நாகார்ஜுன் இளைய மகன் திருமணம் ரத்தானதால் நடிகை சமந்தா அதிர்ச்சி

நாகார்ஜுன் இளைய மகன் திருமணம் ரத்தானதால் நடிகை சமந்தா அதிர்ச்சி

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனுக்கு நாக சைதன்யா, அகில் என்று இரண்டு மகன்கள். இவர்கள் இருவருமே தெலுங்கில் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அகிலுக்கும் ஐதராபாத்தில் தொழில் அதிபராக இருக்கும் ஜி.வி.கே. ரெட்டியின் பேத்தியும் பே‌ஷன் டிசைனருமான ஸ்ரேயா பூபாலுக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலை இரு வீட்டு பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு திருமண நிச்சயதார்த்தத்தையும் முடித்தார்கள். இத்தாலியில் திருமணத்தை நடத்த முடிவு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 700 பேரை அழைத்து செல்வதற்காக விமான டிக்கெட்டுகள், இத்தாலியில் நட்சத்திர ஓட்டலில் அறைகள் போன்றவற்றை முன்பதிவு செய்தனர். இந்த நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலிக்கும் தகவல் வெளியாகி அவர்கள் திருமண நிச்சயதார்த்தத்தையும் தடபுடலாக நடத்தி முடித்தார்கள். முதலில் அகில் திருமணத்தை…

Read More

சைவ உணவே எனது ஆரோக்கியத்திற்கு காரணம்: நடிகை சுருதி ஹாசன்

சைவ உணவே எனது ஆரோக்கியத்திற்கு காரணம்: நடிகை சுருதி ஹாசன்

நான் 4 மாதங்களாக சைவ உணவு சாப்பிட்டு வருகிறேன் என நடிகை சுருதி ஹாசன் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை சுருதி ஹாசன். தமிழில் 7ஆம் அறிவு, 3, பூஜை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  இவர் நடிப்பு தவிர்த்து பாடகி மற்றும் இசையமைப்பாளர் போன்ற பன்முக தன்மைகளை கொண்டவர். அவர் தனது டுவிட்டரில், கடந்த 4 மாதங்களாக சைவ உணவையே எடுத்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், இது எனது சிறந்த முடிவுகளில் ஒன்று.  சைவ உணவினை தழுவியது எனது ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.  அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். சைவ உணவுடன்,…

Read More

பாவனா கடத்தலில் நயன்தாரா டிரைவருக்கு தொடர்பா?

பாவனா கடத்தலில் நயன்தாரா டிரைவருக்கு தொடர்பா?

நடிகை பாவனா கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொச்சியில் தனது கார் டிரைவர் உள்ளிட்டோர் அடங்கிய கும்பலால் காரில் கடத்தப்பட்டு, பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணையில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் ரவுடிகளைத்தான் தங்களின் பாதுகாவலர்களாகவும், டிரைவராகவும் நியமித்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. முன்னணி நடிகையான நயன்தாராவிடம் சேது என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர்தான் நயன்தாராவுக்கு பாதுகாவலராகவும் உள்ளார். கடந்த 8 வருடங்களுக்கு முன் ஆலப்புழாவில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் 5 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள…

Read More

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிட தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிட தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தமிழ் படத் தயாரிபாளர் சங்க ேதர்தல் நடத்தும் அதிகாரியாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டார். பின்னர் ேதர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றார். இதில் நடிகர் விஷால் கொடுத்த விண்ணப்பத்தை பரிசீலித்தார். பின்னர் நடிகர் விஷால் மனுவை ஏற்பதாக நீதிபதி ராஜேஸ்வரன் அறிவித்தார். இதை எதிர்த்து  தயாரிப்பாளர் கேயார் மற்றும் கிஷோர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடத்த நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடிகர் விஷால் இந்த தேர்தலில் போட்டியிட…

Read More

என்னோடு விளையாடு திரைவிமர்சனம்

என்னோடு விளையாடு திரைவிமர்சனம்

டோரண்டோரீல்ஸ் ” -“ரேயான் ஸ்டுடியோஸ் ” படநிறுவனங்களின் தயாரிப்பில் , பரத் , கதிர், சாந்தினி , சஞ்சிதா ஷெட்டி ராதாரவி ,வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடிக்Nகஅருண் கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் குதிரை பந்தையசூதாட்ட கதைக்களத்தோடு., சூதாடாதீர்கள் .. சூதாட்டம்குடும்பத்திற்கு கேடு என்னும் மெஸேஜை வலியுறுத்திவந்திருக்கும் படம் தான் “என்னோடு விளையாடு.” கதைப்படி ,ஒரு கட்டுமான நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் பரத் .பொறுப்பில்லாமல் கம்பெனிக் காசை எடுத்தும் , எக்கச்சக்கமாக கடன் வாங்கியும் குதிரைரேஸில் பணத்தை இழக்கிறார். ஒரு கட்டத்தில் குதிரை பந்தயத்தில் உள்ளதகிடுதத்தங்கள் …பரத்திற்கு தெரிய வருகிறது .அதை அறிந்து குறிப்பிட்ட பந்தையம்ஒன்றில் சில கோடிகளை ஜெயிக்க நினைக்கிறார். இதற்காக பல லட்சங்கள் அவருக்குதேவைபடுகிறது ….

Read More

அரசியல் சூழல்: ட்விட்டரில் அரவிந்த்சாமி – மாதவன் அலசல்

அரசியல் சூழல்: ட்விட்டரில் அரவிந்த்சாமி – மாதவன் அலசல்

தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து ட்விட்டர் தளத்தில் அரவிந்த்சாமி மற்றும் மாதவன் அலசி விவாதித்து வருகிறார்கள். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் இன்று மிக முக்கியமான நாளாகும். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று அறிவித்து, 4 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் அரவிந்த்சாமி, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு “நமது காபந்து முதல்வர் இன்று அலுவலகம் சென்று மற்ற எம்.எல்.ஏக்களுக்கு உதாரணமாக திகழ வேண்டும் என விரும்புகிறேன். முதலில் மக்கள், பிறகுதான் அரசியல்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அரவிந்த்சாமியின் ட்வீட்டை மேற்கோளிட்டு மாதவன், “நம்பிக்கையையும், இயல்பு வாழ்க்கையும் பழைய மாதிரி…

Read More

இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்

இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்

`யாதுமாகி நின்றால்’ என்ற படத்தின் மூலம் நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். இப்படம் குறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம். பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். தமிழ்  சினிமாவில் நடிகையாக அறிமுகமான காயத்ரி ரகுராம் பின்னர் நடன இயக்குநராக தனது துறையை மாற்றிக் கொண்டார்.  எனினும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது `யாதுமாகி நின்றால்’ என்ற படத்தின் மூலம்  இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மையகதையாக கொண்ட படம் தான் `யாதுமாகி நின்றால்’.   பின்னனி…

Read More

சசிகலா சபதம்: கமல்ஹாசன் கிண்டல்?

சசிகலா சபதம்: கமல்ஹாசன் கிண்டல்?

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதை முன் னிட்டு சசிகலா நேற்று பெங்களூரு கோர்ட் டில் சரண் அடைந் தார். பெங்களூரு செல்வதற்கு முன்பாக ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அவர், சமாதியின் மீது கையை ஓங்கி அடித்து சபதம் செய்தார். இந்நிலையில் கமல்ஹாசன் நேற்று தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார் இப்படி: “திருடனு கூவிகினு ஜனம் தெர்திச்சுன்னா அவன் எஸ்கேப் ஆயிடணுமா வேணாவா? நின்னு நிதானமா …….. கூப்டமார்ரிஞ்சு? அன்னான்னு வச்சிகோ ஜனமா, நாயகமா?” என்று குறிப்பிட்டிருந்தார். பெங்களூரு சிறைக்கு செல்லும் முன் சசிகலா சபதம் செய்ததை கிண்டல் செய்தே அவர் இந்த கருத்தை பதிவிட்டதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் – சசிகலா ஆகியோரிடையே நடந்துவரும்…

Read More

தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது படபடப்பாக உள்ளது: காஜல் அகர்வால்

தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது படபடப்பாக உள்ளது: காஜல் அகர்வால்

தெலுங்கில் அறிமுகம் செய்த தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது படபடப்பாக இருக்கிறது என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். அது ஏன் என்று கீழே பார்க்கலாம்.   தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் தற்போது அஜித், விஜய் படங்களில் நடித்து  வருகிறார்.  காஜல் அகர்வால் 2007-ல் வெளியான தெலுங்கு ‘லட்சுமி கல்யாணம்’ படம் மூலம் தெலுங்கு பட உலகில் காலடி வைத்தார். இந்த  படத்தில் இவரை அறிமுகம் செய்து வைத்தவர் தெலுங்கு இயக்குனர் தேஜா.  காஜல் அடுத்து, ‘நேனே ராஜு நேனே மந்திரி’ படத்தில் ராணா ஜோடியாக நடிக்கிறார். இதை இயக்குபவர் தேஜா. 10  வருடங்களுக்குப் பிறகு இவருடைய இயக்கத்தில் காஜல்அகர்வால்…

Read More

சசிகலா போயஸ் கார்டன் திரும்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை: கவுதமி

சசிகலா போயஸ் கார்டன் திரும்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை: கவுதமி

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் இன்று மிக முக்கியமான நாளாகும். சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று அறிவித்து, 4 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். தீர்ப்புக்குப் பிறகு அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு, ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். ஜெயலலிதா மறைவிலிருந்தே தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் கவுதமி, தற்போது “சசிகலாவுக்கு, கூவத்தூரிலிருந்து பரப்பன அக்ரஹாரத்துக்கு நேரடியாக வழி இருக்கிறது. அவர் வேதா நிலையம் திரும்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை. ஜெயலலிதாவுக்கான நியாயம் வேண்டும்” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Read More
1 24 25 26 27 28 32