மியாமி நகரில் 12 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்ததில் 24 பேர் பலி !!

மியாமி நகரில் 12 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்ததில் 24 பேர் பலி !!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் ஜூன் 24 அன்று 12 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்ததில், 24 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கி, காணமல் போன 121 பேர் பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. 1980இல் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள கார் நிறுத்தகத்தின் சுவர்களில் நீர் கசிவு ஏற்பட்டு பலவீனமானதாலும், ஆ.சி.சி கான்க்ரீட் தளங்களில் உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, பலமிலந்ததாலும், இந்த கட்டிடம் இடிந்து நெறுங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. காணாமல் போன 121 பேரை கண்டுபிடிக்கும் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டு, பாதி இடிந்த நிலையில்…

Read More

வெயில் கொடுமையால் 4 நாட்களில் வெயிலின் தாக்கத்தால் கனடாவில் 233 பேர் பலி

வெயில் கொடுமையால் 4 நாட்களில் வெயிலின் தாக்கத்தால் கனடாவில் 233 பேர் பலி

கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அங்கு கோடைக்காலம். இந்தாண்டு கோடைக்காலம் கடும் வெப்பமானதாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் செவ்வாயன்று புதிய உச்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மிக அதிகபட்சமாக லைட்டான் நகரத்தில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. வெப்ப அலை தொடங்கிய நான்கு நாட்களில் கனடாவில் 233 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் உயரும் என்கின்றனர். மக்களை வீடுகளை விட்டு வர வேண்டாம் என்றும் குளிர்சாதன அறைகளில் இருக்கும் படியும் கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ளது….

Read More

‘ஸ்பெல்லிங் பீ:’ தொடர்ந்து கலக்கும் இந்திய வம்சாவளி குழந்தைகள்

‘ஸ்பெல்லிங் பீ:’ தொடர்ந்து கலக்கும் இந்திய வம்சாவளி குழந்தைகள்

அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகளுக்கு இடையே ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற போட்டி ‘ஸ்பெல்லிங் பீ’. இதில், கடந்த 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திய – அமெரிக்க குழந்தைகள்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று வருகின்றனர். கோவிட் பெருந்தொற்று பாதிப்பால் 2020ம் ஆண்டு இந்தப் போட்டி நடைபெறவில்லை. கடைசியாக 2019ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது 8 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் இந்திய – அமெரிக்க குழந்தைகள். இந்நிலையில், இந்த ஆண்டு ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி ஆன்லைன் முறையில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தவர். அதில், 209 குழந்தைகள் தேர்வாகினர். அவர்களில்…

Read More

இஸ்ரேலில் இனி பொது மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என அறிவிப்பு

இஸ்ரேலில் இனி பொது மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என அறிவிப்பு

இஸ்ரேலில் 16 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், 16 வயதிற்கு மேற்பட்ட 81 சதவீத பேருக்கு இரண்டு தவணை கொரோனா கடந்த தடுப்பூசி ஏப்ரல் மாதம் செலுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில் பொது இடங்களில் உள்ள உள்அரங்கங்களில் இனி பொது மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read More

பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி 30 பேர் பலி

பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி 30 பேர் பலி

தெற்கு பாகிஸ்தானில் இரண்டு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் பலியாகினர். தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி பகுதியில் சர் சையது விரைவு ரயிலும், மில்லத் விரைவு ரயிலும் இன்று (ஜூன் 7) காலை நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் 14 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த சம்பவத்தில் 30 பேர் பலியானதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கோட்கி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

இஸ்ரேலில் மெரோனில் புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலத்தில் கூடிய மக்கள் கூட்டத்தில் சிக்கி 44 பேர் பலி

இஸ்ரேலில் மெரோனில் புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலத்தில் கூடிய மக்கள் கூட்டத்தில் சிக்கி 44 பேர் பலி

மெரோன்: வடக்கு இஸ்ரேலில் உள்ள மெரோனில் புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலத்தில் கூடிய மக்கள் கூட்டத்தில் சிக்கி 44 பேர் பலியானார்கள். வடக்கு இஸ்ரேலில் புகழ்பெற்ற கல்லறை ஸ்தலத்தில் விடுமுறையை கொண்டாட ஏராளமான இஸ்ரேல் மக்கள் ஒன்று கூடுவார்கள். அவ்வாறு கூடியதில் இன்று(ஏப்.,30) கூட்டத்தில் சிக்கி 44 பேர் பலியாகினர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு இந்த ஸ்தலம் மூடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தடுப்பூசியால் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதால் மீண்டும் யாத்திரை ஸ்தலம் திறக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் கூட்டம் கூடியதால் கூட்டநெரிசலில் சிக்கி 44 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை…

Read More

பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 3-வது கட்டமாக 10 லட்சம் தடுப்பூசிகளை வாங்கியுள்ளது

பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 3-வது கட்டமாக 10 லட்சம் தடுப்பூசிகளை வாங்கியுள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக அங்கு வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 4,825 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது.இதுவரை அங்கு 8 லட்சத்து 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் நேற்று ஒரே நாளில் 70 பேர் கொரோனாவுக்கு பலியானது மூலம் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை…

Read More

யூடியூப், கூகுள் செயலிகளை முடக்க ஹேக்கிங் அட்டாக் நடந்ததா ?

யூடியூப், கூகுள் செயலிகளை முடக்க ஹேக்கிங் அட்டாக் நடந்ததா ?

பிரபல இணையதளமான கூகுள் நிறுவனத்தின் பல்வேறு செயலிகள் உலகம் முழுவதும் முடங்கின. தற்போது படிப்படியாக செயலிகள் சீராக செயல்பட துவங்கின. கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜிமெயில், பிளே ஸ்டோர், கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட பல செயலிகள் உலகம் முழுவதும் திடீரென முடங்கின. அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் மாலை 5 மணி முதல் படிப்படியாக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சர்வர் கோளாறு காரணமாக கூகுள் நிறுவன செயலிகள் செயல்படவில்லை என தகவல் வெளியாயின இதனையடுத்து #GoogleDown #YouTubeDOWN போன்ற ஹேஸ்டேக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. இந்த செயலிகள் முடக்கமானது மொபைல் போனில் மட்டுமே உள்ளதாகவும், கணினிகளில் கூகுள்…

Read More

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பயங்கரமாக பரவுகிறது !!

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பயங்கரமாக பரவுகிறது !!

உலகின் பல்வேறு நாடுகளையும் கொரோனா வைரசின் தாக்கம் அச்சுறுத்தி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆயினும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தீவிரமடைந்து பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் லண்டனில் அனைத்து மருத்துவ மனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதையடுத்து பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சுகாதாரதுறை செயலர் மாட் ஹான்காக் கூறுகையில், லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்கும் ‘கொரோனா வைரசின் புதிய மாறுபாடு’ வல்லுனர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு பிரிட்டனின் பல்வேறு இடங்களில்…

Read More

கொரோனாவால் மனநல நோயாளிகள் அவதி – உலக சுகாதார அமைப்பு

கொரோனாவால் மனநல நோயாளிகள் அவதி – உலக சுகாதார அமைப்பு

‘கொரோனா தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் நெருக்கடி உண்டாகி உள்ளது’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது:உலக நாடுகளில் மனநலம் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நீண்டநாள் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகம்.தற்போது கொரோனா தாக்கம் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் நெருக்கடி உண்டாகி உள்ளது. இதனால் அவர்களது உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட முக்கியமான துறைகளில் இதுவும் ஒன்று. கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உலக சுகாதார நிறுவனம் 130 நாடுகளை நாடுகளில் கணக்கெடுப்பு…

Read More
1 2 3 4 8