சீனாவின் குட்டை வெளிப்படுத்த முயன்ற பத்திரிகையாளர் கைது !!

சீனாவின் குட்டை வெளிப்படுத்த முயன்ற பத்திரிகையாளர் கைது !!

கடந்த ஆண்டு டிச., மாதம் சீனாவின் ஒரு வூஹான் நகரத்தில் இருந்து கொரோனா வைரஸ் உலகிற்கு பரவியது. பரிசோதனை கூடத்தில் இருந்த வவ்வால் இறகு சாம்பிள் குளிர்பதனப் பெட்டியில் இருந்து தவறுதலாக குப்பையில் கொட்டப்பட்டது. இது அருகிலிருந்த இறைச்சி சந்தைக்கு சென்று வாடிக்கையாளர்கள் அதனை சாப்பிட்டு கொரோனா வைரஸ் அவர்களது நுரையீரலை பாதித்து உலகம் முழுவதும் பரவியது என்று சீன அரசு கூறுகிறது. ஆனால் எதிரி நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்க சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியதா என்ற கேள்வி எழுந்தது. இதனை அடுத்து கொரோனா தடுப்பு மருந்து சோதனை ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது என்று கண்டுபிடிக்க வேண்டும்…

Read More

கற்பழித்தால் ஆண்மை நீக்கப்படும் – அவசர சட்டத்திற்கு பாக்., அதிபர் ஒப்புதல்

கற்பழித்தால் ஆண்மை நீக்கப்படும் – அவசர சட்டத்திற்கு பாக்., அதிபர் ஒப்புதல்

பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த கொடூர செயலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனையடுத்து கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.   இந்நிலையில், இந்த சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வியும் ஒப்புதல்…

Read More

காலிஸ்தான் பயங்கரவாதத்தை மீண்டும் துாண்டும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.

காலிஸ்தான் பயங்கரவாதத்தை மீண்டும் துாண்டும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.

பஞ்சாபில், மறைந்த பயங்கரவாதி பிந்தரன்வாலேவின் உறவினர் லக்பீர் சிங் ரோடேவை பயன்படுத்தி, காலிஸ்தான் பயங்கரவாதத்தை மீண்டும் துாண்ட, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., முயற்சித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில், 1980ம் ஆண்டுகளில், காலிஸ்தான் பயங்கரவாதம் மிக தீவிரமாக இருந்தது. காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பிந்தரன்வாலே, 1984ல், அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ராணுவம் நடத்திய, ‘ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கையில் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, அப்போதைய பிரதமர் இந்திரா, அவரது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன்பின், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதம் அடங்கியது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலரும், தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாபில் மீண்டும்…

Read More

தென் சீன கடல் பரப்பை முழுவதுமாக ஆக்கிரமிக்க முயலும் சீனா..!

தென் சீன கடல் பரப்பை முழுவதுமாக ஆக்கிரமிக்க முயலும் சீனா..!

எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சர்ச்சைக்குரிய கடல் பகுதிகளில் ஒன்று தென் சீன கடல் பகுதி. இதில் அவ்வப்போது சீனா போர் பயிற்சியில் ஈடுபடும். மேலும் இங்கு உள்ள சீனாவுக்கு சொந்தமான சிறிய தீவுகளில் ராணுவ தளவாடங்களை அமைத்துள்ளது சீனா. 3.3 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கடற்பரப்பில் நீர்மூழ்கி போர்க் கப்பல்களையும் சீனா பயன்படுத்தி வருகிறது.   இதனால் அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியாவுடன் போர் அபாயம் ஏற்பட்டு விடும் என்று அந்த நாட்டு தலைவர்கள் அச்சப்படுகின்றனர். ஆனால் சீனாவின் இந்த நடவடிக்கைகளால் அண்டை நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படுவது வாய்ப்பில்லை என்றும் தற்காப்புக்காகவே சீனா தென்சீனக்கடலை பயன்படுத்தி வருகிறது என்றும்…

Read More

‘ஹிந்து, சீக்கியர் மீதான தாக்குதலை ஐ.நா., ஏன் பொருட்படுத்துவதில்லை’ கேட்கிறது இந்தியா !!

‘ஹிந்து, சீக்கியர் மீதான தாக்குதலை ஐ.நா., ஏன் பொருட்படுத்துவதில்லை’ கேட்கிறது இந்தியா !!

‘குறிப்பிட்ட மதத்தின் மீதான தாக்குதல் குறித்து கவலை தெரிவிக்கும், ஐ.நா., சபை, ஹிந்து, புத்த, சீக்கிய மதத்தினர் மீதான தாக்குதலை ஏன் கண்டுகொள்வதில்லை’ என, இந்தியா கடுமையாக சாடியுள்ளது. ஐ.நா., பொதுச் சபையில், ‘அமைதி கலாசாரம்’ என்ற பெயரில், மத ரீதியில் நடக்கும் தாக்குதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், ஐ.நா.,வுக்கான இந்தியக் குழுவின் முதன்மை செயலர், ஆஷிஷ் சர்மா பேசியதாவது:கிறிஸ்துவம், யூத, இஸ்லாமிய மதத்தின் மீதான தாக்குதல்கள் குறித்து, ஐ.நா., சபையில் இத்தனை ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மதத்தினர் மீதான தாக்குதலை, இந்தியாவும் கடுமையாக எதிர்க்கிறது. அதே நேரத்தில் மற்ற மதத்தினர் குறித்து, ஐ.நா., பாராமுகமாக இருந்து வருகிறது.புத்த,…

Read More

நைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை

நைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை

நைஜீரியாவில் விவசாயிகளுடன் மோதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், 110 விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர முறையில் கொலை செய்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ்., அமைப்பினை நிறுவ போகோ ஹரம் பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து அந்நாட்டில் போகோ ஹரம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. இந்நிலையில், போர்னோ பிராந்தியம் அருகே அதன் தலைநகர் மைடுகுரியில் உள்ள கோசிப் என்ற கிராமத்தில் பண்ணை நிலங்களில் விவசாயிகள் பலர் வேலையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அவர்களிடம் நெருங்கி வந்த ஒருவன் உணவு தரும்படி கேட்டுள்ளான். அவனை விவசாயிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில்…

Read More

நியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்

நியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்

நியூசிலாந்தில் நடந்த எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் அந்நாட்டின் எம்.பி.,யாக தேர்வாகியுள்ள இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் கவுரவ் சர்மா சமஸ்கிருத மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். நியூசிலாந்து நாட்டில் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிட்ட டாக்டர் கவுரவ் சர்மா அந்நாட்டின் மேற்கு ஹாமில்டன் தொகுதியில் எம்.பி., யாக வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த புதனன்று அந்நாட்டு பார்லியில் நடந்த பதவியேற்பு விழாவில் எம்.பி., டாக்டர் கவுரவ் சர்மா சமஸ்கிருத மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 33 வயது நிரம்பிய சர்மா நாவ்டானில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது முகநூல் பதிவில், ‛நான் சமஸ்கிருதத்தை ஆரம்பம் மற்றும் இடைநிலை பள்ளிப்பருவத்திலிருந்து கற்று…

Read More

நிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் – சீன அதிபர் உத்தரவு

நிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும்  – சீன அதிபர் உத்தரவு

மத்திய ராணுவ ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜிங்பிங், ராணுவ பயிற்சிகள் நிஜ போரை போன்று இருக்க வேண்டும். எப்போதும் தயார் நிலை தேவை என உத்தரவிட்டுள்ளார். சீனாவின் மத்திய ராணுவ ஆணையம் என்பது 20 லட்சம் வீரர்களை கொண்ட ராணுவத்தின் தலைமை அமைப்பாகும். இதன் தலைவராக அதிபரே உள்ளார். நேற்று (நவ.,25) அவ்வமைப்பின் கூட்டத்தில் ஜி ஜிங்பிங் பங்கேற்றார். உண்மையான போர் நிலைமையை மையமாக கொண்டு பயிற்சிகள் அமைக்கப்பட வேண்டும். போர்களை வெல்லும் திறனை அதிகரிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி, தங்கள் நாட்டு ராணுவத்தை 2027-க்குள் அமெரிக்க ராணுவத்துக்கு இணையானதாக மாற்ற திட்டமிட்டுள்ளது….

Read More

தூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் !!

தூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் !!

தூத்துக்குடி கடலோர பகுதியில் இன்று(நவ.,25) பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படையினர் தூத்துக்குடி அருகே, இந்திய – இலங்கை கடலோர எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய எல்லையில் படகு ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த படகை சோதனை செய்தனர். அதில், படகில் இருந்து 30 டன் ஹெராயின், கிறிஸ்டல் மேத்தலின் போதை பொருள், 10 துப்பாக்கிகள் பறிமுதல் செய்தனர். படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு போதை பொருள் கடத்தி வரப்பட்ட நிலையில் படகு பறிமுதல் செய்யப்பட்டது. நீலகிரி-…

Read More

நோபிள் பரிசு கேலிக்கூத்து ? காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு !!

நோபிள் பரிசு கேலிக்கூத்து ? காந்திக்கு நோபிள் பரிசு கிடையாது ஆனால் ஒபாமாவுக்கு பரிசு !!

அமைதிக்கான நோபல் பரிசுக்கு (1937, 1938, 1939, 1947, 1948) பரிந்துரைக்கப்பட்டார். பரிசு வழங்கப்படவில்லை. 2006ஆம் ஆண்டு நோபல் பரிசு கமிட்டி, காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்குப் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது. இந்நிலையில், நோபல் அறக்கட்டளையின் சார்பில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: மஹாத்மா காந்தி தேச நலனுக்காக அதிகம் செயல்பட்டார். உலக அமைதிக்கு கலங்கரை விளக்கமாக செயல்படுபவருக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த தேசியவாதத்தன்மை கொண்டிருந்த காரணத்தினால் தான் மஹாத்மா காந்திக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என நோபல் அறக்கட்டளை தெரிவித்திருந்தது.

Read More
1 8 9 10 11 12 48