மலையாள மக்களுக்காக உதகையில் ‘ஓணம் சந்தை’
நீலகிரி மாவட்டத்தில் வாழும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகை பொருட்களை வாங்க ‘ஓணம் சந்தை’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கணிசமான மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களை கட்டும். மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை, ரயில்வே துறையில் மலையாள மக்கள் அதிகம் பேர் பணிபுரிவதால், ஓணம் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறும். மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஓணம் நிகழ்ச்சிகள் ஒரு வாரத்துக்கு முன்னரே தொடங்கி விட்டது. உதகை கிரெசண்ட் கேசில் பள்ளி, குன்னூர் பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரிகளில் ஓணம் திருவிழாக்களை மாணவர்கள் நடத்தினர். விழாக்களில் பூக்களம் அமைத்து மாவேலி அரசரை மாணவ, மாணவியர் வரவேற்றனர். தொடர்ந்து, மாணவியர் மற்றும் ஆசிரியைகளை…
Read More








