- அயோத்தியில் அழகிய தமிழ் கோவில் - அம்மாஜி மந்திர் !!
- திருமங்கை ஆழ்வார் - திரு நாங்கூர் 11 கருட சேவை : எம்பார் கஸ்தூரி
- 'நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா எந்த தகவலும் பகிரவில்லை' : ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
- குலதெய்வ கோவிலில் நடந்த மாபெரும் அதிசயம் !!
- திருவிக்கிரம பெருமாள் : திவ்ய தேச தரிசனம் & ஸ்தல புராணம் !!
கொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு !!
கொழும்பு, கம்பஹா – மஹர சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு பயந்து சிறையிலிருந்து கைதிகள் சிலர் தப்ப முயன்றதால் இது நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று, ஞாயிற்றுக்கிழமை, மாலை நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். காயமடைந்துள்ள கைதிகள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை திடீரென அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக போலீஸ் விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பிற்காக களனி பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட போலீஸ்…
Read More