தாயகத்தில் முன்னாள் போராளிகளுக்கும் விதவைத் தாய்மாருக்கும் உதவக் கூடிய கரங்கள் விரிய வேண்டும்
கடந்தவாரம் எமதுகதிரோட்டம் உலகெங்கும் பரந்துவாழும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைச் சென்றடைந்தது என்பதற்குச் சான்றாக பல கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இவற்றை நாம் எமக்குக் கிடைத்த பாராட்டுக்களாக நாம் பார்க்கவில்லை. மாறாக ஒரு சமூகக்கடமையின் ஆரம்பப் புள்ளியில் நிற்கின்றோம் என்பது மட்டும் எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தஒரு தர்ம கைங்கரியத்தில் அவ்வாறான சிந்தனை உள்ளவர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள் ஆகும். கடந்த வாரத்தின் எமது கதிரோட்டத்தின் தலைப்பு “தனிநபர்களிடம் தங்கியுள்ளநிதிதாயகம் நோக்கிவிரியவேண்டும்”என்பதே. இந்தஆசிரிய தலையங்கத்தைப் படித்துவிட்டு பலர் மௌனமாகவே உள்ளார்கள். சிலர் நினைக்கலாம் “இது மிகவும் கடினமான வேலை”என்று. இன்னும் ஒருசாரார் நினைக்கலாம் “இது எமக்கு வேண்டாத வேலை” என்று….
Read More
