‘2 மாதத்தில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்’; நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

‘2 மாதத்தில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்’; நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

ஆலந்தூர், கபாலி திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் காலா. இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 28-ந் தேதி மும்பை சென்றார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து ரஜினிகாந்த் நேற்று மதியம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மீண்டும் சந்திப்பேன் காலா படத்தின் படப்பிடிப்பு திருப்திகரமாக இருந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வருகிற 24-ந் தேதி மும்பை செல்ல இருக்கிறேன். இன்னும் 2 மாதங்களில் ரசிகர்களை மீண்டும் சந்திக்க உள்ளேன். இவ்வாறு…

Read More

சரக்கு சேவை வரியை குறைத்து சினிமாவை காப்பாற்றுங்கள்; கமல்ஹாசன் மீண்டும் வற்புறுத்தல்

சரக்கு சேவை வரியை குறைத்து சினிமாவை காப்பாற்றுங்கள்; கமல்ஹாசன் மீண்டும் வற்புறுத்தல்

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை அமுல்படுத்த மத்திய அரசு புதிதாக சரக்கு சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி) முறையை கொண்டு வந்து இருக்கிறது. அடுத்த மாதம் (ஜூலை) 1–ந்தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழி படங்களுக்கும் 28 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழ் திரைப்பட துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தென்னிந்திய வர்த்தசபையின் அவசர கூட்டம் சென்னையில் கூட்டப்பட்டு தமிழ் படங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை குறைக்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. வரியை குறைக்க வேண்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், நிருபர்களிடம் கூறும்போது,…

Read More

‘சங்கமித்ரா’ சரித்திர படத்தில் சுருதிஹாசனுக்கு பதில் நயன்தாரா?

‘சங்கமித்ரா’ சரித்திர படத்தில் சுருதிஹாசனுக்கு பதில் நயன்தாரா?

‘பாகுபலி–2’ படத்துக்கு பிறகு சரித்திர படங்கள் பக்கம் திரையுலகம் திரும்பி இருக்கிறது. சுந்தர்.சி. 8–ம் நூற்றாண்டு கால கட்டத்தை பின்னணியாக வைத்து ‘சங்கமித்ரா’ என்ற பெயரில் புதிய சரித்திர படத்தை டைரக்டு செய்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் ரூ.250 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் கதாநாயகர்களாக நடிக்க ஜெயம்ரவி, ஆர்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். கதாநாயகியாக இளவரசி வேடத்தில் நடிக்க சுருதிஹாசனை தேர்வு செய்தனர். இதற்காக அவர் வெளிநாட்டுக்கு சென்று பல மாதங்கள் வாள் சண்டை பயிற்சி எடுத்து திரும்பினார். பின்னர் ஜெயம்ரவி போர்க்கப்பலில் பயணிப்பதுபோன்றும் சுருதிஹாசன் வாளுடன் குதிரையில் பாய்வதுபோன்றும் முதல் தோற்ற படங்களை வெளியிட்டனர். சுருதிஹாசன் விலகல் பாகுபலி போன்று…

Read More

‘வேலையில்லா பட்டதாரி 2’ புது போஸ்டர் வெளியீடு: டீஸர் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது

‘வேலையில்லா பட்டதாரி 2’ புது போஸ்டர் வெளியீடு: டீஸர் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது

தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தின் டீஸர் ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இன்ஜினீயரிங் பட்டதாரியின் வேலை தேடும் அவஸ்தையையும், வேலையை தக்க வைத்துக்கொள்ள போராடும் முயற்சியையும் பதிவு செய்த படம் இது. தனுஷுக்கு வணிக ரீதியிலான வெற்றியைக் கொடுத்த விதத்திலும் ‘வேலையில்லா பட்டதாரி’க்கு முக்கியமான இடம் உண்டு. இது தனுஷின் 25-வது படமும் கூட. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘வேலையிட்டா பட்டதாரி 2’ படம் சவுந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர்…

Read More

‘கூட்டத்தில் ஒருத்தன்’ படம் ஜூலை 14-ம் தேதி வெளியீடு

‘கூட்டத்தில் ஒருத்தன்’ படம் ஜூலை 14-ம் தேதி வெளியீடு

‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியாகிறது. இதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், நாசர் நடித்துள்ள படம் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. படம் குறித்து இயக்குநர் ஞானவேல் கூறுகையில், ”பெரும்பான்மையான குடும்பங்களில் மூத்த குழந்தையையோ அல்லது இளைய குழந்தையையோ கொஞ்சுவார்கள். அவர்கள் அப்பா செல்லமாக, அம்மா செல்லமாகவோ இருப்பார்கள். ஆனால், இடையில் பிறந்த குழந்தை மீது பெரிதாக கவனம் இருக்காது. அப்படி இடையில் பிறந்த ஒருத்தன் இந்த உலகத்தை மாற்றி அமைக்கப் புறப்படுகிறான். நடு பெஞ்ச் மாணவர்களின் முக்கியத்துவத்தைக் கூறுவதே ‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதை” என்றார். ‘ரத்த சரித்திரம்’, ‘பயணம்’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதிய…

Read More

விருதுகள் வழங்கப்படுவது எப்படி?- அரவிந்த்சாமி விளாசல்

விருதுகள் வழங்கப்படுவது எப்படி?- அரவிந்த்சாமி விளாசல்

யார் விருது விழாவுக்கு செல்கிறார்களோ அவர்களே விருதைப் பெற வேண்டியதாக உள்ளது என்று அரவிந்த் சாமி காட்டமாக விமர்சித்துள்ளார். தமிழக நிலவரம், அரசியல் சூழல், நடப்புப் பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது ட்விட்டரில் தன் கருத்தை தெரிவித்து வருகிறார் நடிகர் அரவிந்த் சாமி. தற்போது விருதுகள் குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ”சில விருதுகள் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுவதில்லை. யார் விருது விழாவுக்கு செல்கிறார்களோ அவர்களே விருதைப் பெற வேண்டியதாக உள்ளது. இதனால் விருதுக்கு என் பெயர் பரிந்துரைக்கப்பட்டாலும், நான் வாக்குகளுக்காக என் நேரத்தை செலவழிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார். எந்த விருது வழங்கும் விழாவுக்காக இப்படி ட்வீட் செய்துள்ளார் என்பது குறித்து அரவிந்த்சாமி…

Read More

பொருட்செலவுள்ள படங்களில் பெரிய சுமைகள் இருக்காது – இயக்குநர் அஜய் ஞானமுத்து நேர்காணல்

பொருட்செலவுள்ள படங்களில் பெரிய சுமைகள் இருக்காது – இயக்குநர் அஜய் ஞானமுத்து நேர்காணல்

‘டிமாண்ட்டி காலனி’ மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அஜய் ஞானமுத்து, தற்போது ‘இமைக்கா நொடிகள்’ மூலம் மீண்டும் தன்னை நிரூபிக்கத் திரும்பியுள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ள நிலையில் அவரைச் சந்தித்தோம். ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் கதைக்களம் என்ன? சென்னையில் வசிக்கும் ஜோடி அதர்வா – ராஷி கண்ணா. பெங் களூருவில் இருக்கும் சிபிஐ அதி காரி நயன்தாரா. இவர்கள் இரு வருக்கும் தொலைபேசி வாயிலாக சவால் விடுகிறார் வில்லன் அனுராக் கஷ்யப். தொடர்ச்சியாகக் கொலை கள் செய்யும் சீரியல் கில்லர். அவர் எதற்காக இந்தக் கொலை களைச் செய்கிறார் என்ற தேடல் தான் கதை. இப்படத்தில் அனுராக் கஷ்யப் நடிக்கும் கதாபாத்திரத் தில் முதலில் கெளதம்…

Read More

சரத்குமார்- நெப்போலியன் மீண்டும் இணையும் ‘சென்னையில் ஒரு நாள் 2’

சரத்குமார்- நெப்போலியன் மீண்டும் இணையும் ‘சென்னையில் ஒரு நாள் 2’

‘சென்னையில் ஒரு நாள் -2’ படத்தில் சரத்குமாரும் நெப்போலியனும் இணைந்து நடிக்கின்றனர். சரத்குமாரும், நெப்போலியனும் இணைந்து நடித்த ‘தென்காசிப் பட்டணம்’, ‘ஐயா’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றவை. இந்நிலையில் இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கின்றனர். இப்படத்துக்கு ‘சென்னையில் ஒரு நாள் -2’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘டிராஃபிக்’ என்ற மலையாளப் படத்தின் மறு ஆக்கமாக தமிழில் ‘சென்னையில் ஒரு நாள்’ படம் உருவானது. சரத்குமார், சேரன், பிரசன்னா, பார்வதி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்த இப்படத்தை ஷாகித் காதர் இயக்கியிருந்தார். உறுப்புதானத்தை வலியுறுத்திய இந்தப் படத்தின் நேர்மையும், உண்மையும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை அறிமுக இயக்குநர்…

Read More

‘வட சென்னை’ அப்டேட்: விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர்

‘வட சென்னை’ அப்டேட்: விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் ‘வட சென்னை’ படத்தில், விஜய் சேதுபதி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் நடிகர், இயக்குநர் அமீர் நடிக்கவுள்ளார். ‘விசாரணை’ படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் ‘வட சென்னை’. 3 பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படம், வடசென்னையில் இருக்கும் ஒரு தாதாவின் 30 வருட வாழ்க்கையைச் சொல்லும் விதமாக உருவாகிறது. இதில் தனுஷ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ‘வட சென்னை’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாயின. அவரும் அதை உறுதிப்படுத்தினார். ஆனால் படப்பிடிப்பு தேதிகள் தனக்கு ஒத்து வராததால் விஜய் சேதுபதி விலகினார். தற்போது அந்தக் கதாபாத்திரத்தில், நடிகரும் இயக்குநருமான அமீர் நடிக்கவிருப்பதாக…

Read More

‘ஸ்கெட்ச்’ அப்டேட்: 85% படப்பிடிப்பு நிறைவு; செப். வெளியீடு

‘ஸ்கெட்ச்’ அப்டேட்: 85% படப்பிடிப்பு நிறைவு; செப். வெளியீடு

‘ஸ்கெட்ச்’ படத்தின் 85% படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும், செப்டம்பர் வெளியீடாக இருக்கும் என படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். ‘வாலு’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கி வருகிறார் விஜய் சந்தர். தமன்னா, ஸ்ரீமன், சூரி உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்து வருகிறார்கள். தமன் இசையமைத்து வரும் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘ஸ்கெட்ச்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் 85% படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும், விரைவில் சென்னையில் அரங்கம் அமைத்து பாடல் ஒன்றை படப்பிடிப்பு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். மேலும், இறுதிக்கட்டப் பணிகளை முடித்து செப்டம்பரில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டது…

Read More
1 19 20 21 22 23 32