சட்டப்படி இளையராஜா செய்தது சரியே: பாடலாசிரியர் மதன் கார்க்கி
சட்டப்படி இளையராஜா செய்தது சரிதான் என்று பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பாடியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்நிகழ்வு தமிழ் திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூகவலைத்தளத்தில் பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இளையராஜாவின் வக்கீல் நோட்டீஸுக்கு, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சட்டப்படி இளையராஜா செய்தது சரிதான். ஒரு பாடல் என்பது இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்குச் சொந்தமானதாகும். ஆனால் நட்பு ரீதியாகப் பார்த்தால், அது சரியில்லை. நோட்டீஸுக்கு பதிலாக ஒரு போன் அழைப்பு எல்லா விஷயங்களையும் சுமூகமாகத்…
Read More









