இறக்கும் தருவாயில் சாலையில் கிடந்த 10 ஆயிரம் ஆதரவற்றோரை மீட்ட மனிதநேயம்: ரவுடியாக இருந்து சமூக சேவகரான கர்நாடக தமிழர் ஆட்டோ ராஜா
‘இன்னொரு மதர்தெரசா பிறக்கணும்; நாம் காத்திருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் மதர்தெரசாவாக மாறணும்.’ என்கிறார் கர்நாடகா வாழ் தமிழர் ஆட்டோ ராஜா (49). கடந்த 25 ஆண்டுகளில் இவர் பெங்களூரு சாலையோரத்தில் உணவு, உடை, பராமரிப்பு, ஆதரவு இல்லாமல் அழுகிய, புறக்கணிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய 10 ஆயிரம் பேரை மீட்டு பராமரித்துள்ளார். அவர்களுடைய கடைசி காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ வைத்து, கடைசி ஆசைகளை நிறைவேற்றி இறந்ததும் அடக்கம் செய்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி, ‘‘நீங்கள்தான் உண்மையான ஹீரோ’’ என கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர்கான், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி போன்றோர் அழைத்து கவுரவித்து விருதுகளை வழங்கி உள்ளனர்….
Read More









