ரத்து செய்யப்பட்ட சலுகைகள் தர சிறைத் துறை முடிவு?-உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் முருகன்
ரத்து செய்யப்பட்ட அனைத்து சலுகைகளும் தரப்படும், பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என சிறைத் துறை தரப்பில் அளித்த வாக்குறுதியையடுத்து, வேலூர் சிறையில் 12 நாட்களாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை முருகன் கைவிட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 26 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், ஜீவசமாதி அடைய விருப்பம் தெரிவித்து சிறைத் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தார். இதையடுத்து, கடந்த 18-ம் தேதி முதல் அவர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். இதனால், சிறையில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை எனவும் சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்….
Read More







