அரசு, வங்கி இணையதளங்களை முடக்கும் சீன முயற்சி முறியடிப்பு
எல்லைப் பிரச்னையால் பதற்றம் நிலவி வரும் நிலையில், நம் அரசு துறைகள் மற்றும் வங்கிகளின் இணைய தளங்களை முடக்கும் முயற்சியில், சீன இறங்கியது தெரிய வந்துள்ளது. உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், நம் ராணுவத்தைச் சேர்ந்த, 20 பேர் உயிரிழந்தனர். பதற்றத்தை தணிக்க, பேச்சு நடந்து வருகிறது.இந்நிலையில், நம் அரசு துறைகள் மற்றும் வங்கி இணைய தளங்களை முடக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உரிய நேரத்தில், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுஉள்ளது.இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சக…
Read More








