அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை

அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை

இந்தியாவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் மூலம், கடந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து சுமார் 1,21,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. பாகிஸ்தான், வங்காளதேசம், மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட 25 நாடுகளில் இருந்து பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய  மத்திய அரசு தடை விதித்தது. பாலியெதிலீன் டெராப்தலேட்(PET) எனப்படும் பிளாஸ்டிக் வகையே அதிகமாக…

Read More

டெல்லி திகார் சிறைச்சாலையில் இருக்கும் ப. சிதம்பரத்திடம் நாளை அமலாக்கத்துறை விசாரணை –  தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது

டெல்லி திகார் சிறைச்சாலையில் இருக்கும் ப. சிதம்பரத்திடம் நாளை அமலாக்கத்துறை விசாரணை –  தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. டெல்லி திகார் சிறைச்சாலையில் இருக்கும் ப. சிதம்பரத்திடம் நாளை அமலாக்கத்துறை விசாரணை நடத்தவுள்ளது. தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது செய்யவும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதியன்று, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், செப்டம்பர் 5-ந் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம்…

Read More

வேஷ்டியில் வந்து அசத்திய மோடி – சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி, வேஷ்டி, சட்டை, தோளில் துண்டுடன் வந்தார்

வேஷ்டியில் வந்து அசத்திய மோடி – சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி, வேஷ்டி, சட்டை, தோளில் துண்டுடன் வந்தார்

மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி, வேஷ்டி, சட்டை, தோளில் துண்டுடன் வந்தார். சீன பிரதமர் ஜின்பிங் – பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதற்காக சென்னை வந்த மோடி, கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். பின்னர், மாலை 4 மணிக்கு, கார் மூலம் மாமல்லபுரம் கிளம்பினார். வழியில், மாணவ, மாணவிகள் மோடியை , தேசிய கொடியை அமைத்து வரவேற்றனர். தமிழக பாரம்பரிய நடன இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. வழக்கமாக அணியும் குர்தாவுக்கு பதில் தமிழகத்தின் பாரம்பரியமான உடையான, வேஷ்டி, சட்டை மற்றும் தோளில் துண்டு அணிந்தவாறு மோடி, மாமல்லபுரம் வந்தார். அங்கு,மோடியை அதிகாரிகள் வரவேற்றனர். இரண்டு நாள் பயணமாக,…

Read More

ரூ.740 கோடி மோசடி: ரான்பக்ஸி மாஜி தலைவர்கள் ஷிவிந்தர் சிங், அவரது சகோதரர் மல்வீந்தர் சிங் கைது

ரூ.740 கோடி மோசடி: ரான்பக்ஸி மாஜி தலைவர்கள் ஷிவிந்தர் சிங், அவரது சகோதரர் மல்வீந்தர் சிங் கைது

ரூ. 740 கோடி மோசடி செய்த புகாரில் ரான்பாக்ஸி நிறுவன முன்னாள் தலைவரான ஷிவிந்தர் சிங், அவரது சகோதரர் மல்வீந்தர் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பற்பசை முதல் வலிநிவாரணி போக்கும் மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை தயாரித்து வரும், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ரான்பாக்ஸி நிறுவனம். உலகளவில் 150 நாடுகளில் கிளைகளும், 50 வருட முன் அனுபவமும் கொண்டது. நிறுவனத்தின் புரமோட்டர்களான மல்விந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் ஷிவிந்தர் சிங், ரெலிகர் நிதிநிறுவனத்திடம் ரூ. 740 கோடி கடன் பெற்றனர். எனினும் நிதி நெருக்கடி காரணமாக ரான்பாக்ஸி நிறுவனத்தை, ஜப்பானை சேர்ந்த, மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு 2008ம்…

Read More

மேற்குவங்கத்தில் கொடூரம்: ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் குடும்பத்தோடு படுகொலை

மேற்குவங்கத்தில் கொடூரம்: ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் குடும்பத்தோடு படுகொலை

மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., ஊழியர், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் அவரது மகன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் அருகே ஜியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த பாந்து கோபால் பால். ஆசிரியரான இவர் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகராகவும் உள்ளார். இவரது மனைவி பியூட்டி மற்றும் மகன் அங்கன்(6) உடன் வீடு ஒன்றில் வசித்து வந்தார். பியூட்டி 8 மாத கர்ப்பமாகவும் இருந்தார். இந்நிலையில், அவரது வீட்டின் கதவு கடந்த இரு நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவரது குடும்பமே மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார்…

Read More

இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திப்பு

இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திப்பு

சீன அதிபர் சென்னை மாமல்லபுரம் வருவது உறுதியான பின்னும், மத்திய அரசு இது குறித்து அலுவல் பூர்வமாக ஏதும் தெரிவிக்காமலிருந்தது. ஆனால், அதே நேரம் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு மாமல்லபுரம் சென்று ஆய்வு செய்தது. இப்படியான சூழலில் இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திப்பதை வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது . இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை இந்தியா நீக்கியவுடன் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச கவனத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் ஐ.நா. சபையில் எழுப்பியது சீனா. பாகிஸ்தான் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் அது அமைந்திருந்தது. ஆனால், தற்போது சீன அதிபர் ஷி…

Read More

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை தான் என விசாரணை அறிக்கை

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை தான் என விசாரணை அறிக்கை

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை தான் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறையில் விதிகளை மீறியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, சிறையில் திடீர் சோதனை நடத்தினார். சோதனையில், சிறை விதிமுறைகளை மீறி தனி சமையல், சிறையிலிருந்து வெளியே சென்றது உள்ளிட்டவற்றை கண்டுபிடித்தார். விஷேச சலுகைகளுக்காக சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ், சசி தரப்பிலிருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து இப்புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக் குழுவை கர்நாடக அரசு அமைத்தது….

Read More

ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ரஃபால் போர் விமானத்திற்கு இன்று ‘ஷாஸ்த்ரா பூஜை’ செய்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்குவதாக ஒப்புக்கொண்ட 36 ரஃபால் போர் விமானங்கள் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த விமானங்களின் டயர்களுக்கு அடியில் எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. பிரான்ஸில் மாரிக்நாக் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆயுதப் படைகளுக்கான பிரான்ஸ் அமைச்சர் ஃபோரன்ஸ் பார்லி முன்னிலையில் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டன. படத்தின் காப்புரிமை ANI பிரான்ஸ் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தசால்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். விமானங்களில் ஆர்பி – 001 என்ற இலக்கம் பொறிக்கப்பட்டுள்ளன. அது, இந்திய விமானப்படைத்…

Read More

காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு

காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு

காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பாராட்டு தெரிவித்துள்ளார். இது அரசின் மிக தைரியமான முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார். விஜயதசமி நாடு முழுவதும்,கொண்டாடப்பட்டு வருகிறது. நாக்பூரில் நடந்த விழாவில், மத்திய அமைச்சர்கள் நிதின்கட்காரி, வி.கே.சிங், மகாராஷ்ட்டிர முதல்வர் பட்னாவிஸ், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசியதாவது: தேச நலனே எங்களுக்கு மிக முக்கியம். தேச நலனுக்கென மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. நாட்டில் சிலர் வன்முறைகளை தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர். இதனை ஏற்க முடியாது. சமூகத்தில் சில அருவருக்க தக்க சம்பவங்கள் வன்முறைகள் நடக்கிறது. இது இந்த தேசத்தையும், இந்து மக்களையும் இழிவுப்படுத்துவதற்காக…

Read More

அயோத்தி வழக்கு விசாரணை; அக்.,17 ல் முடிக்க உத்தரவு

அயோத்தி வழக்கு விசாரணை; அக்.,17 ல் முடிக்க உத்தரவு

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விசாரணையின் அனைத்து வாதங்களையும் அக்.,17 க்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் சன்னி வக்பு வாரியம், இந்து மகா சபா மற்றும் நிர்மோகி அகாரா அமைப்புகள் நிலத்தை பகிர்ந்து எடுத்துக் கொள்ள அலகாபாத் ஐகோர்ட் கடந்த 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மத்தியஸ்த முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் சந்திரசூட், எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் வழக்கின்…

Read More
1 83 84 85 86 87 181