கருணாநிதியுடன் நடிகர் ரஜினி சந்திப்பு

கருணாநிதியுடன் நடிகர் ரஜினி சந்திப்பு

நடிகர் ரஜினி தனிக்கட்சி துவங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துள்ளார். அவரை திமுக செயற்தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். மரியாதை நிமித்தமாகவே கருணாநிதியை சந்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Read More

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தினை நினைவிடம் ஆக மாற்ற ஆய்வு

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தினை நினைவிடம் ஆக மாற்ற ஆய்வு

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.  அவர் மறைவுக்கு பின்னர் அந்த இல்லத்தினை நினைவிடம் ஆக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வருமான வரி துறை முன்னிலையில் வேதா இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் 2 அறைகள் முன்பே சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வேதா இல்ல மதிப்புகளை அளவிடும் பணிகள் நடந்து வருகின்றன.  இதற்கான ஆய்வு பணியில் ஆட்சியர், வட்டாட்சியர், பொது பணி துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகளின் ஆய்வு பணியை தொடர்ந்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி…

Read More

ஆன்மிக அரசியல், வீடியோ காட்சி பற்றி ரஜினிகாந்த் விளக்கம்

ஆன்மிக அரசியல், வீடியோ காட்சி பற்றி ரஜினிகாந்த் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணம் பற்றிச் சொல்லும் போது ஆன்மிக அரசியல் என்று குறிப்பிட்டார். இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிச.31-ம் தேதி அன்று தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்தார். அப்போது அவர் தான் அரசியலில் இறங்குவது உறுதி என்று தெரிவித்த அவர் தான் 2021 சட்டமன்ற அரசியலில் நேரடியாக குதிக்கப்போவதாகவும், அதுவரை தனது ரசிகர்கள் யாரையும் விமர்சிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத்  தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்தார். தனது பாதை ஆன்மிக அரசியல் பாதை என்று தெரிவித்து விவாதத்தை தூண்டிவிட்டார். ரஜினி ஆன்மிக அரசியல் என்று தெரிவித்தாலும் குறிப்பிட்ட மதத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்…

Read More

முதலமைச்சர் பழனிசாமியுடன், தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சந்திப்பு

முதலமைச்சர் பழனிசாமியுடன், தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சந்திப்பு

தமிழ் மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் வகையில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கியுள்ளது. இதேபோல், திண்டுக்கலில் 31.12.2017 அன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக சிறையில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவித்து வரும் சிறை கைதிகளை சட்டத்துக்குட்பட்டு மற்றும் சிறை விதிகளுக்குட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காகவும், தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கியதற்காகவும், முத்தலாக் தடை மசோதாவில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டிற்காகவும் எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி…

Read More

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8ந்தேதி கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8ந்தேதி கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8ந்தேதி கூடுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதனால் ஆளுநர் உரை இடம்பெறும். ஆளுநராக பொறுப்பேற்ற பின் பேரவையில் முதன்முறையாக பன்வாரிலால் உரையாற்ற உள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஜனவரி 8ந்தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

Read More

சிறையில் சசிகலா மவுன விரதம் இருக்கிறார்: டிடிவி தினகரன் தகவல்

சிறையில் சசிகலா மவுன விரதம் இருக்கிறார்: டிடிவி தினகரன் தகவல்

சிறையில் சசிகலா மவுன விரதம் இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இன்று (வியாழக்கிழமை) மதியம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சசிகலாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றேன். தற்போது அவர் (சசிகலா) மவுன விரதம் இருக்கிறார். ஜெயலலிதா நினைவு நாள் தொடங்கி அவர் மவுன விரதம் இருந்துவருகிறார். ஜனவரி இறுதிவரை அவர் மவுன விரதம் தொடரும். அவர் மவுன் விரதத்தில் இருப்பதால் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுக்கான ஆலோசனைகளை எழுத்துமூலம் பெற்றேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் எங்களை ஆதரித்துள்ளனர். தொண்டர்களும், மக்களும் தற்போது நடைபெறும்…

Read More

ஸ்டாலின் – தினகரன் கூட்டு; பில்லா ரங்கா நாட்டை ஆளக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

ஸ்டாலின் – தினகரன் கூட்டு; பில்லா ரங்கா நாட்டை ஆளக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

ஸ்டாலினும் தினகரனும் கூட்டுச் சதி செய்து அதிமுகவை தோற்கடித்தனர். பில்லாவும், ரங்காவும் நாட்டை ஆளக்கூடாது என்று ஸ்டாலினையும், தினகரனையும் இணைத்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். இன்று காலை, சென்னை பட்டினப்பக்கத்தில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: ”திமுக செயல்தலைவராக இருந்து சந்தித்த முதல் தேர்தல். தினகரன் – ஸ்டாலின் இருவரும் கூட்டுசேர்ந்து செய்த சதியால் அதிமுக தோற்கடிக்கப்பட்டது. பில்லாவும் ரங்காவும் இந்த நாட்டை ஆளக்கூடாது. தினகரனும் ஸ்டாலினும் கை கோத்துள்ளனர். இருவரும் எவ்வளவு தொடர்பில் இருக்கிறார்கள் என்பது இந்த நாடே அறிந்த உண்மை. ஆளுநர் மாளிகைக்கு சேர்ந்தே போகிறார்கள். 2 ஜி வழக்கில் ராசாவுக்கும், கனிமொழிக்கும் தினகரன் வாழ்த்து சொல்கிறார். ஜெயலலிதா…

Read More

அணி தாவல் மீண்டும் தொடங்கியது: தினகரனை சந்தித்துவேலூர் எம்.பி. வாழ்த்து – அரசியல் களத்தில் பரபரப்பு

அணி தாவல் மீண்டும் தொடங்கியது: தினகரனை சந்தித்துவேலூர் எம்.பி. வாழ்த்து – அரசியல் களத்தில் பரபரப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனை, முதல்வர் பழனிசாமி அணியில் இருந்த வேலூர் எம்.பி. செங்குட்டுவன் நேற்று மாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதன்மூலம் அதிமுகவில் மீண்டும் அணி தாவல் தொடங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது. சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு முதல்வர் பழனிசாமி அணியும், டிடிவி.தினகரன் அணியும் தனித்தனியாக செயல்பட்டன. அதையடுத்து முதல்வர் அணியும், ஓ.பி.எஸ். அணியும் இணைந்தன. இந்த காலகட்டத்தில் அதிமுகவின் சில எம்எல்ஏக்களும், எம்.பி.க்களும் அணி மாறினர். தொடக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த வேலூர் எம்.பி. செங்குட்டுவன், அங்கிருந்து…

Read More

தினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக போலி ட்விட்டர் பதிவு: அமைச்சர் உதயகுமார் காவல் ஆணையரிடம் புகார்

தினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக போலி ட்விட்டர் பதிவு: அமைச்சர் உதயகுமார் காவல் ஆணையரிடம் புகார்

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு நான் வாழ்த்து சொல்வது போல் ட்விட்டரில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சசிகலாவின் தீவிர ஆதரவாளர். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது ஜெ.பேரவை பொதுச்செயலாளராக இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் முதல்வர் ஆனார். அப்போது ஜெ.பேரவை சார்பில் சசிகலா முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதை ஜெயலலிதா சமாதியில் வைத்து பேட்டியும் அளித்தார். பின்னர் ஓபிஎஸ் பிரிந்தபோது அவரை கடுமையாக விமர்சனம் செய்தார். மீண்டும் ஓபிஎஸ் இணைந்தபோது அவரை மாதிரி விசுவாசம் மிக்கவர்கள் யாரும்…

Read More

குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு

குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு

ஆமதாபாத்தில் நடந்த பா.ஜ., எம்எல்ஏக்கள் கூட்டத்தில், குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். நிதின் படேல் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை கடந்த 18-ம் தேதி நடந்தது. இதில் பா.ஜ. பெருபான்மை தொகுதிகளை கைபற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் பா.ஜ. மேலிடம் இறங்கியது. இதற்கான ஆலோசனை கூட்டம் ஆமதாபாத்தில் நடந்தது. கட்சியின் மேலிட பார்வையாளரான அருண் ஜெட்லி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் மீண்டும்…

Read More
1 121 122 123 124 125 181