ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனை, முதல்வர் பழனிசாமி அணியில் இருந்த வேலூர் எம்.பி. செங்குட்டுவன் நேற்று மாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதன்மூலம் அதிமுகவில் மீண்டும் அணி தாவல் தொடங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது. சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு முதல்வர் பழனிசாமி அணியும், டிடிவி.தினகரன் அணியும் தனித்தனியாக செயல்பட்டன. அதையடுத்து முதல்வர் அணியும், ஓ.பி.எஸ். அணியும் இணைந்தன. இந்த காலகட்டத்தில் அதிமுகவின் சில எம்எல்ஏக்களும், எம்.பி.க்களும் அணி மாறினர். தொடக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த வேலூர் எம்.பி. செங்குட்டுவன், அங்கிருந்து…
Read More