பொருளாதாரத்தை விட மனிதர்களே முக்கியம்: ‘ஜி – 20’ யில் இந்திய பிரதமர் மோடி

பொருளாதாரத்தை விட மனிதர்களே முக்கியம்: ‘ஜி – 20’ யில் இந்திய பிரதமர் மோடி

”பொருளாதார இலக்குகளை விட, மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்,” என, ‘ஜி – 20’ நாடுகளின் தலைவர்களிடம், பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் தலைமையில், ஜி – 20 நாடுகளின் அவசரக் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நேற்று(மார்ச் 26) நடந்தது. இதில், துவக்க உரையாற்றிய, முகமது பின் சல்மான், கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கொரோனாவால், வளரும் நாடுகள் சந்தித்துள்ள சுகாதார பிரச்னைகள், பொருளாதார பாதிப்புகளுக்கு உதவ, உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது:…

Read More

‘கொரோனா’ பயம் பரோலில் செல்ல மாட்டேன் – சின்னம்மா சசிகலா

‘கொரோனா’ பயம் பரோலில் செல்ல மாட்டேன் – சின்னம்மா சசிகலா

‘கொரோனா வைரஸ்’ பரவல் காரணமாக, பரோலில் செல்ல, சசிகலா மறுத்து விட்டதாக, அ.ம.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும், சிறை கைதிகள், சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடமும், ‘பரோல்’ விடுப்பில் செல்லுமாறு, சிறை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு, 100 நாட்கள் வரை, பரோலில் செல்வதற்கு அனுமதி உள்ளது.சசிகலா பரோலில் செல்லலாம் என, சிறை நிர்வாகம் கூறியும், அவர் விரும்பவில்லை. தன் வழக்கறிஞர்களிடம், ‘பரோல் கேட்டு, எந்த மனுவும் தாக்கல் செய்ய வேண்டாம்’ என, சசிகலா கூறி விட்டார்.இதுகுறித்து, அ.ம.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:சசிகலா, நேற்று முதல் ஒரு மாத பரோலில் வெளியே வருவதாக…

Read More

வரும் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு; மோடி

வரும் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு; மோடி

கொரோனா பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று (24 ம் தேதி ) இரவு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரயைாற்றினார். வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்க வேண்டிய நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். உலகளாவிய கொரோனா தொடர்பாக தற்போது நான் நாட்டு மக்களுக்கு 2 வது முறை உரையாற்றுகிறேன். இந்தியர் அனைவருக்கும் முழு பொறுப்பு உள்ளது. சமீபத்தில் நடந்த மக்கள் ஊரடங்கு வெற்றி பெற்றுள்ளது. இதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி கொரோனா செயல்பட்டு…

Read More

22 மார்ச் 2020 அன்று ஜனதா ஊரடங்கு (ஜனதா கர்ப்பியூ) உத்தரவு மற்றும் பாரதத்தையும் ஆதரிப்போம்

22 மார்ச் 2020 அன்று ஜனதா ஊரடங்கு (ஜனதா கர்ப்பியூ) உத்தரவு மற்றும் பாரதத்தையும் ஆதரிப்போம்

இந்த 22 மார்ச் 2020 அன்று ஜனதா ஊரடங்கு (ஜனதா கர்ப்பியூ) உத்தரவு மற்றும் பாரதத்தையும் ஆதரிப்போம் !! #CoronaVirus # COVID-19 க்கு எதிரான போராடத்தில் கைகோர்ப்போம் !! வீட்டின் உள்ளிருந்து நம் வீட்டவரின் ஆரோக்கியத்தை பாதுகாப்போம் !! பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று மகிழ்ச்சியான & ஆரோக்கியமான பாரதத்தை உருவாக்குவோம் !! சனாதன் தர்மம் “வாசுதைவ குட்டம்பகம்” என்று கற்பிக்கிறது, அதாவது முழு உலகமும் என் குடும்பம் .. எல்லா உயிரினங்களும் என் குடும்பம். விலங்குகள் மற்றும் பறவைகள் மற்றும் பூச்சிகளைக் கொன்று சாப்பிடாமல் அன்பாகவும் அக்கறையுடனும் இருக்கட்டும், அவை நம்மிடமும் அன்பு காட்டும் !! நான் ஒரு பெருமைமிக்க இந்து …..

Read More

மோடி வேண்டுகோள் – மார்ச்-22 ம் தேதி ” ஜனதா கர்ப்பியூ “

மோடி வேண்டுகோள் – மார்ச்-22 ம் தேதி ” ஜனதா கர்ப்பியூ “

மார்ச் 22 ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை வீட்டு வெளியே வர வேண்டாம் என மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது: கொரோனா இந்தியாவை தாக்காது என்பது தவறு.இதனை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு தேவை.மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்லவேண்டாம். மக்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். கொரேனா வைரஸ் நம்மை ஒன்றும் செய்யாது என எண்ண வேண்டாம். கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிருபிப்போம். மக்களுக்காக , மக்களே சுயமாக ஊரடங்கு நடைமுறையை…

Read More

ம.பி.காங்., அரசு மீது மார்ச் 16-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்போவதாக ம.பி., பாஜ., மூத்த தலைவர் நரோத்தம் மிஸ்ரா

ம.பி.காங்., அரசு மீது மார்ச் 16-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்போவதாக ம.பி., பாஜ., மூத்த தலைவர் நரோத்தம் மிஸ்ரா

ஜோதிர் ஆதித்யா சிந்தியா மற்றும் 22 எம்.எல்.ஏ.க்கள், கட்சியிலிருந்து விலகியதால் ம.பி.காங்., அரசு மீது மார்ச் 16-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்போவதாக ம.பி., பாஜ., மூத்த தலைவர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார். ஒரு வருடம் மற்றும் மூன்று மாதங்களை நிறைவு செய்யவுள்ள கமல்நாத் தலைமையிலான காங்., அரசு, ஆட்சியைக் காப்பாற்ற கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கட்சியிலிருந்து சிந்தியா விலகிய பிறகு அவரும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் ராஜினாமா கடிதங்களை ஆளுநர், சட்டசபை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர். இதனால், கமல்நாத் அரசு ஆட்டம் கண்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால் சட்டசபையில் காங்., பலம் 92ஆக குறைந்துவிடும். பெரும்பான்மையை நிரூபிக்க 104 இடங்கள் தேவையுள்ள நிலையில்,…

Read More

சிந்தியாவால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பிஜேபியின் தாமரை மலர்கிறது

சிந்தியாவால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பிஜேபியின் தாமரை மலர்கிறது

ம.பி., காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் இருக்கும் ஜோதிராதித்யா சிந்தியா, டில்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இன்று திடீர் திருப்பமாக சந்தித்து பேசி உள்ளார். இது காங்., மேலிடத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்., ஆட்சி நடக்கும் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அமைச்சரவையில் ஆறு அமைச்சர்கள், 10 எம்.எல்.ஏ.,க்கள் என 16 பேர், மூன்று சிறப்பு விமானம் மூலம், மத்திய பிரதேசத்தின் போபால் நகரிலிருந்து புறப்பட்டு, பெங்களூருக்கு சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுனர். இன்றைய நிலவரப்படி மொத்தம் 24 எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. கமல்நாத் மற்றும் டில்லி மூத்த நிர்வாகிகள் நடத்திய…

Read More

“யெஸ்” வங்கியில் ஜெகன்நாதர் கோயில் பணம் ரூ.545 கோடி

“யெஸ்” வங்கியில் ஜெகன்நாதர் கோயில் பணம் ரூ.545 கோடி

பல்வேறு முறைகேடு சர்ச்சைகளில் சிக்கியுள்ள ” யெஸ்” வங்கியில் ஜெகன்நாதர் கோயில் பணம் ரூ.545 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.இதனை எடுக்க முடியாமல் இந்த கோயில் நிர்வாகம் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக மாநில நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி உள்ளார். வாராக்கடன் நிர்வாகச் சீர்கேடு உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளில் தனியார் வங்கியான ‘யெஸ் பேங்க்’ சிக்கியுள்ளது. இதனால் அந்த வங்கி ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வங்கியின் வாடிக்கையாளர் ‘அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்கலாம்’ என்ற கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது…

Read More

போதை மருந்து கொடுத்து பெண்கள் போராட்டம் !!

போதை மருந்து கொடுத்து பெண்கள் போராட்டம் !!

போதைப்பொருளின் தாக்கத்தால் தான் பெண்கள் போராட்டங்களில் ஈடுபடுவதாகவும், அதனால் அவர்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடுவதாகவும் பாஜ தலைவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேற்குவங்கத்தில் உள்ள ரபின்திர பாரதி பல்கலை.,யில் நடந்த நிகழ்ச்சியில் அம்மாநில பாஜ., தலைவர் திலீப் கோஷ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மாநிலத்தில் கலாச்சார மரபுகள் பாழாகி வருகின்றன. பெண்கள் நமது கலாச்சார பாரம்பரியத்தை மறந்துவிடுகிறார்கள். அவர்கள் போராட்டங்களின் முகமாக மாற்றப்படுகிறார்கள். போதைப்பொருளின் தாக்கத்தால் நாள் முழுவதும் அவர்கள் கூச்சலிடுகின்றனர். இது என்ன வகையான வங்கம்?பெண்கள் இப்படி இருந்தால், அவர்களுடன் பொதுமக்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? அவர்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடும். இந்த சமூக அவலத்திற்கான காரணத்தை அனைவரும் கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு…

Read More

தீவிர சிகிச்சைக்கு பலனளிக்காமல் அன்பழகனின் உடல் நிலை !!

தீவிர சிகிச்சைக்கு பலனளிக்காமல் அன்பழகனின் உடல் நிலை !!

மருத்துவமனையில், கவலைக்கிடமான நிலையில் இருக்கும், அன்பழகனின் உடல் நலம் குறித்து, டாக்டர்களிடம், கேட்டறிந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ‘தீவிர சிகிச்சைக்கு பலனளிக்காமல் அன்பழகனின் உடல் நிலை உள்ளது’ எனத் தெரிவித்தார். தி.மு.க., பொதுச்செயலர், அன்பழகன், 97, உடல் நலக்குறைவு காரணமாக, சில நாட்களாக, சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்; அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அன்பழகனுக்கு, சிறப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு சென்று, அன்பழகனின் உடல்நிலை குறித்து, அவரது உறவினர்களிடமும், டாக்டர்களிடம் விசாரித்தார். பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:…

Read More
1 73 74 75 76 77 181