இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர் கைது
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரருக்கும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் இடையில் தொடர்பிருந்தமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று, புதன்கிழமை, இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனிற்கும், ஈஸ்டர் தாக்குதலுக்கும் இடையில் தொடர்புள்ளதா என ஊடகவியலாளர்கள் இதன்போது போலீஸ் ஊடகப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த போலீஸ் ஊடகப் பேச்சாளர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரருக்கு இந்த சம்பவத்துடன் தொடர்புள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறினார். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் தாம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாக அவர்…
Read More







