரு கட்சிகளுக்கு இடையே தமிழகம் சிக்கி தவிக்கிறது. ஊழல் வேண்டும் என்றால் திமுக, அதிமுகவை ஆதரியுங்கள். நேர்மையான அரசு இருந்தால் அனைத்தும் சாத்தியம்….

Read More

பழனிசாமி – ராதாகிருஷ்ணன் சந்திப்பு : மோடி வருகை குறித்து ஆலோசனை

பழனிசாமி – ராதாகிருஷ்ணன் சந்திப்பு : மோடி வருகை குறித்து ஆலோசனை

தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த, மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று திடீரென முதல்வர் பழனிசாமியை, அவரது வீட்டில் சந்தித்து பேசினார். தமிழகத்தில், ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.,விற்கும், மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள, பா.ஜ.,விற்கும் இடையே, ஜெ., மறைவுக்கு பின், நெருக்கம் அதிகமானது. பிரதமர் மோடி, அ.தி.மு.க.,வை ஆட்டுவிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த சூழ்நிலையில், சமீப காலமாக, இரு கட்சிகளுக்கும் இடையே, இடைவெளி உருவானது. தமிழக பா.ஜ., தலைவர்கள், தமிழக அரசை விமர்சிப்பதும், அவர்களுக்கு, அமைச்சர்கள் பதிலடி கொடுப்பதும் அதிகரித்தது. இவற்றுக்கு சிகரம் வைப்பது போல், ‘தமிழகத்தில், பயங்கரவாத பயிற்சி முகாம்கள் நடக்கின்றன’ என, மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். இது,…

Read More

அரசியல் பயணத்தை கலாம் நினைவிடத்தில் இருந்து கமல்ஹாசன் தொடங்கக் கூடாது-பொன்.ராதாகிருஷ்ணன்

அரசியல் பயணத்தை கலாம் நினைவிடத்தில் இருந்து கமல்ஹாசன் தொடங்கக் கூடாது-பொன்.ராதாகிருஷ்ணன்

நடிகர் கமல்ஹாசன் புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறார். அரசியல் அடி எடுத்து வைக்கும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ராமேசுவரத்தில் இருந்து அவர் தன் பயணத்தை தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சி. அதே சமயம் அவருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்க வேண்டாம். அப்துல் கலாம் நினைவிடம் அரசியலுக்கு அப்பாற்பட்டு தேசிய அடையாளமாக விளங்கும் இடம். நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் நாம் சிலரையாவது விட்டு வைக்க வேண்டும். அதில் முதலில் இருப்பவர் அப்துல் கலாம். கமல்ஹாசன் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். நான் மத்திய மந்திரியாக இருப்பதால் என்னை சந்திக்க வேண்டாம் என்று…

Read More

பாஜக – அதிமுக மோதல் முற்றுகிறது: ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஓபிஎஸ் பதிலடி

பாஜக – அதிமுக மோதல் முற்றுகிறது: ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஓபிஎஸ் பதிலடி

அதிமுக, பாஜக இடையே மோதல் வெடிக்கத் தொடங்கி உள்ளது. இரண்டு தரப்பிலும் வார்த்தைப்போரில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறியுள்ளதற்கு ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யை கூறுவதாக ஓபிஎஸ் கூறியுள்ளார். பாஜக – அதிமுக இடையே நிலவி வந்த நட்பில் தற்போது விரிசல் ஏற்படத் தொடங்கி உள்ளது. மாநில அரசுக்கு எதிராக பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்வதும், மத்திய அரசுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் விமர்சனம் செய்வதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மீனாட்சி அம்மன் கோவில் தீப்பிடித்த விவகாரத்தில் பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை போன்றோர் கடும் விமர்சனத்தை அரசுக்கு எதிராக வைத்தனர். எச்.ராஜா ஒருபடி மேலே சென்று இந்து அறநிலையத்துறைக்கு…

Read More

ம.பி.,யில் ஆட்சியை பிடிக்க வாஸ்து தோஷம் கழித்த காங்.,

ம.பி.,யில் ஆட்சியை பிடிக்க வாஸ்து தோஷம் கழித்த காங்.,

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், காங்., கட்சியின் தலைமை அலுவலகத்தில், வாஸ்து தோஷம் இருப்பதாக, நிபுணர்கள் கூறியதை அடுத்து, அங்கிருந்த மூன்று கழிப்பறைகள் இடித்து தள்ளப்பட்டுள்ளன. ‘இதன் மூலம், விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், காங்., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’ என, அந்த கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த, 14 ஆண்டு களாக, இங்கு, பா.ஜ., தான் ஆட்சி நடத்துகிறது. அடுத்த சில மாதங்களில், இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும் கட்சியான, பா.ஜ., எதிர்க்கட்சியான, காங்கிரஸ் ஆகியவை, தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளன. காங்கிரஸ் தலைவர்கள், வாஸ்து நிபுணர்களை…

Read More

பா.ஜ.,வுக்கு எதிராக போர்: தெலுங்குதேசம்

பா.ஜ.,வுக்கு எதிராக போர்: தெலுங்குதேசம்

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிக்கப்பட்டுள்ளதால், பா.ஜ.,வுக்கு எதிராக போர் துவக்க போவதாக தெலுங்கு தேச கட்சி கூறியுள்ளது. மத்திய பட்ஜெட்டில், ஆந்திர அரசுக்கென பிரத்யேக திட்டங்கள் எதுவும் இடம்பெறாததால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆத்திரம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவாதிக்க, 4ம் தேதி, தெலுங்கு தேச கட்சியின் அவசர கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இந்நிலையில், தெலுங்குதேச கட்சி எம்.பி., வெங்கடேஷ் கூறியதாவது: பா.ஜ.,வுக்கு எதிராக போர் அறிவிக்க உள்ளோம். எங்களுக்கு மூன்று வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று தொடர்ந்து முயற்சி செய்வது. இரண்டாவது எம்.பி.,க்கள் ராஜினாமா…

Read More

பட்ஜெட் 2018: அருண் ஜேட்லியின் ‘ஹிங்கிலிஷ் விங்கிலிஷ்’ – நெட்டிசன்களின் விமர்சனம்

பட்ஜெட் 2018: அருண் ஜேட்லியின் ‘ஹிங்கிலிஷ் விங்கிலிஷ்’ – நெட்டிசன்களின் விமர்சனம்

மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி மரபை உடைக்கும் விதமாக ஹிந்தி-ஆங்கிலம் கலந்த உரையில் தாக்கல் செய்தார், அருண் ஜேட்லியின் இந்த ‘ஹிங்கிலிஷ் விங்கிலிஷ்’ சமூக வலைத்தள வாசிகளின் கேலிப்பார்வைக்கு உரியதானது. பட்ஜெட் உரையில் முதன் முதலாக ஹிந்தி மொழியையும் சேர்த்து ஆங்கிலம் கலந்து பேசினார். பாஜகவின் முக்கிய தொகுதிகளான வடமாநில மக்களை ஈர்க்கும் விதமான ஒரு உத்தியாகும் இது. விவசாயிகளை மையப்படுத்தும் பட்ஜெட் என்பதால் அவர்களுக்கும் புரியும் விதமாக ஹிந்தி மொழியிலும் உரையாற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால் சமூகவலைத்தள வாசிகளோ எவ்வளவு விவசாயிகளுக்கு ஹிந்தி மொழி கூட புரியும் என்று கேட்டுள்ளனர். நெட்டிசன்களின் விமர்சனங்கள் இதோ: தங்கதுரை: சில வேளைகளில் ஹிந்தியன்களுக்கு…

Read More

இந்திய பட்ஜெட்: ஆதரவும் எதிர்ப்பும்

இந்திய பட்ஜெட்: ஆதரவும் எதிர்ப்பும்

இந்திய பட்ஜெட், சாமான்யர்களுக்கான பட்ஜெட் என பிரதமர் மோடி கூறினார். மத்திய பட்ஜெட் தொடர்பாக, பிரதமர் மோடி, டிவி மூலம் ஆற்றிய உரை; பட்ஜெட் புதிய இந்தியாவை வலிமைபடுத்துவதாகவும், வளர்ச்சியை வேகப்படுத்துவதாகவும் உள்ளது. 125 கோடி மக்களுக்கான பட்ஜெட்டாக உள்ளது. மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும்.விவசாயிகளின் அச்சம் போக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. விளைபொருட்களை விற்பனை மையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்ல வழிவகுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 10 கோடி ஏழைகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ்…

Read More

ராகுலின் சட்டை விலை ரூ.70,000?

ராகுலின் சட்டை விலை ரூ.70,000?

ஷில்லாங் : நாகாலாந்து மாநிலத்துடன் சேர்த்து, 60 இடங்களைக் கொண்ட மேகாலயாவிற்கு பிப்ரவரி 27 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களை கவருவதற்காக காங்.,சார்பில் அமைதி தொடர்பான இசை நிகழ்ச்சி ஷில்லாங்கில் நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்., தலைவர் ராகுல், நீல நிற பேண்ட்டும், கறுப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். கடுமையான குளிரையும் தாங்கக் கூடிய இந்த ஜாக்கெட், சொகுசு உடைகளை விற்பனை செய்யும் பிரிஷ்டிஷின் பர்பெர்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது ஆகும். இந்த ஜாக்கெட்டின் விலை ரூ.68,145 என பூமிங்டேல்ஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராகுலின் இந்த காஸ்ட்லி உடை தொடர்பாக மேகாலயா பா.ஜ., டுவிட்டர் பக்கத்தில் ராகுலின் போட்டோவுடன் கருத்து…

Read More
1 118 119 120 121 122 181