லூசியானா, டெக்சாஸ் மாகாணங்களை புரட்டிப் போட்ட ‘லாரா’ புயல்
அமெரிக்காவின் லூசியானா, டெக்சாஸ் மாகாணங்களை தாக்கிய ‘லாரா’ புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. லூசியானா மாகாணத்தில் வியாழன் (ஆக.,27) அதிகாலை கேம்ரான் மற்றும் போல்க் துறைமுகம் இடையே புயல் கரை கடந்த போது மணிக்கு 280 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது. கடலில் பல அடி உயரத்திற்கு அலைகள் எழுந்தன. கடற்கரை பகுதிகளில் 25 செ.மீ., அளவிற்கு கனமழை பதிவாகி உள்ளது. கடந்த 160 ஆண்டுகளில் இப்படி ஒரு புயல் தாக்கியதில்லை என்று மாகாணவாசிகள் கூறுகின்றனர். பலத்த காற்று காரணமாக மரம் விழுந்து 14 வயது சிறுமி பலியானார். புயல் மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்….
Read More









