உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி: இந்திய பிரதமர் மோடி

உலக நாடுகள் அனைத்துக்கும் குறைந்த விலையில், எளிதாக கிடைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி மற்றும் அதனை செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர், தலைமை அறிவியல் ஆலோசகர், மூத்த விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் இந்திய நிறுவனங்களுக்கு வாழ்த்துக்கள். அந்நிறுவனங்களின் முயற்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும். கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். பரிசோதனைகள் குறைந்த விலையில், முறையாக, துரிதமாக வழங்க வேண்டும்….

Read More

டொனால்டு டிரம்ப் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார் !!

டொனால்டு டிரம்ப் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார்  !!

அதிபர் டொனால்டு டிரம்ப், நன்றாக தேறிவிட்டதால், அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்’ என, வெள்ளை மாளிகை டாக்டர் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 74, அவரது மனைவி மெலானியா, 50, ஆகியோருக்கு, சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது.மெலனியா, வெள்ளை மாளிகையிலேயே தன்னை தனிமைபடுத்திக் கொண்டார். மேரிலாண்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில், அதிபர் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனையில், நான்கு நாட்கள் சிகிச்சை பெற்ற பின், சமீபத்தில், டிரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார். அன்று முதல், வெள்ளை மாளிகையிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.சமீபத்தில், ‘பாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘நான் நன்றாக இருக்கிறேன். இப்போதே பிராசார கூட்டங்களில் பங்கேற்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.இந்நிலையில், டிரம்ப் உடல்நிலை குறித்து,…

Read More

” கொரோனா பாதிப்பு கடவுள் தந்த வரம் ” – அமெரிக்க அதிபர் டிரம்ப்

” கொரோனா பாதிப்பு கடவுள் தந்த வரம் ” – அமெரிக்க அதிபர் டிரம்ப்

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கடந்த 1-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் டிரம்புக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால் அடுத்த நாளே வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிரம்ப் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். தனது உடல் நலம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது: எனக்கு கொரோனா…

Read More

கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள்… தைரியமாக இருங்கள் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள்… தைரியமாக இருங்கள் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் வரும் நவ., 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதா என்கிற ரீதியில் எதிர்க்கட்சிகள் விவாதித்தன. மருத்துவமனை பால்கனிக்கு வந்த டிரம்ப், தனக்கு கொரோனா ஏற்பட்டதும் 72 மணிநேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறினார். மேலும், ‘கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள். அனைவரும் தைரியமாக இருங்கள்’ என்றார். கொரோனாவுக்கு இடையிலும் டிரம்ப் தனது பிரச்சாரத்தை கைவிடாதது எதிர்க்கட்சிகளை வியக்க வைத்துள்ளது. ‘கொரோனா காலத்தில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது ஆபத்து என எனக்கு தெரியும். ஆனால் மக்களுக்கு சேவை ஆற்றுவது என்னுடைய கடமை. அதனால் என்னுடைய வேலையை துவங்கிவிட்டேன்….

Read More

கூகுளின் ஆதிக்கத்திற்கு எதிராக களமிறங்கும் இந்தியா !!

கூகுளின் ஆதிக்கத்திற்கு எதிராக களமிறங்கும் இந்தியா !!

கூகுள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை தடுக்க இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் ஒன்றாக செயல்பட திட்டமிட்டுள்ளன. அண்மையில் பேடிஎம் ஆப்., கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் இணைக்கப்பட்டது. இந்நிலையில் பிளேஸ்டோரில் இடம் பெற்றுள்ள கட்டணம் வசூலிக்கும் ஆப்கள் 30 சதவீதத்தை கமிஷனாக தர வேண்டும் என்ற கூகுளின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் சனியன்று நடத்திய கூட்டத்தில் கூகுளின் ஏகபோக கொள்கைக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன. பேடிஎம், இந்தியா மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்திய ஐடி நிறுவனங்களை ஒருங்கிணைந்து புதிய அமைப்பினை உருவாக்கும் திட்டத்தில் உள்ளன….

Read More

குழந்தைகளுக்கு கொரோனா; பள்ளிகள் திறப்பால் விபரீதம்

குழந்தைகளுக்கு கொரோனா; பள்ளிகள் திறப்பால் விபரீதம்

அமெரிக்காவில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால், கொரோனா வைரசால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில், கொரோனா பரவலை தடுக்க, மூடப்பட்ட பெரும்பாலான பள்ளிகள், கடந்த மாத துவக்கத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. அதிகமானோர் பலியான நியூயார்க் நகரில், இன்று, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டதால், அதிகமான குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஏப்ரலில், 2 சதவீதமாக இருந்த பாதிப்பு, தற்போது, 10 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, அமெரிக்க குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்து உள்ளது.மிசிசிபி மாகாணத்தில் தான், அதிக அளவில் பள்ளிக் குழந்தைகளும், ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு, ஜூலை மாதமே பள்ளிகள் திறக்கப்பட்டது தான், பாதிப்பு அதிகரிக்க காரணம். பள்ளி குழந்தைகள் முக…

Read More

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜோ பிடன் இன்று நேருக்கு நேர் விவாதம் !!

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜோ பிடன் இன்று நேருக்கு நேர் விவாதம் !!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையேயான, முதல் நேருக்கு நேர் விவாதம் இன்று நடக்க உள்ளது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலின்போது, தங்கள் கொள்கைகள், சாதனைகள், திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து, இரண்டு கட்சியின் வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதம் நடத்துவர். முதல் முறையாக, 1960, செப்., 26ல், ஜான் எப் கென்னடி மற்றும் ரிச்சர்ட் நிக்சான் இடையே இது போன்ற…

Read More

தடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி ரகசியமாக தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்யும் சைனா !!

தடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி ரகசியமாக தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்யும்  சைனா !!

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை, கட்டாயப்படுத்தி, ரகசியமாக, தன் நாட்டு குடிமக்களிடம் பரிசோதனை செய்வதாக, சீன அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், அதை சீனா மறுத்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவில், கடந்தாண்டு இறுதியில் துவங்கிய, கொரோனா வைரஸ் பரவல், உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. சீனாவில், 11 வகையான தடுப்பூசிகள் பல்வேறு கட்ட பரிசோதனையில் உள்ளன. அதில், மூன்று தடுப்பூசிகள், மூன்றாம் கட்டப் பரிசோதனையில் உள்ளன.பல நாடுகளில், தானாக முன்வந்து மக்கள், தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், சீனாவில், குறிப்பிட்ட சிலரை…

Read More

டிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது !!

டிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது !!

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரிசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு சந்தேகத்திற்கிடமான கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். கனடாவிலிருந்து அனுப்பப்பட்டதாக முகவரியிட்ட அந்த கடிதத்தில், ரிசின் என்ற கொடிய விஷப்பொருள் தடவப்பட்டிருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே, வழக்கமான சோதனையின்போது அந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உளவுத்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டது. அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நியூயார்க் – கனடா…

Read More

சீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் !!

சீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் !!

சீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மருந்து பொருட்கள், பூச்சி மருந்து தயாரிப்பு மற்றும் ரசாயனம் சார்ந்த தொழில்களுக்கு சீனாவில் இருந்து கெமிக்கல்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் சீனாவிலிருந்து 75 வகையான ரசாயனங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது எல்லைப் பிரச்னை காரணமாக சீனாவுடன் மோதல் போக்கு நிலவுவதால் ரசாயன தேவைகளுக்காக அந்நாட்டை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி அமைக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் உள்நாட்டு ரசாயன உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து உள்நாட்டில் ரசாயன உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக உற்பத்தி செலவில் 10 சதவீதத்தை ஊக்கத் தொகையாக வழங்கவும் இந்திய அரசு…

Read More
1 11 12 13 14 15 48