பட்டுக்கூடு கொள்முதல் மையத்துக்கு கூடுகள்… வரத்து அதிகரிப்பு! ரீலர்கள் வருகையால் விலை சரிவும் தவிர்ப்பு
உடுமலை : பிற மாவட்ட ரீலர்கள், உடுமலை அரசு கொள்முதல் மையத்தில், பட்டுக்கூடுகளை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுவதால், வரத்தும், விலையும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிகரித்து வருகிறது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெண் பட்டுக்கூடு உற்பத்தி தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது. இப்பகுதியில், 2,778 ஏக்கர் பரப்பளவில், மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு, 1,221 பட்டு புழு வளர்ப்பு மனைகள் வாயிலாக, மாதந்தோறும், பல டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.பட்டு புழு வளர்ப்பு மனைகளில், 21 நாட்களில், புழு வளர்ந்து, கூடு கட்டி, விற்பனைக்கு தயாராகும். குறிப்பாக, வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், மாநில அளவில், உடுமலை பகுதி முன்னிலை வகிக்கிறது. உடுமலை, பழநி, பல்லடம், பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உட்பட…
Read More









