குழந்தைகள் மூலம் அரை நிர்வாண ஓவியம் – ரெஹனா பாத்திமா மீது வழக்கு பதிவு

குழந்தைகள் மூலம் அரை நிர்வாண ஓவியம் – ரெஹனா பாத்திமா மீது வழக்கு பதிவு

குழந்தைகள் மூலம் தன் உடலில் அரை நிர்வாண ஓவியம் வரைந்த குற்றத்திற்காக ரெஹனா பாத்திமா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரளாவை சேர்ந்தவர் ரெஹானாபாத்திமா.பெண் உரிமைகளுக்காக போராடுவதாக கூறி கொள்ளும் இவர் தன்னுடைய அதிரடி நடவடிக்கையால் பரபரப்பை உருவாக்கி உள்ளார். சபரி மலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியதை தொடர்ந்து சபரி மலைக்கு செல்ல முயன்று சர்ச்சையை உருவாக்கினார். இப்பிரச்னைக்காக 18 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இது போல பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு நடத்தி பரபரப்பை உருவாக்கி வருகிறார். தற்போது தன் இரண்டு (மகன், மகள்) குழந்தைகளை கொண்டு தன்னுடைய அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து…

Read More

கோவிட் -19 தொற்றை குணப்படுப்படுத்தும் ஆயுர்வேத மருந்து – பதஞ்சலி நிறுவனம்

கோவிட் -19 தொற்றை குணப்படுப்படுத்தும் ஆயுர்வேத மருந்து – பதஞ்சலி நிறுவனம்

பதஞ்சலி நிறுவனம் செவ்வாயன்று, ‘கொரோனில்’ மற்றும் ‘சுவாசரி’ என்னும் இரு மருந்துகளை வெளியிட்டு, கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என தெரிவித்தது. இந்நிலையில், கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்து குறித்த ஊடக செய்தி தங்களின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், மருந்து குறித்த விவரங்கள் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும், அதுவரை இந்த மருந்து குறித்த விளம்பரத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read More

புரி ஜகன்னாதர் ரத யாத்திரை !!

புரி ஜகன்னாதர் ரத யாத்திரை !!

ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜகன்னாதர் கோவிலில், ரத யாத்திரையை நடத்துவதற்கு, உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே திட்டமிட்டபடி, இன்று ரத யாத்திரை நடக்க உள்ளது. ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜகன்னாதர் கோவில் உலக புகழ் பெற்றது. இங்கு நடைபெறும் ரத யாத்திரையின்போது, லட்சக்கணக்கான மக்கள் குவிவர். நம் நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவர்.’கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த ஆண்டு ரத யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது ஒத்தி வைக்க உத்தரவிட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அதை விசாரித்த,…

Read More

சந்திர கிரஹணம் ஜூன் 5ஆம் தேதி நிகழ்கிறது – சனாதன தர்மம் கூறுவதென்ன ?

சந்திர கிரஹணம் ஜூன் 5ஆம் தேதி நிகழ்கிறது – சனாதன தர்மம் கூறுவதென்ன ?

இந்த முறை சந்திர கிரஹணம் ஆசிய, ஆஸ்திரேலியா, ஐரோபா, ஆப்பிரிக்க கண்டங்களில் தெரியும். மற்றவர்கள் மோ கிரஹண பரிகார பூஜையோ செய்ய தேவையில்லை !! உங்கள் இடத்தில் கிரகணம் தோன்றும் நேரத்திற்கு நீங்கள் உள்ளூர் விவரத்திற்கு குருமார்களிடம் கலந்தாலோசித்து அவர்களறிவுரையை பின்பற்றலாம் . சந்திர கிரகண நாளில் நாம் கிரகணம் தொடங்கியவுடன் குளிக்க வேண்டும் மற்றும் கிரகணம் முடிந்ததும் தர்பனம் செய்ய வேண்டும் .. கிரகணத்தின் போது சனாதன தர்மத்தைப் பின்பற்றும் நமது இந்துக்கள் கடைபிடிக்கும் சில பழக்கவழக்கங்கள் உள்ளன. மாதவிடக்காய் காலங்களில் பெண்கள் கிரகணக் குளியல் எடுக்க வேண்டும் .. கிரகணத்தின் இறுதி வரை நாம் தூங்கக்கூடாது, மந்திரங்களை முழக்கமிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள்…

Read More

குவியும் பாராட்டு – அழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ்

குவியும் பாராட்டு – அழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ்

கோல்கட்டாவில் பிறந்த குழந்தை பசியால் அழுதது. குழந்தையின் தாய் பால் கொடுக்க இயலாத நிலையில், நர்ஸ் ஒருவர் பால் கொடுத்து குழந்தையின் பசியை தீர்த்தார். இவரது மனிதாபிமானத்தை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த பெண்ணால் தன் குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் திடீரென இரவு நேரத்தில் குழந்தை பசியால் அழுதது. பொதுவாக இதுபோன்ற நிலைமைகளில் அந்த வார்டில் உள்ள மற்ற சில தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுத்து பசியாற்றுவர்….

Read More

மங்களூருவில் 20 துபாய் பயணிகளுக்கு கொரோனா

மங்களூருவில் 20 துபாய் பயணிகளுக்கு கொரோனா

துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மங்களூருக்கு வந்த பயணிகளில் கர்நாடகாவை சேர்ந்த 20 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களுக்கு முன் 179 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் மூலம் துபாயில் இருந்து மங்களூரு (கர்நாடகா) வந்தடைந்தது. மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் (Mangaluru International Airport) பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பாதுகாப்பு கருதி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்த பயணிகளில்…

Read More

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுமேலும் 3 பேர் உயிரிழப்பு !!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுமேலும்  3 பேர் உயிரிழப்பு !!

ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,204 ஆகவும், பலி எண்ணிக்கை 47 ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 412 ஆண்கள், 257 பெண்கள் ஆவர். இன்று மட்டும் 13,367 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் 74 வயது முதியவரும், சென்னையில் 59 வயது நபரும், திருவள்ளூர் 55 வயது நபரும் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 135 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த…

Read More

ஆர்சனிக் ஆல்பம் 30 – கொரோனாவிலிருந்து காத்து கொள்ள ஹோமியோபதி மருந்து

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளவும் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ‘ஆர்சனிக் ஆல்பம் 30′ என்ற ஹோமியோபதி மருந்தினை எடுத்துக்கொள்ள ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரை செய்கின்றனர் நாடு முழுவதும் கொரோனா பரவலால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படும் தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிக்காமல் தடுக்க ஆர்செனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தினை ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி தும்மல், இருமல், தொண்டை வலி, வறட்டு இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்….

Read More

தமிழகத்தில் மிக அதிகமாக ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா – சென்னையில் 138 பேர் பாதிப்பு

தமிழகத்தில் மிக அதிகமாக ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா – சென்னையில் 138 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகரமான சென்னையில் கொரோனாவின் வீரியம் சற்றும் குறையாமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி,  ”தமிழகத்தில் இன்று மட்டும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் மட்டும் இன்று  ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில்…

Read More

கோயில்களில் ஏழைகளுக்கு தொடர்ந்து அன்னதானம் !!

கோயில்களில்  ஏழைகளுக்கு தொடர்ந்து அன்னதானம் !!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மார்ச் 24ம் தேதி முதல் கோயில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், கோயில்களுக்கு வருவாய் பெருமளவு குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு கோயில்களிலும் ஏழைகளுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சென்னையில் ஸ்ரீ பார்த்தசாரதி கோயில், கபாலீஸ்வரர் கோயில், வடபழனி ஆண்டவர் கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் உண்டியல் வருமானம் பாதிப்பை சந்தித்துள்ளன. பக்தர்களின் காணிக்கையிலிருந்து அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஊரடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது….

Read More
1 16 17 18 19 20 35