இந்திய பெண் முதன்முறையாக இந்திய பெண் நியூசிலாந்தின் அமைச்சராகிறார் !!
நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண், அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக 5 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களில் ஒருவர் இந்திய வம்சாவளி பெண் பிரியங்கா ராதாகிருஷ்ணன், 41. இவர் சென்னையில் பிறந்து சிங்கப்பூரில் படித்து வளர்ந்தவர். இவரது பூர்வீகம் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பரவூர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் படித்து பின்னர் நியூசிலாந்தில் குடிபெயர்ந்த இவர், வெலிங்டனில் உள்ள விக்டோரியா பல்கலை.,யில் இளங்கலை பட்டமும், வளர்ச்சி ஆய்வுகளில் முதுகலை பட்டமும் பெற்றார். படிப்பு முடித்த…
Read More









