ப.சிதம்பரம்: ஆகஸ்ட் 30 வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி

ப.சிதம்பரம்: ஆகஸ்ட் 30 வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவு, பிரான்ஸ், உள்ளிட்ட 11 நாடுகளில் சொத்து இருப்பதாக அமலாக்கதுறை சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் (ஆக.,26) முடிவடைகிறது. இந்நிலையில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கும் முயற்சியில் அமலாக்கத்துறை இறங்கி உள்ளது. ஆனால் சிதம்பரத்தின் ஜாமீன் கோரும் மனு இன்றும் (ஆக.26) பட்டியலிடப்படவில்லை. ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில், ப.சிதம்பரம் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 5 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கிடையில், டில்லி ஐகோர்ட்…

Read More

நிரவ் மோடியின் காவல் செப்.,19 வரை நீட்டிப்பு

நிரவ் மோடியின் காவல் செப்.,19 வரை நீட்டிப்பு

ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனிலிருக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் நீதிமன்ற காவல், அடுத்த மாதம், 19 வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த வைர வியாபாரி, நிரவ் மோடி, 48, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பி சென்றார். இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனில் பதுங்கி இருந்த நிரவ் மோடியை, அந்நாட்டு போலீசார், கடந்த மார்ச்சில் கைது செய்தனர். நிரவ் மோடியை, இந்தியா கொண்டு வரும் முயற்சியில், அமலாக்க துறை அதிகாரிகள்…

Read More

இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய வழிவகுத்தது

இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய வழிவகுத்தது

தொழில் அதிபர் பீட்டர் முகர்ஜிக்கும், அவரது மனைவி இந்திராணிக்கும் சொந்தமான நிறுவனம் ஐ.என்.எக்ஸ். மீடியா. இந்த நிறுவனத்துக்கு 2007–ம் ஆண்டு மொரிஷியசில் உள்ள வெவ்வேறு 3 கம்பெனிகள் மூலம் சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமான அன்னிய முதலீடு வந்துள்ளது. இந்த தொகை ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு அனுமதிக்கப்பட்ட முதலீட்டை விட அதிகமாகும். இதைத்தொடர்ந்து 2008–ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு துறையும், வருமான வரித்துறையும் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றன. இதனை வருமான வரித்துறை, அமலாக்கத்துறைக்கு அனுப்பியது. அதன்பிறகு அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புள்ள ஒரு நிறுவனத்தில்…

Read More

சிதம்பரம் எங்கே? : சுப்ரமணிய சாமி

சிதம்பரம் எங்கே? : சுப்ரமணிய சாமி

முன்ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமறைவாகி விட்டதாக பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி டுவீட் செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் நேற்று (ஆக.,20) தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சிதம்பரத்தை கைது செய்து, விசாரணை நடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டில்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவரை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. இதனால் சிதம்பரத்தின் வீட்டு வாசலில், தாங்கள் கொண்டு வந்த நோட்டீசை அதிகாரிகள் ஒட்டிவைத்து விட்டு சென்றனர். அதில், இன்னும் 2…

Read More

முன் ஜாமின் வழங்க மறுத்த டில்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மனு, நாளை மறுநாள் (ஆக.,23) விசாரிக்கப்படும்

முன் ஜாமின் வழங்க மறுத்த டில்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மனு, நாளை மறுநாள் (ஆக.,23) விசாரிக்கப்படும்

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த முறையீடு நீதிபதி ரமணா முன்னர், விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்ட அவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விற்கு அனுப்பினார். சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் குறைபாடு உள்ளதாகவும் அதனை சரி செய்யும்படி பதிவாளர் தரப்பில் கூறப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வு, அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால், சிதம்பரம் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார். சிபிஐ சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்…

Read More

சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய சிபிஐ :2 மணி நேரத்தில் ஆஜராக உத்தரவு

சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய சிபிஐ :2 மணி நேரத்தில் ஆஜராக உத்தரவு

அடுத்த 2 மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ நோட்டீஸ் ஒட்டியது. ஐ.என்.எஸ்., மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. கைது நடவடிக்கையை தவிர்க்க அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதுவும் நிராகரிக்கப்பட்டால் அவர் கைதாவார். இந்நிலையில் டில்லியில் உள்ள சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். சிதம்பரம் வீட்டிற்கு இன்று ( ஆக.20) இரவு 11.30 மணிக்கு வந்த 4 சிபிஐ அதிகாரிகள், அடுத்த 2 மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் சிதம்பரம்…

Read More

சுதந்திர தின விழாவை, லடாக் தொகுதி பா.ஜ., எம்.பி., ஜம்யங் ஷெரீங் நம்ஜியால், நண்பர்களுடன் நடனமாடி கொண்டாடினார்

சுதந்திர தின விழாவை, லடாக் தொகுதி பா.ஜ., எம்.பி., ஜம்யங் ஷெரீங் நம்ஜியால், நண்பர்களுடன் நடனமாடி கொண்டாடினார்

சுதந்திர தின விழாவை, லடாக் தொகுதி பா.ஜ., எம்.பி., ஜம்யங் ஷெரீங் நம்ஜியால், நண்பர்களுடன் நடனமாடி கொண்டாடினார். காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, லடாக் தொகுதி எம்.பி.,யான பா.ஜ.,வை சேர்ந்த ஜம்யங் ஷெரீங் நம்ஜியால் பேசினார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து காரணமாக லடாக் பகுதி வளர்ச்சி பெறவில்லை. சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர், மாநிலத்தை, குடும்ப தொழிலுக்காக பயன்படுத்தினர். அந்தஸ்து நீக்கப்பட்டால், அவர்களின் தொழில்…

Read More

கயிறும், திலகமும் ஜாதி அடையாளமா? இந்து அமைப்புகள் எதிர்ப்பால் உத்தரவு வாபஸ்

கயிறும், திலகமும் ஜாதி அடையாளமா? இந்து அமைப்புகள் எதிர்ப்பால் உத்தரவு வாபஸ்

தமிழக பள்ளிகளில் மாணவர்கள் கையில் வண்ண கயிறு, நெற்றியில் திலகம் அணிந்து வருவதை ஜாதி அடையாளமாக சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக பள்ளி கல்வித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, உத்தரவை கல்வித்துறை வாபஸ் பெற்றது. தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகம், சமீபத்தில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதில், ‘பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தமிழக பள்ளிகளை பார்வையிட்டபோது, ஒரு சில பள்ளிகளில் விளையாட்டு அணி தேர்வு செய்யும் போதும், மதிய உணவு இடைவேளை மற்றும் வகுப்பு நேரங்களிலும், குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள், அடையாளம் கண்டு ஒன்று கூடிக்கொள்ளும் வகையில், தங்களது கையில் சிவப்பு, மஞ்சள்,…

Read More

காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ராஜதந்திரத்துடன் கையாண்டதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ராஜதந்திரத்துடன் கையாண்டதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ராஜதந்திரத்துடன் கையாண்டதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது. காஷ்மீர், இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ ஏதுவாகவும், தாய்வீடாகவும் இருந்தது. எனவே இந்த விவகாரத்தை ராஜதந்திரத்துடன் அமித் ஷா, மோடி கையாண்டுள்ளனர். முதலில் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு பின்னர் பார்லிக்கு கொண்டு வந்தனர். மோடியையும், அமித்ஷாவையும், கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு இணையாக கூறப்பட்டது குறித்து கேட்டதற்கு, ‘கிருஷ்ணன் யோசனை வழங்குபவர், அர்ஜுனன் அதை செயல்படுத்துபவர் . காஷ்மீர் விவகாரத்தில் இருவரும் ராஜதந்திரத்துடன் செயல்பட்டதால் அவ்வாறு கூறினேன். எதை அரசியல் ஆக்க கூடாது; எதை அரசியல் ஆக்க வேண்டும் என்பதை சில…

Read More

ஆக.,15ல் காஷ்மீரில் தேசிய கொடி ஏற்றுகிறாரா அமித்ஷா?

ஆக.,15ல் காஷ்மீரில் தேசிய கொடி ஏற்றுகிறாரா அமித்ஷா?

ஆக.,15ல் காஷ்மீரில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறு திட்டம் எதுவும் இல்லை என அரசு தரப்பு வட்டாரங்கள் மறுத்துள்ளன. நாட்டின் 73வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி (ஆக.,15) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்ததுடன், காஷ்மீர், லடாக் என மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவையும் பார்லி.,யில் நிறைவேற்றியது. இதனால், காஷ்மீரில் வரும் சுதந்திரதினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் ஸ்ரீநகரிலுள்ள, லால் சவுக்கில் நடைபெறும் சுதந்திர தின விழா…

Read More
1 86 87 88 89 90 181