மழை, வெள்ளத்தால் உருக்குலைந்த பாக்.,கிற்கு 2,800 கோடி டாலர் இழப்பு
பாகிஸ்தானில் சமீபத்தில் பெய்த மழையினால் காரணமாக 1,009 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய கணிப்பில் 2,800 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் ஜூன் மாத மத்திக்கு பிறகு, பருவநிலை மாற்றம் காரணமாக அதிகனமழை பெய்தது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது. வெள்ளம் காரணமாக 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரகணக்கானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்நாட்டில் வறுமை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. 90 லட்சம் முதல் 1.2 கோடி பேர் வரை வறுமைக்கு தள்ளப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 18 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை…
Read More









