காஷ்மீரில் ‘பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே 370வது பிரிவு பயன்பட்டது – பிரகாஷ் ஜவடேகர்

காஷ்மீரில் ‘பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே 370வது பிரிவு பயன்பட்டது – பிரகாஷ் ஜவடேகர்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370–ஐ மத்திய அரசு ரத்து செய்தது. இது தொடர்பாக காஷ்மீர் மட்டுமின்றி நாடு முழுவதும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே இந்த பிரிவு பயன்பட்டதாக மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு உள்ளதால், அந்த மாநில மக்கள் இனிமேல் பிற மாநிலத்தவர்கள் பெற்று வரும் உரிமைகளை பெறுவார்கள். அந்த மாநில வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படும்’ என்று தெரிவித்தார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக 370–வது பிரிவின் விலங்குகளில் இருந்து காஷ்மீர் மக்களுக்கு விடுதலை அளிக்க காங்கிரஸ்…

Read More

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுக்கு 33 % இட ஒதுக்கீடு

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுக்கு 33 % இட ஒதுக்கீடு

‘தமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.வுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும்’ என சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் பழனிசாமியிடம் கண்டிப்புடன் கூறியுள்ளார். கவர்னர் மாளிகையில் அமித்ஷாவை முதல்வர் சந்தித்தது போது இந்த நெருக்கடி தரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய ‘கற்றல், கற்பித்தல், தலைமையேற்றல்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பா.ஜ., தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்று முன்தினம் சென்னை வந்து கவர்னர் மாளிகையில் தங்கினார். அப்போது அமித்ஷாவை தமிழக முதல்வர் பழனிசாமி திடீரென சந்தித்து…

Read More

வைகோ – காங்கிரஸ் கடும் மோதல்: காஷ்மீர் தொடர்பான நாடாளுமன்ற உரை

வைகோ – காங்கிரஸ் கடும் மோதல்: காஷ்மீர் தொடர்பான நாடாளுமன்ற உரை

காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கவும் அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளை ரத்துசெய்யவுமான மசோதாக்கள் திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது மாநிலங்களவையில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்த விவகாரம் குறித்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார். அந்தப் பேச்சில் அவர் காங்கிரஸ் கட்சியையும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் கடுமையாகத் தாக்கினார். “காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என நேரு வாக்குறுதியளித்தார். ஆனால், நடத்தப்படவில்லை. இதையடுத்து 1958ல் ஷேக் அப்துல்லா போராட்டம் நடத்தினார். அவர் கொடைக்கானலில் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. அதையே பொது வாக்கெடுப்பு என்று சொன்னார்கள். ஒரு மோசடியை காங்கிரஸ் கட்சி நிகழ்த்தியது. எனக்கு நேருவின் மீது மரியாதை இருக்கிறது….

Read More

காஷ்மீரில் பயங்கரவாதம் நெருங்கக்கூட முடியாது: பிரதமர் மோடி

காஷ்மீரில் பயங்கரவாதம் நெருங்கக்கூட முடியாது: பிரதமர் மோடி

‘காஷ்மீர், லடாக்கில் இனி பயங்கரவாதம் நெருங்கக்கூட முடியாது. காஷ்மீர் மக்களுக்கு மறுவாழ்வு துவங்கியுள்ளது’ என பிரதமர் மோடி தெரிவித்தார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின், நாட்டு மக்களுக்கு முதன்முறையாக பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றினார். சுமார் 40 நிமிடங்கள் அவர் ஆற்றிய உரை: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. காஷ்மீர், லடாக் மக்கள் துயரத்தில் இருந்தனர். நீண்ட நாட்களாக இருந்த அவர்களது துயரம் தற்போது நீங்கி உள்ளது. காஷ்மீரில் புதிய சகாப்தம் துவங்கி உள்ளது. வல்லபாய் படேல், அம்பேத்கர், ஷியாம பிரசாத் முகர்ஜி ஆகியோர் இந்திய ஒற்றுமையில் உறுதியாக இருந்தனர்….

Read More

காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது பாகிஸ்தான்

மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விவாதிப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி பாவத் சவுத்ரி, இந்தியா உடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும் என கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘‘இந்திய தூதர் ஏன் இங்கே இருக்கிறார்? நாம் ஏன் தூதரக உறவுகளை துண்டிக்கவில்லை? இரு நாடுகளுக்கும் இடையில் தூதரகம் இல்லாதபோது, அங்கு (இந்தியாவில்) நமது தூதர் என்ன செய்கிறார்?’’ என சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும், ‘‘காஷ்மீர் மற்றொரு பாலஸ்தீனமாக மாற பாகிஸ்தான் அனுமதிக்கக்கூடாது’’ என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ‘‘பாகிஸ்தான் போருக்கு பயப்படக்கூடாது, ஏனென்றால் எதையும் விட மரியாதை முக்கியமானது….

Read More

காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால், அரசு பங்களாக்களில் பல காலமாக வசித்து வந்த மாஜி முதல்வர்கள் காலி செய்தே ஆக வேண்டிய கட்டாய நிலை

காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால், அரசு பங்களாக்களில் பல காலமாக வசித்து வந்த மாஜி முதல்வர்கள் காலி செய்தே ஆக வேண்டிய கட்டாய நிலை

காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால், அரசு பங்களாக்களில் பல காலமாக வசித்து வந்த மாஜி முதல்வர்கள் காலி செய்தே ஆக வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அனைத்து முன்னாள் முதல்வர்களும் தங்களின் பதவிக்காலம் முடிந்த பிறகு அரசு பங்களாக்களில் வாடகை ஏதும் செலுத்தாமல் இலவசமாக வசித்து வருகின்றனர். இவர்களில் குலாம் நபி ஆசாத் தவிர மற்ற அனைவரும், வாழ்நாள் முழுவதும் அதே வீட்டில் வசிக்க போகிறோம் என்ற எண்ணத்தில் அரசு பங்களாக்களை கோடிக்கணக்கில் செலவழித்து தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர். ஓமர் அப்துல்லாவும், மெகபூபாவும்…

Read More

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் இன்று (ஆக்.06) காலமானார். பா.ஜ.,வின், மூத்த தலைவர்களில் ஒருவர், சுஷ்மா சுவராஜ், 67 , கடந்த 2014 லோக்சபா தேர்தலில், மத்திய பிரதேச மாநிலம், விதிஷா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். மோடி அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக திறம்பட பணியாற்றினார். சர்க்கரை நோயாளியான சுஷ்மாவுக்கு, 2016ல், சிறுநீரகங்கள் செயல் இழந்தன. டில்லி, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில், அவருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதையடுத்து நடந்து முடிந்த 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் தீவிர அரசியலில் இருந்து விலகினார். இந்நிலையில், சுஷ்மாவுக்கு இன்று (ஆக.,06) திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….

Read More

அமர்நாத் யாத்திரை: யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் உடனே திரும்பி செல்ல அரசு எச்சரிக்கை

அமர்நாத் யாத்திரை: யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் உடனே திரும்பி செல்ல அரசு எச்சரிக்கை

பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடனே சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல மாநில அரசு அறிவுரை வழங்கியுள்ளது. ஸ்ரீநகரில் நிருபர்களை சந்தித்த ராணுவ அதிகாரிகள், அமர்நாத் யாத்திரைக்கு பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாகவும், அந்த பகுதியில் பிடிபட்ட பயங்கரவாதியிடம், இலக்கை நோக்கி துல்லியமாக சுட உதவும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினர். பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், காஷ்மீர் உள்துறை செயலர் ஷலீன் காப்ரா பிறப்பித்த உத்தரவு: அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் முயற்சிக்கக் கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சுற்றுலா பயணிகள் மற்றும்…

Read More

முத்தலாக் சட்டம்: முஸ்லிம் பெண்கள் கொண்டாட்டம்

முத்தலாக் சட்டம்: முஸ்லிம் பெண்கள் கொண்டாட்டம்

ராஜ்யசபாவில், முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டதை உ.பி.,யின் லக்னோ, வாரணாசி உள்ளிட்ட பல நகரங்களில் முஸ்லிம் பெண்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். திருமணமான முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவியை விட்டு நிரந்தரமாக பிரிய விரும்பினால், மூன்று முறை, ‘தலாக்’ கூறி, விவாகரத்து செய்யும் நடைமுறை அமலில் இருந்தது. முத்தலாக் முறைக்கு தடை விதித்து, 2017ல், அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதை சட்டமாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது; ராஜ்யசபாவில் நிறைவேறவில்லை. இதனால், அவசர சட்டம் காலாவதியானது. தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்தது. முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்ற…

Read More

முத்தலாக் தடை மசோதா நிறைவேறிய இந்த நாள் சமூக நீதிக்கு ஒரு மைல்கல்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

முத்தலாக் தடை மசோதா நிறைவேறிய இந்த நாள் சமூக நீதிக்கு ஒரு மைல்கல்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

முத்தலாக் தடை மசோதா நிறைவேறிய இந்த நாள் சமூக நீதிக்கு ஒரு மைல்கல் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். முத்தலாக் தடை மசோதா லோக்சபாவில் கடந்த 25-ம் தேதி நிறைவவேறியது. இதனையடுத்து ராஜ்யசபாவில் இன்று (30-ம் தேதி) நிறைவேறியது. முத்தலாக் முறையை ரத்து செய்வதற்கான மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதன் மூலம், மசோதா பார்லிமென்டின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இந்த மசோதா சமூக நீதிக்கு ஒரு மைல் கல்லாகும். நாடே திருப்தியடைந்த தருணம் இது. இவ்வாறு அவர் கூறி உள்ளார். @rashtrapatibhvn Passage in the Rajya Sabha of Muslim Women (Protection of Rights on Marriage) Bill completes Parliament’s approval of…

Read More
1 87 88 89 90 91 181