கிறிஸ்தவருக்கு திருமலை பதவி: இந்துக்கள் கொந்தளிப்பு
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக கிறிஸ்தவரும் தாய்மாமாவுவான ஒய்.வி.சுப்பாரெட்டியை நியமிக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்துக்களின் புனிதத்தலமான திருமலை தேவஸ்தான தலைவராக ஒரு கிறிஸ்தவர் நியிமிக்கப்படுவது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெகன் மோகனின் தந்தையும் முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டி ஒரு கிறிஸ்தவர். அவரது தாய்மாமாவான சுப்பாரெட்டியும் கிறிஸ்தவர் என தகவல் வெளியானது. ஆனால், இதனை சுப்பாரெட்டி மறுத்துள்ளார். சுப்பாரெட்டியின் நியமனம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. டுவிட்டர்வாசி ஒருவர், சர்ச் அல்லது வாடிகன் பொறுப்பில் ஹிந்து ஒருவரை தலைவராக நியமிக்க முடியுமா ? அது முடியாத போது, ஹிந்து கோவிலில் கிறிஸ்தவரை நியமிப்பது ஏன்?…
Read More









