முரசொலி இடம் தொடர்பான விவகாரத்தில், மூலப்பத்திரம் எங்கே? பா.ம.க
முரசொலி இடம் தொடர்பான விவகாரத்தில், மூலப்பத்திரம் உட்பட அனைத்து ஆவணங்களையும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்’ என, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஸ்டாலின், நேர்மையான அரசியல்வாதியாக இருந்திருந்தால், ‘முரசொலி’ நிலம் குறித்த பட்டாவை, எவ்வளவு வேகமாக வெளியிட்டாரோ, அதே வேகத்தில், மூல ஆவணங்களையும் வெளியிட்டிருக்க வேண்டும். முரசொலி நிலம் குறித்த சர்ச்சைக்கு, அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.மூல ஆவணங்களை வெளியிட, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பலமுறை வலியுறுத்தியும், வெளியிட ஸ்டாலின் மறுப்பது ஏன்? சென்னை அறிவாலயம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில், தி.மு.க., அலுவலகம் அமைக்க, முறைகேடாக வளைக்கப்பட்ட இடங்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்
Read More









