ராமேசுவரம் மீனவர்களின் போராட்டம் திங்கட்கிழமை வாபஸ்: தங்கச்சிமடத்தில் பிரிட்ஜோவின் உடல் அடக்கம்
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம் திங்கட்கிழமை வாபஸ் பெறப்படுகிறது. திங்கட்கிழமை மாலை தங்கச்சிமடத்தில் பிரிட்ஜோவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. கச்சத்தீவு அருகே மார்ச் 6 திங்கட்கிழமை இரவு ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ (21) உயிரிழந்தார். ஜெரோன் (27) என்ற மீனவர் காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிரிட்ஜோவின் உடலை மருத்துவமனை அதிகாரிகள் ஒப்படைக்க முயன்ற போது பெற்றோரும், உறவினரும் உடலை வாங்க மறுத்து…
Read More









