தினகரன் ஆதரவு எம்பிக்கள் 3 பேர் அணி தாவினர்: எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

தினகரன் ஆதரவு எம்பிக்கள் 3 பேர் அணி தாவினர்: எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

அதிமுகவில் அடுத்தடுத்து ஏற்படும் பரபரப்பால் எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் அணி தாவி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து அவரது அணியிலிருந்த மூன்று எம்பிக்கள் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினர். அதிமுக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டானது. தினகரன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென தினகரன் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் ஓபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏ, எம்பிக்களுடன் எடப்பாடி அணியுடன் இணைந்தார். இதனால் தினகரன் அணி தனியாகவும், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைந்து ஒரு அணியாகவும் இயங்கி வந்தனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் அணிக்கு ஏற்பட்ட…

Read More

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்; யாருக்கும் ஆதரவு கிடையாது: விஜயகாந்த்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்; யாருக்கும் ஆதரவு கிடையாது: விஜயகாந்த்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாகவும் யாருக்கும் ஆதரவில்லை என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து அவரிடம் வினவினர் அதற்கு, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்கமாட்டோம். ஆர்.கே.நகரில் பணபலம் உள்ளவர்களே வெற்றி பெறுவார்கள். தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க மாலை 5 மணிக்கு மேல் பிரசாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும். அப்படி கட்டுப்பாடு விதித்தால், பணப்பட்டுவாடா செய்பவர்களே அந்தக் கட்டுப்பாட்டை விமர்சிப்பார்கள்” என்று கூறினார். வழக்கமான பரிசோதனை.. விஜயகாந்த் சிகிச்சை குறித்து சில…

Read More

ஜெ. நினைவு தினம் அனுசரிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

ஜெ. நினைவு தினம் அனுசரிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவுக்கு டிசம்பர் 5-ல் நினைவு தினம் அனுசரிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாள் சிகிச்சைக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர்.5-ம் தேதி காலமானார். அவரது உடல், மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில், நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதற்கு ரூ.15 கோடி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், தமிழக முதல்வராக பொறுப்பேற்ற கே.பழனிசாமி, ஜெயலலிதா நினைவு மண்டபம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். வரும் டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின்…

Read More

இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை

இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை

முதல்வர் பழனிசாமி – துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியது. பிரமாண பத்திரங்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள் ஆதரவு அடிப்படையில் முதல்வர் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. கட்சிக் கொடி, அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றை முதல்வர் தரப்பு பயன்படுத்தி கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. நீண்டகாலம் இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தினகரன் அணியில் தற்போது அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆர்கே நகர் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சின்னம் கிடைக்காதது, சசிகலா, தினகரன் தரப்பினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. * மொத்தம் 2128 பொதுக்குழு உறுப்பினர்களில் , 1,741 பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த பிரமாணப்பத்திரம் ஏற்கப்பட்டது….

Read More

கட்சி மாறி வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்: அதிமுகவை கரைக்க திட்டமிடுகிறதா பாஜக?

கட்சி மாறி வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்: அதிமுகவை கரைக்க திட்டமிடுகிறதா பாஜக?

கட்சி மாறி வந்தவர்களுக்குபாஜகவில் முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி, இரட்டை இலை சின்னம் முடக்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, முதல்வர் பழனிசாமி – ஓபிஎஸ் அணிகள் இணைப்பு, ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவி என அனைத்தின் பின்னணியிலும் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகள் மட்டுல்லாது, அதிமுக வில் ஒரு பிரிவினரே குற்றம்சாட்டி வருகின்றனர். மத்தியிலும், 15-க்கும் அதிகமான மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் 3 சதவீத வாக்குகளுக்குமேல் பெற முடியவில்லை. எனவே, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்தி பாஜகவை…

Read More

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிச.31-க்குள் நடத்தி முடிக்க வேண்டும்- தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிச.31-க்குள் நடத்தி முடிக்க வேண்டும்- தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிச.31-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. போலி வாக்காளர்களை களைந்து விட்டதாக தேர்தல் ஆணையம் இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து டிச.31-க்குள் ஆர்.கே.நகர் இடைதேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததை ஒட்டி அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆர்.கே.நகர் காலியாக உள்ள தொகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கும் பணி துவங்கிய…

Read More

ஜெயலலிதா இல்லமான போயஸ்கார்டனில் சோதனை நடத்தப்பட்டதில் சதி இருக்கிறது : டிடிவி தினகரன் பேட்டி

ஜெயலலிதா இல்லமான போயஸ்கார்டனில் சோதனை நடத்தப்பட்டதில் சதி இருக்கிறது : டிடிவி தினகரன் பேட்டி

போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட அதிகாரிகள் 4 மணிநேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு இந்த சோதனை முடிவுக்கு வந்தது. இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து கடும் விமர்சனம் செய்துள்ள டிடிவி தினகரன், இந்த சோதனைக்கு பின்னால் நிச்சயமாக அரசியல் சதி உள்ளது என்று தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் இன்று காலை அளித்த பேட்டி வருமாறு:- “ போயஸ் இல்லத்தில் உள்ள சசிகலாவின் அறையில் வருமான வரி சோதனை நடந்தது. சந்தேகத்தின் பேரில் சோதனை நடந்துள்ளது, சோதனை…

Read More

போயஸ் கார்டன் சோதனை: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வீடுகளுக்கு பாதுகாப்பு

போயஸ் கார்டன் சோதனை: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வீடுகளுக்கு பாதுகாப்பு

சசிகலா குடும்பத்தினரிடம் கடந்த 6 நாட்களாக வருமான வரி சோதனையும் அதை தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது. இந்த சோதனையின் ஒரு பகுதியாக நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென்று ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறையில் நடந்த இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது. போயஸ் கார்டனில் சோதனை நடைபெறும் தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்தனர். அவர்கள், ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது வருமான வரித்துறை, மத்திய அரசு மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இது…

Read More

மீனவர்களை தாக்கியது கடலோர காவல் படை துப்பாக்கி தோட்டாக்கள் அல்ல: நிர்மலா சீதாராமன் பேட்டி

மீனவர்களை தாக்கியது கடலோர காவல் படை துப்பாக்கி தோட்டாக்கள் அல்ல: நிர்மலா சீதாராமன் பேட்டி

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதலை இந்திய கடலோர காவல்படையே ஒப்புக்கொண்ட நிலையில் “துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டது கடலோர காவற்படை பயன்பாட்டில் உள்ள தோட்டாக்கள் அல்ல” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கடலோர காவல் படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது பற்றி? “கோஸ்ட் கார்ட் தலைவரைக் கேட்டேன், எங்களிடம் அப்படிப்பட்ட தோட்டாவே இல்லை. பிறகு எப்படி நாங்கள் மீனவர்கள் மீது பிரயோகித்திருக்க முடியும் என்று கேட்கிறார். அப்படிப்பட்ட தோட்டாக்களை நீங்கள் சப்ளை செய்கிறீர்களா? என்று பாதுகாப்புத்துறையை பார்த்து…

Read More

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா குடும்பத்தினர், அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி முதல் தொடர் சோதனை மேற்கொண்டனர். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா என 3 மாநிலங்களில் 187 இடங்களில் 1800-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர். நாட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளில் இது மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கடந்த 13-ம் தேதி வரை சோதனை நீடித்தது. இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் சசிகலாவின் உறவினர்களான விவேக்…

Read More
1 124 125 126 127 128 181