ஆண்டாள் நாச்சியாரை தரக்குறைவாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மெரினாவில் போராட்டம்

ஆண்டாள் நாச்சியாரை தரக்குறைவாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மெரினாவில் போராட்டம்

‘பிழைப்பிற்காக பெண்களை வர்ணித்து பாட்டு எழுதும் வைரமுத்துவுக்கு, ஆண்டாள் குறித்து அவதுாறு பேச எந்த தகுதியும் இல்லை. அவர், மன்னிப்பு கேட்காவிட்டால், மெரினாவில் மீண்டும் போராட்டம் வெடிக்கும்’ என, இந்து மக்கள் கூட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டது. சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், பாடலாசிரியர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசினார். இதற்கு, இந்துக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் முழுவதும், போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக, ‘வாழ்க இந்து நீதி தர்மம்’ எனும் தலைப்பில் ஜீயர்கள், மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள், இந்து அமைப்புகள், ஆன்மிக நல விரும்பிகள் பங்கேற்ற பிரமாண்ட கூட்டம், சென்னை, அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்று நடந்தது. இதில்…

Read More

கர்நாடகாவின் பிடிவாதத்தால் கருகும் 10 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள்; தமிழக விவசாயிகளும் இந்தியக் குடிமக்கள் தான்: ராமதாஸ் கண்டனம்

கர்நாடகாவின் பிடிவாதத்தால் கருகும் 10 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள்; தமிழக விவசாயிகளும் இந்தியக் குடிமக்கள் தான்: ராமதாஸ் கண்டனம்

கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தர மறுப்பதால் 10 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளும் இந்திய குடிமக்கள் தான் என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: “மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால், காவிரிப் பாசன மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பருவ நெல் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. கருகும் பயிர்களைக் காக்க காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்த வேண்டுகோளை ஏற்க கர்நாடக முதல்வர் மறுத்து விட்டார். தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர்…

Read More

ஆர்.கே.நகர் தோல்வி: திமுக ‛சால்ஜாப்பு’

ஆர்.கே.நகர் தோல்வி: திமுக ‛சால்ஜாப்பு’

சென்னை, ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., படுதோல்வி அடைந்து டிபாசிட்டையும் பறிகொடுத்தது. இது குறித்து, கட்சியின் பல்வேறு மட்டங்களிலும், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குறித்த விமர்சனங்கள் கடுமையாக உள்ளன.இதையடுத்து, ஸ்டாலின் தரப்பினர் தேர்தலுக்கு முன் என்ன நினைத்து, இடைத்தேர்தலை எதிர்கொண்டது, என்பது குறித்து, கட்சியின் பல மட்டத் தலைவர்களிடமும் எடுத்துக் கூறி வருகின்றனர்.அவர்கள் கூறி வருவதாவது:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம்தான் பிரதானம் என்பதை தி.மு.க., முன் கூட்டியே கணித்து விட்டது. அதனால், பணத்தை வாரி இறைக்கத் திட்டம் தீட்டிய மதுசூதனன் மற்றும் தினகரனோடு பணம் கொடுத்து போட்டிப் போட வேண்டியதில்லை என முடிவெடுக்கப்பட்டு விட்டது. அதனால்தான், கடைசி வரை, தி.மு.க., சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.எப்படி…

Read More

கனிமொழி, வைரமுத்து மீது குவியும் புகார்கள்

கனிமொழி, வைரமுத்து மீது குவியும் புகார்கள்

பெருமாள் மற்றும் ஆண்டாள் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த, தி.மு.க., – எம்.பி., கனிமொழி மற்றும் வைரமுத்து மீது போலீசில், பலர் புகார் அளித்து வருகின்றனர். சமீபத்தில், திருச்சியில் நடந்த மாநாடு ஒன்றில், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜ்ய சபா, எம்.பி., கனிமொழி, ”திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இல்லை,” என, பேசியுள்ளார். அதேபோல, சினிமா பாடலாசிரியர், வைரமுத்து, திருப்பாவை அருளிய ஆண்டாள் பற்றி, தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது; வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், இந்து முன்னணி நிர்வாகி, முருகேசன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில், ‘பெருமாள் மற்றும் ஆண்டாள் பற்றி தரக்குறைவாக பேசி, இந்துக்களின்…

Read More

இந்தியாவில் 2018-ல் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி தகவல்

இந்தியாவில் 2018-ல் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி தகவல்

வலுவான அரசாக இருந்து கொண்டு விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் இந்தியாவுக்கு அதிக அளவு வளர்ச்சி ஆற்றல் உள்ளதாக தெரிவித்துள்ள உலக வங்கி வரும் 2017-2018 நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி( ஜி.எஸ்.டி) போன்றவற்றால் துவக்கத்தில் பின்னடைவை இந்தியா எதிர்கொண்ட போதிலும், 2017-ல் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டதாகவும் சர்வதேச பொருளாதார முன்னேற்றம் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக வங்கியின் மேம்பாட்டு இயக்குனர் அஹான் கோஸ்…

Read More

எம்எல்ஏக்களின் சம்பளத்தை ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுவதற்கான மசோதா: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்

எம்எல்ஏக்களின் சம்பளத்தை ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுவதற்கான மசோதா: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டசபையில், முதல்வர் பழனிசாமி, எம்.எல்.ஏ.,க்களின் மாதச் சம்பளம், 55 ஆயிரம் ரூபாயில் இருந்து, 1.05 லட்சம் ரூபாயாக, இம்மாதம் முதல் உயர்த்தப்படும் எனவும் தொகுதி மேம்பாட்டு நிதியும், 2.5 கோடி ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் அறிவித்தார். எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், எம்எல்ஏக்கள் சம்பள உயர்வு மசோதாவை துணை முதல்வர் பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார். இதன் மூலம் பிப்ரவரி மாதம் எம்எல்ஏக்களுக்கு நிலுவை தொகையுடன் ரூ. 3 லட்சம் கிடைக்கும். எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறுகையில்,…

Read More

3-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்: குறைந்த அளவில் இயங்கும் பேருந்துகள்; பரிதவிக்கும் மக்கள்

3-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்: குறைந்த அளவில் இயங்கும் பேருந்துகள்; பரிதவிக்கும் மக்கள்

புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து, போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. மாநிலம் முழுவதும் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஊதிய உயர்வு, பணிக்கொடை, ஓய்வூதியப் பலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் அமைச்சர் பத்துக்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. தங்கள் கோரிக்கைக்காக பல விதமான போராட்டங்களை நடத்திய போக்குவரத்து ஊழியர்கள் இறுதிகட்டமாக நேற்றுமுன்தினம் நடந்த பேச்சு வார்த்தையைக் கெடுவாக வைத்தனர். 2.57 சதவீத உயர்வை தர மறுத்த தமிழக அரசு 2.4 சதவீதத்திலேயே நின்றது. இதனால் நேற்று முன்தினம் மாலை முதல்…

Read More

நாங்கள் யாரையும் செய்தித் தொடர்பாளராக நியமிக்கவில்லை: ரஜினி மக்கள் மன்றம்

நாங்கள் யாரையும் செய்தித் தொடர்பாளராக நியமிக்கவில்லை: ரஜினி மக்கள் மன்றம்

அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரையும் நாங்கள் நியமனம் செய்யவில்லை என்று அம்மன்றம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கடந்த 31-ம் தேதி ரஜினி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவாக ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் பலரும் தொலைக் காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையில், “சமீப காலமாக தொலைக்காட்சி விவாதங்களில் ரஜினி ஆதரவாளர்கள் அல்லது ரஜினி ரசிகர் என்ற பெயரில் சிலர் பங்கேற்று தங்கள் சொந்த கருத்துக்களை கூறி…

Read More

ராஜ்யசபா தேர்தலில் 10 இடங்களை பா.ஜ., வெல்ல… பலம் அதிகரிப்பதால் மசோதாக்கள் எளிதில் நிறைவேறும்

ராஜ்யசபா தேர்தலில் 10 இடங்களை பா.ஜ., வெல்ல… பலம் அதிகரிப்பதால் மசோதாக்கள் எளிதில் நிறைவேறும்

ராஜ்யசபாவில், இந்தாண்டில், 66 இடங்கள் காலியாவதால், பா.ஜ.,வுக்கு, மேலும், 10 உறுப்பினர்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜ, BJP, ராஜ்யசபா தேர்தல், Rajya Sabha election, மனோகர் பரீக்கர்,Manohar Parrikar, தேர்தல் கமிஷன் ,Election Commission, ஹர்தீப் சிங் புரி, Hardeep Singh Puri, பார்லிமென்ட், Parliament,Bharatiya Janata Party, இதனால், ராஜ்யசபாவில், அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் அனைத்தும், எளிதில் நிறைவேறும் சூழ்நிலை ஏற்படும்.ராணுவ அமைச்சராக இருந்த, மனோகர் பரீக்கர், உ.பி.,யில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது பதவிக்காலம், 2020 நவ., 25ல் முடிகிறது. கோவாவில் நடந்த சட்ட சபைத் தேர்தலுக்கு பின், அம்மாநில முதல்வராக பொறுப்பேற்ற மனோகர் பரீக்கர், ராணுவ…

Read More

முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு

முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே முத்தலாக் தடுப்பு மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது காரசார விவாதம் நடந்த பிறகு, சபை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.. ‘முத்தலாக்’ கூறி விவாகரத்துச் செய்யும் நடைமுறையால், இஸ்லாம் சமூகத்து பெண்கள் பாதிக்கப்படுதாக கூறப்படுவதால், அதை தடுக்கும் விதமாக, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி, மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, முத்தலாக் கூறுவது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆணுக்கு சிறை தண்டனை வழங்குவதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆளும், பா.ஜ., கூட்டணிக்கு, லோக்சபாவில் பெரும்பான்மை இருப்பதால், கடந்த வியாழன் (2017 டிச.,28) அன்று, இந்த மசோதா நிறைவேறியது. இந்நிலையில், இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர்…

Read More
1 120 121 122 123 124 181