பியர் கிரில்சுடன் இணைந்து காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பியர் கிரில்சுடன் இணைந்து காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

மேன் விஸ் வைல்டு (MAN vs WILD) நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும் பங்கேற்று சுவாரஸ்யமான பயணத்தை மேற்கொண்ட டிரைலர் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான மேன் விஸ் வைல்டு (MAN vs WILD) நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும் பங்கேற்று சுவாரஸ்யமான பயணத்தை மேற்கொண்ட டிரைலர் வெளியாகி உள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் விஸ் வைல்டு (MAN vs WILD) நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மலைகள், காடுகள், நதி, கடல் என பல்வேறு இடங்களிலும் பியர் கிரில்ஸ் சாகசப் பயணம் மேற்கொள்வதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது. இந்நிலையில், பியர் கிரில்சுடன் இணைந்து பிரதமர்…

Read More

மகாராஷ்டிரா மாநிலத்திலும் சுமார் 50 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வரை பா.ஜ.,வுக்கு தாவத் தயார்

மகாராஷ்டிரா மாநிலத்திலும் சுமார் 50 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வரை பா.ஜ.,வுக்கு தாவத் தயார்

மகாராஷ்டிரா மாநிலத்திலும் சுமார் 50 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வரை பா.ஜ.,வுக்கு தாவத் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சி கவலை அடைந்திருக்கிறது. தற்போது அங்கு பா.ஜ.,வின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ..-சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த நிலையில் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பா.ஜ., மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள். இதற்கிடையே கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய தலைவர்களை பா.ஜ.,வுக்கு இழுக்க…

Read More

சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி,இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, இந்திய துாதரக அதிகாரிகளை சந்தித்து பேச, வாய்ப்பு

சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி,இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, இந்திய துாதரக அதிகாரிகளை சந்தித்து பேச, வாய்ப்பு

இஸ்லாமாபாத்:’சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி,இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, இந்திய துாதரக அதிகாரிகளை சந்தித்து பேச, வாய்ப்பு வழங்கப்படும்’ என, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும், உளவு பார்த்ததாகவும், மூன்றாண்டுகளுக்கு முன், குல்பூஷன் ஜாதவ், , பாகிஸ்தான் உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான அவருக்கு, பாக்., ராணுவ நீதிமன்றம், மரண தண்டனை விதித்துள்ளது. அதை எதிர்த்து, இந்திய தரப்பில், சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின், 17ல், தீர்ப்பு வழங்கப்பட்டது. ‘குல்பூஷன் ஜாதவ் மீதான தண்டனையை, பாக்., மறு பரிசீலனை செய்ய வேண்டும்; இந்திய துாதரக அதிகாரிகள், அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்’ என, உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், பாக்., வெளியுறவுத்…

Read More

கவிழ்ந்தார் குமாரசாமி; எழுவாரா எடியூரப்பா?

கவிழ்ந்தார் குமாரசாமி; எழுவாரா எடியூரப்பா?

கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை குமாரசாமி வழங்கினார். கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் வஜூபாய் வாலா அறிவித்தார். புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்-மந்திரியாக குமாரசாமி தொடர வேண்டும் என்றும், நிர்வாக ரீதியாக எந்த முடிவுகளும் எடுக்க கூடாது எனவும் குமாரசாமிக்கு ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார். குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த நிலையில் நாளை கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின் பாஜக…

Read More

‘சந்திரயான் – 2’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில், ‘இஸ்ரோ’ நிலைநிறுத்தியது

‘சந்திரயான் – 2’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில், ‘இஸ்ரோ’ நிலைநிறுத்தியது

‘சந்திரயான் – 2’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில், ‘இஸ்ரோ’ நிலைநிறுத்தியது. நிலவை ஆய்வு செய்யும் முயற்சியில், இந்தியா மீண்டும் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை வெற்றிக்கு காரணமான, ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளுக்கு, நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நிலவின் தென்துருவ பகுதியில், கனிம வளங்கள், தண்ணீர் இருப்பு உள்ளதா, மனிதன் வாழ்வதற்கு சாதகமான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய, ‘சந்திரயான் — 2’ என்ற, விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘இஸ்ரோ’ உருவாக்கியது. அந்த விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, இஸ்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘சதீஸ் தவான்’ விண்வெளி ஆய்வு மையத்தின், 2வது ஏவுதளத்தில் இருந்து, நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது….

Read More

தமிழகத்தில் டிக் டாக் செயலி உறுதியாக தடைசெய்யப்படும் – அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டம்

தமிழகத்தில் டிக் டாக் செயலி உறுதியாக தடைசெய்யப்படும் – அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டம்

நாள்தோறும் டிக் டாக் செயலியால் பல்வேறு விபத்துகளும், குற்ற சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. முக்கியமாக பெண்கள் இதனால் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். இதனால் கடந்த வருடமே டிக் டாக் செயலி இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. எனினும் தவறான வீடியோக்கள், ஆபாசமான வீடியோக்கள் செயலியில் இடம்பெறாது என்று கூறி அனுமதி வாங்கி மீண்டும் வந்தது டிக்டாக் செயலி. இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாத்தில் பேசிய தமிமுன் அன்சாரி, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக பாதிக்கும் டிக் டாக் செயலி தடை செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, பதில் அளித்த தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது:- தமிழகத்தில் டிக் டாக் செயலி உறுதியாக தடைசெய்யப்படும்….

Read More

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு; நண்பர்கள் உற்சாக கொண்டாட்டம்

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு; நண்பர்கள் உற்சாக கொண்டாட்டம்

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட தகவல் அறிந்து நண்பர்கள் உற்சாகமுடன் கொண்டாடி வருகின்றனர். இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ். இவர், கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 3ந்தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் ‘ரா’ அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அவர் மீது குற்றம் சாட்டியது. இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐ.நா. அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும்…

Read More

சட்ட விரோத குடியேற்றம்: கட்டாயம் வெளியேற்றம்

சட்ட விரோத குடியேற்றம்: கட்டாயம் வெளியேற்றம்

இந்தியா முழுவதிலும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது பேசிய அமித்ஷா, சரியான குடிமக்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறோம். எனவே ஜூலை 31 ம் தேதி வரை அவகாசம் என சுப்ரீம் கோர்ட்டில் கேட்டுள்ளோம். சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் மற்றும் ஊடுருவியர்கள் அனைவரையும் அடையாளம் கண்டுபிடித்து, சர்வதேச குடியுரிமை சட்டத்தின்படி நாடு கடத்துவோம். பா.ஜ.,வின் தேர்தல் வாக்குறுதியில் இதுவும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என சில பெயர்கள் தேசிய குடியுரிமை பதிவு…

Read More

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட்டு நாளை தீர்ப்பு

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட்டு நாளை தீர்ப்பு

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ். இவர், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் ‘ரா’ அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அவர் மீது குற்றம் சாட்டியது. இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐ.நா. அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நிறைவேற்றி விட்டதோ என்ற…

Read More

காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு

காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு

லோக்சபாவில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் பேசுகையில், ”இந்திராவுக்கு பிறகு பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது பெண்மணியாக மீண்டும் வரலாறு படைத்து விட்டார், நிர்மலா சீதாராமன். இதற்காக எனது கட்சி சார்பில் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். சபைக்கு தமிழ் பாடலை கொண்டு வந்து அற்புதமான பிணைப்பை உண்டாக்கி விட்டார். அதே சமயத்தில், இந்த பட்ஜெட் அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் ஒரு ‘திரிசங்கு’ பட்ஜெட்டாக உள்ளது,” என்றார்.

Read More
1 88 89 90 91 92 181